Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

தமுமுக மாநிலச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி சிறப்பு பேட்டி

மலேசிய நண்பன் » செய்திகள்

Wednesday, 17 September 2008

அரசியல் அவசியம் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்துள்ளோம் தமுமுக மாநிலச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி சிறப்பு பேட்டி

கோலாலம்பூர், செப். 16-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்(தமுமுக) முன்னணி செயல் வீரர்களில் ஒருவராக செயல்பட்டதன் வ௞ தமிழக மக்களால் பரவலாக அறி யப்பட்ட வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரும் தமுமுகவின் மாநிலச் செயலாளரும் ஑மக்கள் உரிமைஒ வார இத௞ன் ஆசிரியருமான தமீமூன் அன் சாரி சமீபத்தில் நண்பன் பணிமனைக்கு நல்லெண்ண வருகை மேற்கொண்டார். அவருடன் நடத்திய சந்திப்பிலிருந்து...

கே: தமுமுகவின் தற்போதைய செயல்பாடுகள் பற்றி...

ப: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பணிகள் 13 ஆண்டுகளை கடந்து 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த காலத்தில் நாங் கள் நடத்திய உரிமை போராட்டங்கள் மற்றும் சமூக நல்லிணக்க செயல்பாடு களால் தென்னிந்தியா மக்கள் அனைவ ராலும் அறியப்பட்ட ஒரு வலுவான சக்தியாக எங்களை உருவாக்கி இருக்கிறது.
தமிழக அரசாங்கத்தில் சிறுபான் மையினரான இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலை வாய்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு முதற்கட்டமாக 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித் துள்ளது. இது எங்களுக்கு கிடைத்த வரலாற்றுபூர்வ வெற்றியாகும். இதன் விளைவாக எங்கள் இயக்கத் திற்கு முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தி யில் பன்மடங்கு ஆதரவு பெருகியுள்ளது. இந்த நிலையில் தான் எங்களது அடுத்த கட்ட முயற்சியாக தமுமுக சார்பாக ஒரு அரசியல் கட்சியை மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

கே: கடந்த ஆண்டு மலேசிய வருகை யின் போது தாங்கள் நண்ப னுக்கு வழங்கிய பேட்டியில் நேரடி அரசியல் பற்றி எந்த சிந்தனையு மில்லை என்றீர்கள்... ஆனால் தற் போதைய உங்கள் நிலையில் மாற்றம் தெரிகிறதே?

ப: நாங்கள் அரசியல் தளத்திற்கு செல்வதில் ஆர்வமில்லாத ஒரு இயக்க மாக இருக்கத்தான் முனைப்புக் காட்டி வருகிறோம். ஆனால், முஸ்லிம் சமுதாய மக்களின் பலமான நிர்பந்தத்தின் காரணமாக இஸ்லாமியர்களுக்கான அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனை நாங்கள் விரும்பி போகவில்லை. சமுதாய மக்களின் நிர்பந்தத்தினால் இந்தப் புதிய முடிவை எடுத்துள்ளோம். அதேநேரம் தமுமுக ஒரு சமுதாய இயக்கமாக பொறுப்புடனும் வீரியத்து டனும் செயல்படும். தமுமுகவுடைய ஒரு அரசியல் பிரிவாக மட்டுமே புதிய கட்சி செயல்படும்.

கே: இஸ்லாமிய சமுதாயத்தை பிரதிநிதித்துதான் ஏற்கெனவே பல கட்சிகள் உள்ளனவே? புதிதாக நீங்கள் எதற்கு?

