த.மு.மு.க கலந்தாய்வு கூட்டம்

அரபு அமீரகம் - ரசல் கைமா வில் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி இரவு 9.30 அளவில்... அல்லாஹ் நாடினால்... "தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் - மண்டல நிருவாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் கிளை பொதுக்கூட்டம்" நடைபெற இருக்கிறது,
மேலும் விபரங்களுக்கு.. 050 1657853 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

அபுதாபியில் அய்மான் சங்கம் மூலம் ‌'சமுதாய கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கம்'

அன்புள்ள சகோதரர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்.
அபுதாபியில் அய்மான் சங்கம் மூலம் ‌'சமுதாய கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கம்' ஏற்பாடு செய்யப்பட்டு கவிக்கோ அப்துல் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்க‌த்தின் நோக்கமாக சமூகம் ஆற்றவேண்டிய பணிகள் பற்றி கவிக்கோ எழுதிய சிறிய நூல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், முஹ‌ல்லா மற்றும் ஊர் ஜமாத்துக்கள் பைத்துல்மால் ஏற்படுத்தும்படியும் வலியுருத்தப்பட்டது. பைத்துல்மால் ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு அய்மான் சங்கம் தகுந்த ஆலோசனைகளையும், அதற்கான வழிமுறைகளையும் தர முன் வந்துள்ளது. விபரம் வேண்டுவோர், கீழ்கண்ட நபர்களை தொடர்புக்கொள்ளவும்:
Janab A. Shahul Hameed, (Adirampattinam), 050-7824129, ashahul@gmail.com
Janab M.K. Mubarak Ali, (Devadanapatti), 050-7523755, mua.ad@adia.ae
Janab S.A.C. Hameed, (Kayalpattinam), 050-6212569, hameedsac@hotmail.com
Janab Mohamed Iqbal, (Eravanchery), 050-3162356, iqbal@alpha.ae
அய்மான் சங்கம்,
அபுதாபி

இஸ்லாமுக்கு மாறினார் மைக்கேல் ஜாக்சன்-பஹ்ரைனில் செட்டிலாகிறார்

லாஸ் ஏஞ்செலஸ்: பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார். தனது பெயரையும் மிகயீல் எனவும் அவர் மாற்றி விட்டார்.

பனோராமா என்ற இதழின் இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.. தான் இஸ்லாமின் ஐந்து கடமைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், பெயரை மிகயீல் என மாற்றிக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது மத மாற்றத்தை அறிவிப்பேன் எனவும் ஜாக்சன் இந்த இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பஹ்ரைனில் செட்டில் ஆகிறார்:

மேலம் விரைவில் பஹ்ரைனுக்குப் போய் ஜாக்சன் செட்டிலாகப் போவதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே அவர் செயற்கைத் தீவு ஒன்றில் இடம் வாங்கிப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

தனது மத மாற்றம் குறித்து நெருக்கமானவர்களிடம் ஜாக்சன் பேசுகையில், எனது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு சரியான மதமாக இஸ்லாம் உள்ளது. யூதர்கள் எல்லாம் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் எனக் கூறினாராம் ஜாக்சன். தொடர்ந்து ஜாக்சன் கூறுகையில், இந்த அட்டைப் பூச்சிகளால் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். யூதர்கள் எல்லாம் நிறைய சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரிய வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள், கார்கள், வசதிகள் என சந்தோஷமாக இருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களின் சதி செயலால் கிடைப்பவை..

விரைவில் எனது ஸ்டுடியோவையும், சொத்துக்களையும் அமெரிக்காவிலிருந்து பஹ்ரைனுக்கு மாற்றிக் கொள்ளப் போகிறேன். அமெரிக்காவில் இதுவரை எனக்குக் கிடைக்காத சுதந்திரம் பஹ்ரைனில் கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜாக்சன்.

சமீபத்தில் லாஸ் ஏஞ்செலஸில் உள்ள தனது நண்பரின் வீட்டில், குரான் முன்பு தான் இஸ்லாமில் நம்பி்ககை வைத்துள்ளதாக சத்தியம் செய்தாராம் ஜாக்சன். அங்குதான் அவர் முறைப்படி இஸ்லாமியராகவும் மாறினார் என்று கூறப்படுகிறது.

எளிமையாக நடந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு இமாம் கலந்து கொண்டுள்ளார். தரையில்,விரிக்கப்பட்டிருந்த துணியில், தலையில் தொப்பியோடு ஜாக்சன் அமர்ந்திருக்க, அவருக்கு இஸ்லாம் மத மார்க்கப்படி மத மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஷேக் போட்ட வழக்கு:

இதற்கிடையே, பஹ்ரைன் இளவரசர் அப்துல்லா அல் கலீபா ஜாக்சன் மீது லண்டன் கோர்ட்டில் தொடர்ந்துள்ள ஒரு வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதில் ஜாக்சன் ஆஜராக வேண்டும். இந்த நிலையில் அவரது மத மாற்ற செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் அவர் பஹ்ரைனில் குடியேறப் போவதாகவம் அந்த செய்தி கூறுவது முக்கியத்துவம் வாய்ந்தது.