ப: கண்ணியமிக்க பெருந்தலைவர் காயிதேமில்லத் காலத்தில் தமிழகத்தில் 27 இஸ்லாமியர்கள் சட்டமன்ற உறுப் பினர்களாக இடம்பெற்றிருந்தனர். ஆனால், இன்றைய நிலை என்ன? அப்துல் சமது, அப்துல் லத்தீப் ஆகியோரின் மறைவுக்கு பிறகு இஸ்லாமியர்களின் அரசியல் பலம் வெற்றிடமாக இருக்கிறது. முஸ்லிம்களின் அரசியல் கட்சிகள் பலமிழந்து அதனுடைய பிரதிநிதிகள் கூட சமூக மக்களின் குரலை பிரதிநிதிக்காமல் திமுக உறுப்பினர்களாக சட்டசபையில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் நம்முடைய மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் தகுதி யான சமுதாய பிரதிநிதிகளை தேர்ந்து எடுத்து அனுப்ப வேண்டிய கடமையும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில் தமிழகத்தில் வலுவான சமுதாய இயக்கமாக இருக்கும் நாங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்பா விட்டால் வேறு யாரும் அவ்விடத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது.
நாங்கள் பாதைகளை மாற்றிக் கொள்ளவில்லை. பயணத்தை விரைவு படுத்த புதியபுதிய வாகனங்களை பயன் படுத்துகிறோம். சமுதயாப் பணிகள் எவ் வளவு அவசியமோ அதே அளவுக்கும் அரசியல் பணியும் அவசியம் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்துள்ளோம்.

கே: அரசியல் கட்சியாக உங் களது இலக்கு என்ன?

ப: நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று கூறவில்லை. அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது நாங்கள் தான் என்று சபதம் எதுவும் எடுக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் முஸ்லிம் சமுதாயத் தினர் 10 சதவிகிதம் இருக்கின்றனர். 25 சட்டமன்ற உறுப்பினர்களும், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மேயர் பதவி ஆகியவையே எங்களது உச்சக்கட்ட இலக்கு. எங்களுடைய உயரத்துக்கேற்ப எங்களது எல்லைகளை வரையறுத்துள்ளோம். இந்த அளவுக்குள் இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக் கையும் உறுதியும் எங்களிடம் உள்ளது.

கே: அரசியலில் வெற்றி பெற சமுதாய ஆதரவு மட்டும் போதுமா?

ப: நாங்கள் இஸ்லாமிய சமுதாயத்தை மட்டும் நம்பி அரசியலில் இறங்கவில்லை. தமிழகத்தில் எங்களைப் போன்ற மற் றொரு சிறுபான்மை இனமான கிறிஸ்து வர்கள் 10 சதவிகிதத்தினர் உள்ளனர். அவர் களின் ஆதரவும் எங்களுக்கு வலுவாக உள்ளது. அதுமட்டுமன்றி எங்களுடைய ரத்ததான சேவைகள், ஆம்புலன்ஸ் உதவிகள், கல்வி மற்றும் மனித நேய பணிகளால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக் கான மற்ற சமூக மக்களும் சகோதரர் களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

கே: தமுமுக என்ற இயக்கத்திற்கு கிடைத்த வெற்றிபோல் அரசியலில் எந்த அளவுக்கு வெற்றி பெறமுடியும்?

ப: நாங்கள் அரசியல் களத்தில் இறங்க போதுமான வகையில் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே நேரம் அரசியலில் வெற்றி தோல்வி மட்டுமே கணக்கில் கொள்ளக்கூடிய சாரசரி அரசியல் இயக்கமாக இருக்க மாட்டோ ம். கொள்கைகளையும் லட்சி யங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படக்கூடிய நாங்கள் எத்தகைய நிலை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு புயல் வேகத்தில் இயங்குவோம்.

கே: உங்களை ஒரு மதவாத கட்சி யாக முத்திரை குத்த வாய்ப்புள்ளதே?

ப: நாங்கள் சாதிய கட்சியோ மதவாத கட்சியோ இல்லை. சமூக நல்லிணக்கத்தைக் காப்போம் சம உரிமைகளைப் பெறுவோம் என்பதுதான் எங்களது குறிக்கோள்.
மதவெறி, சாதி வெறி, மொ௞ வெறி, இன வெறி போன்றவையெல்லாம் அரசி யலில் வ௞ப்பறியாக உள்ளது என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு. இந்தத் தவறுகளைத் தீயிட்டு கொளுத்தி விட்டு நெறி தவறாத மனிதர்களை உருவாக்க நினைப்பதுதான் எங்களின் அரசியலில் சரியான பணியாக இருக்கும்.

கே: மக்கள் முன்னேற்றக் கழகத் தின் துவக்க விழா எப்போது?

ப: அரசியல் கட்சியை முறையாக அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அப்பணி நிறைவு பெற்றவுடன் சென்னை யில் மிகப் பிரமாண்டமான மாநாட்டைக் கூட்டி கட்சியின் தொடக்க விழாவை நடத் துவதற்கு முனைப்பு காட்டி வருகிறோம்.

கே: தனித்து போட்டியா அல்லது கூட்டணியா?

ப: கூட்டணி என்பது தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாக அன்றைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்.

கே: மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் பற்றி உங்களது கருத்து?

ப: மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் நிலை மிக கவலைக்குரிய தாக உள்ளது. மலாய் சமூதத்திற்கும் உள்ளேயும் நுழைய முடியாமல், இந்திய சமூகத்திற்குள்ளும் நிற்க முடியாமல் திசை தெரியாத கப்பலாக தவித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
மலேசியாவை வளப்படுத்தியதில் நெறிப்படுத்தியதில் மலேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் 4 லட்சத்திற் கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம்களின் பங்கும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், இந்திய முஸ்லிம்கள் என்று சொல்லி கொண்டு நாடாளுமன்றத்திலோ, செனட் சபை யிலோ, சட்டமன்றத்திலோ, ஊராட்சி களிலோ பிரதிநிதிகள் இல்லை. இந்திய முஸ்லிம்களுக்கு என்று கோலாலம்பூர், கிள்ளான், பினாங்கு, ஈப்போ, ஜொகூர் பாரு மற்றும் பல இடங்களில் பள்ளி வாசல்கள் இருக்கின்றதே தவிர பள்ளிக்கூடங்கள் இல்லை. இதைப்பற்றி இந்திய முஸ்லிம் தலைவர்கள் மலேசிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
உணவகங்களும் மளிகைக்கடை களும் மட்டுமே வாழ்க்கையாக இருக் கக் கூடாது. ஒரு சமூகம் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் இருண்டு போய்விடும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். சின்ன சின்ன சச்சரவுகளை புறந்தள்ளிவிட்டு பொது ஒற்றுமையோடு சமுதாய பிரச்சினை களை கருத்தில் கொள்ளவேண்டும். மலேசியாவில் வசிக்கும் இந்திய முஸ் லிம்கள் தங்கள் தாய்நாடு மலேசியா தான் என்பதை மறந்து விடக்கூடாது என்றார் தமீமுன் அன்சாரி.

குவைத்தில் புதிய தமிழ் மாத இதழ் வெளியீட்டு விழா!

'நீதியின் குரல்'

The "Needhiyin Kural (Voice of Justice)" new tamil monthly magazine releasing program conducted on June 13, 2008 Friday @ 10:00am at Trichy (Flower) Restaurant, Mirqab, Kuwait.

The program was presided over by Parangi Pettai Moulavi Afzal-ul-Ulamaa A.B. Khaleel Ahmed Baaqavee M.A., PGDCA (General Secretary, K-Tic & Co-Editor, Pirai Newsletter, Kuwait) while welcome speech was made by Mr. Aruvikkavizar Anantha Ravi (Asst. Editor, Needhiyin Kural Magazine, Kuwait).

The new tamil magazine was released by Dr. Pal Manuwel (Professor, Kuwait University & Advisor, Needhiyin Kural Magazine, Kuwait) and magazine received by Dr. Anwar Batcha (Organizer, Kuwait Indian Union Muslim League (KIUML)), Mrs. Aani Fransis (Treasure, Tamil Tamizhosai Poet Association, Kuwait) and Mr. Thamizhosai Raawanan (Ex-Secretary, Tamizhosai Tamil Poet Association, Kuwait).