ரெக்கார்டிங் காண்டிராக்டை ஜாக்சன் மீறியதாக பஹ்ரைன் இளவரசர் லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Photobucket Photobucket

ஐபியால் உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்!

கேரளா-கஷ்மீர், ஐபி மற்றும் புலிவால்!

.பி!

* நம் நாட்டின் எல்லைப்புறப் பாதுகாப்புக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா?

* புதிதாகப் பதவியேற்கும் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பின்னணியில் ஐயத்திற்கிடமாக ஏதும் இருக்கிறதா?

* முக்கிய அரசியல் தலைவர்களது பாதுகாப்புக்கு பங்கம் விளையக் கூடிய சாத்தியம் நிலவுகிறதா?

* உள்நாட்டில் தீவிரவாதம்/குழப்பம் உருவாகக் கூடிய சாத்தியமுள்ள இடங்கள், சூழ்நிலைகள் யாவை?

ஆகியவை குறித்துத் தகவல்கள் சேகரிப்பது ஐபி என்று சுருக்கி அழைக்கப் படும் இண்டெலிஜென்ஸ் ப்யூரோ (Intelligence Bureau) ஏஜென்ஸியின் வெளிப்படையான நடவடிக்கைகளாகும்.

ஆனால், இந்திய உளவுத்துறைக்குத் தகவல் சேகரித்து அனுப்பும் நிறுவனமான இந்த இரண்டெழுத்து நினைத்தால் தனியொரு மனிதனுடைய வாழ்க்கையைத் தடம் புரள வைக்கலாம்; வளர்ந்து வரும் ஓர் அமைப்பு/கட்சியை இரண்டாக உடைக்கலாம்; மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் ஆட்சியைக் கலைத்து விடலாம்; இல்லாத ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்து, அதுதான் இயல்பான உண்மை என்பதுபோல் மக்கள் மத்தியில் உலா விடலாம். இவற்றுள் எதையும் யாரும் கேள்வி கேட்க முடியாது; ஏனெனில் இவற்றையெல்லாம் செய்வது யார் என்று வெளிப்படையாகத் தெரிந்து கொள்வது அத்துணை எளிதன்று.

இன்றைக்கு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில் அடக்கி வாசிக்கும் முதல்வர் கருணாநிதியின் தி.மு.க. அரசு 1990இல் கலைக்கப் பட்டதன் பின்னணியில் இருந்தது ஐபிதான். அனைத்து அரசு இயந்திரங்களையும் கையில் வைத்துக் கொண்டு அன்றைக்கு(ம்) இயக்கிக் கொண்டு முதல்வர் பதவியிலிருந்த கருணாநிதிக்கே அப்போது இந்த உண்மை தெரியாது!

அரசியல் கட்சிகள், அதீத வளர்ச்சியைப் பெறும் சமுதாய அமைப்புகள் அடிக்கடி உடைகின்ற செய்தியைப் படிக்கும்போது, தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்றுதான் சாதாரண மக்கள் நினைப்பார்கள். ஆனால், அத்தனை கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கும் கைங்கரியத்தை ஐபி செய்யும் இரகசியம் வெளியே யாருக்கும் தெரியாது. உயர் மட்டத் தலைவர்கள் காதில் ஊதப் படும் செய்திகளை உருவாக்குவது மட்டுமின்றி, 'ஆசிரியருக்குக் கடிதம்' எழுதுவதுவரை அத்தனை சேவை(!)களையும் செய்பவர்கள் ஐபியின் ஐப்பீஎஸ் ஆஃபிஸர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஐபி உருவாக்குவது போலிக் கருத்துருவாக்கங்கள் மட்டுமல்ல; போலித் தீவிரவாதிகளையும்தான் என்பதே சான்றுகளால் நிறுவப் பட்ட இத்தலையங்கத்தின் கரு. அது, இறுதியில் சொல்லப் பட்டுள்ளது. ஐபி என்ற புலிவாலைப் பிடித்தவர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் கொஞ்சம் கேரளாவும் காஷ்மீரும் ...

***

"கஷ்மீரில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் மலையாளிகளும் அடக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அரசும் காவல்துறையும் கேரளத்தில் நடத்திக் கொண்டிருக்கும் காட்டு தர்பார், முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியாகும்" எனப் பிரபல கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தேஜஸ் மலையாள நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். "இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுக்கப் பட்டவர்களாக காண்பிக்க வேண்டும் என்பதே அவர்களது இலட்சியம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நெருங்கி வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலாபம் அடைய இந்த என்கவுண்டரைப் பயன் படுத்திக் கொள்வதற்கு இடதுசாரிகளும் சங் பரிவாரமும் முயல்கின்றன. கஷ்மீரில் தீவிரவாதச் செயல்பாடுகளுக்காகச் சென்றவர்களுள் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வதற்குக் கூச்சப் படாத கொச்சியிலுள்ள கிரிமினல் குண்டர் குழுவில் இருந்த சிலரும் அடக்கம் என்பதே தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவல்களாகும். இதிலிருந்து தெளிவான திட்டத்துடன் பணம் கொடுத்து, ஏதோ ஓர் ஏஜன்ஸி குற்றப்பின்னணியுடைய மலையாளி இளைஞர்களைத் தீவிரவாதச் செயல்பாடுகளுக்காக உருவாக்குகின்றது என்பது தெளிவாகின்றது.