The appreciated speeches was delivered by Dr. Pal Manuwel (Professor, Kuwait University & Advisor, Needhiyin Kural Magazine, Kuwait) and magazine received by Dr. Anwar Batcha (Organizer, Kuwait Indian Union Muslim League (KIUML)), Mr. Thamizhosai Raawanan (Ex-Secretary, Tamil Tamizhosai Poet Association, Kuwait), Mr. Anbarasan (Secreatary, Thaiman Kalai Ilakkiya Peravai, Kuwait), Mr. A. Sahmsudeen (President, Muththamizh Mandram, Kuwait), Mr. Vidhya Sagar (Advisor, Needhiyin Kural Magazine, Kuwait) and Mr. Mubarak Razvi (Vise-President & Media Coordinator, Kuwait Indian Union Muslim League (KIUML) & Designer, Needhiyin Kural Magazine, Kuwait).

The vote of thanks delivered by Community Poet Vizhuppuram Shaji M.A., B.Ed., (Edotor, Needhiyin Kural Magazine, Kuwait). The program was concluded at 12.00 pm with lunch. The program was attended a large number of Tamil brothers, journalists and poets with their relatives and friends from various parts of Kuwait and also from various Tamil Associations.

For sending your valuables suggestions, articles and advises please mail to: villupuramshaji@gmail.com or call (+965) 7984308.

News: - Portonovo 'Aiman', Kuwait

இந்திய குண்டுவெடிப்புகளின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் - JUNIOR VIKATAN ARTICLE

இந்திய குண்டுவெடிப்புகளின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் - JUNIOR VIKATAN ARTICLE
நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கம் பல செயல்கள் பலரால் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், நாம் செய்யத் தவறிய அல்லது தவறாகச் செய்யும் ஒரு செயல் பலருடைய கண்டனத்துக்கு உள்ளாகிறது. குhல்பந்து விளையாட்டில் எதிரணியினர் போட மயலும் எத்தனையோ 'கோல்'களை ஒரு கீப்பர் எடுத்திருக்கலாம். ஆனால், அவர் தடுக்கத் தவறியதால் விழுந்த 'கோல்' மட்டுமே நம் நினைவில் வகிநிறது. ஆதைப் போலவே பயங்கரவாதத் தாக்குதல்களை காவல்துறை பலமுறை தடுத்திருக்கலாம். உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட இருந்த பயங்கர வாதிகளைக் கைது செய்திருக்கக்கூடும். ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தவுடன் அரசு தடுக்க தவறிவிட்டது என்ற எண்ணமே நம் அனைவருடைய மனதிலும் நிறைந்துவிடுகிறது.இந்த எண்ணம் சாதாரணமாக மக்கள் மனதில் எழுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் இதுபோன்ற துயரமான நிகழ்வுகளைகூட அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடிவிதில்லை.கடந்த மே மாதம் 13-ம் நாள் ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறிந்து பாரதிய ஜனதா கட்சி எழுப்பிய கண்டனங்களில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டும் இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பலவீனமான அரசு என்றும், சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியைக் கருத்தில்கொண்டு பயங்கரவாதிகளுக்கு சதிராக உறுதியாக நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு தயங்குகிறது என்றும் மத்திய அரசு மீது குற்ற்ச்சாட்டுகள் எழுந்தன. முணி;டும் மீண்டும் ஒரே புகாரைச் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் அதை உண்மையென நம்பிவிடுவார்கள் என்று பீ.ஜெ.பி கருதுகிறது போலிருக்கிறது. போடா சட்டம் அமலில் இருந்த போதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன என்பதை இந்திய மக்கள் மறந்து பொயிருப்பார்கள் என்று அந்தக் கட்சித் தலைமை நினைக்கக்கூடும். இப்பொது கர்நாடக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பீ.ஜெ.பி. பெற்றிருக்கும் நிலையைப் பார்க்கும்போது அந்தக் குற்றச்சாட்டும்கூட கர்நாடக மக்கள் மத்தியல் எதிரொலித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.இந்தியவில் நடக்கும் பயங்கரவாத செயல்களில் அப்பாவி மக்கள் குறி வைக்கப்படுகிறார்கள் நம்முடைய மக்கள் கோயில்களிலும் மசூதிகளிலும் இறக்கிறார்கள். பேருந்துகளிலும் தொடர்வண்டிகளிலும் பயணம் செய்து கொண்டிலுக்கும்போதே மடிகிறார்கள். கடைவீதிகளிலும் பொழுதுபோக்குப் பூங்காகளிலும் சிதறி சின்னா பின்னமாகிறார்கள். எதற்கா சாகிறோம் என்று அறியக்கூட அவகாசம் இல்லாமல் அப்பாவிகளுடைய உயிர் பறிக்கப்பட்டு விடுகிறது. இவர்களில் பலர் அவர்களுடைய குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருக்கலாம். இவர்களுடைய மறைவுக்குப் பிறகு அந்தக் குடும்பங்கள் பலவிதமான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகலாம். ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் சிலர் இந்தத் துயரங்களில் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள்.
ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கம் ஏதாவது ஓர் அமைப்புகாரணம் என்ற முடிவுக்கு வருகிறோம். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று யாராவது சிலர் கைது செய்யப்படுகிறார்கள்.மோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இருந்தும், அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி என்றால், முதலில் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கொல்லல்ட்டவர்கள் தவிர, புதிதுபுதிதாக பயங்கரவாத இயக்கங்களில் உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருளாகிறது அல்லது கைது செய்யப்பட்டவர்களோ,கொல்லப்பட்டவர்களோ முந்தைய சம்பவத்துடன் தொடர்பில்லாதவர்கள் என்று அர்த்தமாகிறது.

இந்த பயங்கரவாத நிகழ்வுகளால் அரசியல் ஆதாயம் யாருக்குக் கிடைக்கிறது? இந்த சம்பவங்கள் நடைபெறவேண்டிய நாளைத் தீர்மானிப்பது யார்? அதில் ஏதேனும் அரசியல் இருக்கிறதா? ஒவ்வொரு பயங்கராவாத நிகழ்வும் வேறு ஏதாவது சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கிறதா? இவை எதுவும் அர்த்தம் இல்லாத கேள்விகளாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒன்றிரண்டு கேள்விகளுக்கான விடைகளில் ஏதேனும் உண்மை ஒட்டிக் கொண்டிருக்கலாம். இந்த வினாக்கள் பலருடைய சிந்தனையில் எழுந்திருக்கக்கூடும். இருந்தும், தொடர்ந்து அவற்றுக்கான விடை தேடும் பணியில் ஒருவர் ஈடுபட முடியாமல் அவருடைய அன்றாடப் பணிகள் அவரை ஆக்கிரமித்திருக்கலாம்.அண்மையில் தற்செயலாக இணையதளத்தில் படிக்க நேர்ந்த ஒரு ஆங்கிலக்கட்டுரையில் இடம் பெற்றிருந்த சில தகவல்கள் இந்தக் கேள்விகளில் அர்த்தம் இல்லாமல் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தின.சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் சர்வதேச பின்னணி இருக்கக்கூடும். தேர்தல் மூலம் பாக்கிஸ்தானில் அமைந்த அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மே 20-22 தேதிகளில் சந்திக்க இருந்தார். இரு நாடுகளுக்கு இடையில் நல்லுறவு ஏற்பட்டால் யாருக்கு இழப்பு ஏற்படுமோ, அவர்களே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடும்.

1948ம் வருடம் மே 14 அன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி உலகமெங்கும் இஸ்லாமியர்களும் பாலஸ்தீன ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அந்த செய்தியபை; பின்னுக்குத் தள்ளி 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற செய்தி உலக ஊடகங்களில் இடம் பெறும் வகையில் ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்திருக்கின்றன. லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்க ஜூலை 11, 2006 அன்று மும்பையில் தொடர்வண்டியில் குண்டுகள் வெடித்தன.
மேலும் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தலுக்கான வாக்கப்பதிவு நடக்க இருந்தது இதேபோல, குஜராத் தேர்தல் வாக்கப் பதிவுக்கு இரு மாதங்களுக்கு முன்தாக அஷhதாம் கோயிலில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். 2005, மே 2ம் நாள் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்ததையொட்டி மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் இந்தியாவில் நடந்தன. அதற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு வாரணாசியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.
இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த எதிர்ப்பு அதிகமாக இருந்த கடந்த ஆண்டில் ஹைதராபாத் பூங்காவில் குண்டுகள் வெடித்தன என்று அந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பல நாடுகளில் தங்களுடைய பங்காளிகளுக்கு அரசியல் அதாயம் கிடைக்கும் செயல்களைச் செய்வார்கள் என்று அரசியல் தளத்தில் நிலவும் கருத்துக்கு வலுவூட்டுகிற வகையில் அந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் இருந்தது.இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா அல்லது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குதம் முடிச்சுப் போடுவது போல் இட்டுக்கட்டி சொல்லப்படும் அரசியல் வாதங்களா என்பதை நம்மைப்போல சாதாரண மக்களால் அறிந்துகொள்ள முடியாது. அதிகாரம் நிறைந்த ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளும்தான் இதற்கான முன் முயற்சியை எடுக்கவேண்டும். அவர்களால்கூட கண்டுபிடித்து நிரூபிக்க முடியாத வகையில் செயல்படும் வல்லமை சர்வதேச பயங்காரவாதிகளுக்கு ஒருவேளை இருக்கக்கூடும். அந்தந்தப் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு இயக்கத்தின் மூலம் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வலிமை அவர்களுக்கு இருக்கலாம்.இந்நிலையில் இந்தியா முழுவதும் நடந்த பல பயங்கரவாத நிகழ்வுகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்தி விசாரிப்பதற்கு சுதந்திரமான ஓர் ஆணையத்தை இந்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக அறிய முடிகிறது. எப்பொதும் சொல்லப்படும் இந்து-முஸ்லிம், இந்திய – பாக்கிஸ்தான் போன்ற முரண்பாடுகளையும் தாண்டி வேறு யாருடைய கரங்களாவது இந்திய மக்களை பலிவாங்கும் பயங்கரவாதச் செயல்களில் இருக்கிறதா என்பதை மக்களுக்கு அறியத்தர வேண்டும்.நன்றி : vikadan
http://www.vikatan.com/jv/2008/jun/01062008/jv0503.asp
Posted By முகவைத்தமிழன் to தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

உலக நாடுகளை கவரும் "அல் ஜஸீரா" தொலைக்காட்சி

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

உலக நாடுகளை கவரும் "அல் ஜஸீரா" தொலைக்காட்சி
நிறுவன சேவைகள்


ஆதிக்கசக்திகள் ஊடகத்துறைக்குள் புகுந்து எந்தெந்த அளவில் பொய்களை புகுத்த வேண்டுமோ அந்தெந்த அளவில் பொய் செய்திகளை புகுத்தி மக்களிடம் உண்மைகளை மறைத்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இஸ்லாத்திற்கு ஏதிராக ஆதிக்கச்சக்திகள் பரப்பி விடும் பல பொய் செய்திகள் உலக மக்களிடம் எடுபடவில்லை. பொய்ப்பிரச்சாரங்கள், பொய் செய்திகள், நேர் ஏதிரான கருத்துக்களை மட்டுமே பரப்பி வரும் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல ஆதிக்கச்சக்திகள் சொல்லும் செய்திகளை மட்டுமே ஒளி ஒலிப்பரப்பி வருகின்றன.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பாக, டோஹா கத்தார் நாட்டில் துவங்கப்பட்ட “அல்ஜஸீரா” தொலைக்காட்சி நிறுவனமானது மற்ற தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முன்னோடியாக விளக்குகிறது என்றால் மிகையாகாது. ஆரம்பத்தில் அரேபிய மொழியில் மட்டுமே துவங்கப்பட்ட இதன் செய்தி நிகழ்ச்சிகளானது அதிகமான மக்களை கவர்ந்து விட்டது.

ஈராக் ஆக்கிரப்புக்குப்பின் அந்நாட்டில் ஆதிக்கக்சக்திகள் என்ன கொடுமைகளை நடத்தின, ஆப்கானிஸ்தான் நாட்டில் எத்தகைய இன்னல்களை அங்குள்ள பொது மக்கள் அனுபவித்தனர். பாலஸ்தீன நாட்டின் உண்மை நிலை என்ன போன்ற தகவல்களை உடனுக்குடன் படம் பிடித்து உண்மையான தகவல்களை மக்களிடம் தரும் பணியினை செம்மையாக செய்து வருகிறது. ஆகையால் உலக மக்களின் நன் மதிப்பினை அல்ஜஸீரா தொலைக்காட்சியானது பெற்றுக்கொண்டு வருகிறது. அதனை பிடிக்காத ஆதிக்கச்சக்திகள் இந்நிறுவனத்திற்கு ஏதிராக பல எதிர்ப்புகளை காட்டியது. அந்த எதிர்ப்புக்கிடையே அல்ஜஸீராவின் வளாச்சியானது, மேன்மேலும் பரவி தற்போது ஆங்கில மொழியில் தன்னுடைய ஒலி ஒளிப்பரப்பினை அமெரிக்கா நாட்டில் துவங்கி விட்டது. BBC – British Broad Casting நிறுவனம் மற்றும் CNN – Net work போன்ற ஆதிக்கச்சக்திகளின் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திகளை விட அல் ஜஸீராவின் செய்திகளை மக்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள் என்றால் மிகையாகாது.

மே 14.5.2008 புதன் கிழமையன்று, அமெரிக்க நாட்டில் அல் ஜஸீரா தொலைக்காட்சியின் சேவையானது துவங்கபட்டது. அதனுடைய ஆங்கில சேவையின் பொது இயக்குனர் டோனி புர்மன் (Tony Burman – Managing Director of Al Jazeera’s English languages service) அவர்கள் குறிப்பிடுகையில் (இவர் இதற்கு முன்பாக கனடா தகவல் மையத்தின் இயக்குராக பணி புரிந்து ஜீலை 2007 வேலையிலிருந்து நீக்கினார்) அமெரிக்காவில் DISH Net work மூலமாக , இந்நிகழ்ச்சிகளை காணலாம். மற்றும் 160 மில்லியன் இல்லங்களை தேடி அல் ஜஸீரா நிகழ்ச்சியானது செல்ல வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டார். அமெரிக்காவின் பல பகுதிகளிலும் மற்றும் வடக்கு அமெரிக்கா நாடுகளிலும் இதனுடைய ஒலி ஒளிப்பரப்பானது துவங்க பட உள்ளது. அத்துடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரான்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து போர்ச்சுகல் மற்றும் ஹங்கெரி நாடுகளிலும் சேவைகள் துவங்கப்பட உள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான வியாட்நாம் நாட்டில் VTC என்ற நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய ஆங்கில சேவையினை அங்கு செய்து வருகிறது. சிஙகப்பூர் நாட்டில் SINGTEL என்ற நிறுவனத்துடன் இணைந்து அங்கு சேவையினை செய்து வருகிறது. மற்றும் ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அல் ஜஸீரா ஆங்கில சேவையானது துவங்கப்பட்டு விட்டது. அல் ஜஸீராவின் அலை வரிசையின் சேவையானது, பிஜி, மாலத்தீவு, மால்டா, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் சேவையானது உள்ளது.

இணையத்தளம் வாயிலாக மக்களுக்கு உண்மையான செய்திகளை You Tube Video Clip – Sharing site மூலமாக வழங்குகிறது. முதல் ஆண்டு துவங்கத்திலேயே, 21 மில்லியன் மக்கள் இந்த இணையத்தளம் மூலமாக செய்திகளை பார்த்து இருக்கிறார்கள் என்ற தகவலை அல் ஜஸீரா செய்திக்குறிப்பானது கூறுகிறது.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்