இந்த ஏஜன்ஸி, அரசின் ஐபியோ சங் பரிவார தனி அமைப்புகளோ காஷ்மீர் அமைப்புகளோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதுமுள்ள நல்லெண்ணத்தைத் தகர்த்தால் அதன் பலனை அடைந்து கொள்வது ஆர்.எஸ்.எஸ்ஸாகும். முஸ்லிம்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்குவதே இவர்களின் இலட்சியமாகும். இக்காரணத்தினாலேயே இச்சம்பவங்களின் பின்னணியில் செயல்படுபவர்களாக நான் அவர்களைச் சந்தேகிக்கிறேன்.

இந்தியாவில் ஐபியே நேரடியாகக் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது விசாரணைகளில் தெளிவாகியுள்ளது. ஜாமிஆ சம்பவத்தில் காவல்துறையின் பொய்முகம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே?.

'ஃபாயிஸின் தாய் தேச விரோதியான மகனின் உடலைக்கூடப் பார்க்க மறுத்ததைப் பலரும் பெரிய தேசப்பற்றாக உயர்த்திக் காட்டுகின்றனர். பிறந்த ஊரில் இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டிய கட்டாயத்திலுள்ள எளிய தாயொருத்தி, நிர்பந்திக்கப் பட்டச் சூழலில் கூறிய வாசகங்களாகும் அவை. கஷ்டப்பட்டுப் பெற்ற எந்த ஒரு தாயும் தன் மகனைப் பற்றி மனப்பூர்வமாக இவ்விதம் கூறமாட்டாள்.

நேற்று வரை கிறிஸ்தவனாகவும் ரவுடியாகவும் வாழ்க்கை நடத்திய வர்கீஸ், திடீரென யாசிராக மாறி கஷ்மீரில் கொல்லப்பட்ட உடன், அதன் முழுப் பொறுப்பையும் இஸ்லாம் ஏற்றெடுக்க வேண்டும் எனக் கூறுவது சரியல்ல. கொச்சியில் தம்மனம் ஷாஜி உட்பட எல்லா குண்டர்களும் கஷ்மீரில் என்றல்ல, எங்கு போய்க் கொல்லப்பட்டாலும் மக்களிடையே எவ்வித எதிர்ப்புகளும் உருவாகப் போவதில்லை.

கிரிமினல்களை மதம் மாற்றி, தீவிரவாதச் செயல்பாடுகளில் பங்கு கொள்ள வைத்து, ஒரு மதத்துக்குக் களங்கம் உண்டாக்குவதற்கானக் கூட்டுசதி வரை நடக்கலாம் என நான் சந்தேகப் படுகிறேன். காவல்துறையும் ஊடகங்களும் கூறுவது எதையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. காவல்துறையும் ஊடகங்களும், "மஅதனி சிறையிலிருந்து வெளியானால் நாட்டில் கலவரம் உருவாகும்" என அச்சுறுத்தி வந்தனர். பின்னர் அது என்ன ஆனது?" என்று பாலசந்திரன் கேள்வி எழுப்பினார்.

***

"கஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட கேரள முஸ்லிம்களை, காஷ்மீருக்குக் கடத்திக் கொண்டு போய்ச் சேர்த்ததன் பின்னணியில் ஐபி செயல்பட்டுள்ளது" என்றும் "இது நாட்டில் முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கான திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி" என்றும் இந்திய தேசிய லீக்கின் அகில இந்தியத் தலைவர் பேரா. முஹம்மது சுலைமான் குற்றம் சாட்டியுள்ளார்.

"சிறிய கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்திச் சிறை வைப்பதும் சுட்டுக் கொல்வதும் தொடர்கிறது. போலித் தீவிரவாதிகள் உருவாக்கப் படுகின்றனர். பின்னர், தாக்குதலில் 'முஸ்லிம் தீவிரவாதி'கள் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது. முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிரான தங்களின் பிரச்சாரங்கள் சரியானவைதாம் என்ற கருத்துருவாக்கத்தை மக்களிடையே திணிப்பதற்காகக் காவல்துறையும் இராணுவமும் இணைந்து என்கவுண்டர் நாடகங்களை நடத்தி வருகின்றனர். நாட்டில் மதசார்பின்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய உளவுத்துறைகூட, மக்களிடையே அச்சத்தையும் மனக் கலவரத்தையும் விதைத்து, நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கின்றது. காஷ்மீருக்குக் கேரளத்திலிருந்து இளைஞர்களைக் கடத்தி, அங்கு வைத்து அவர்களைச் சுட்டுக் கொன்றதன் பின்னணியில் ஐபிதான் செயல்பட்டுள்ளது" எனக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கக் கேரளத்திற்கு வந்த பேரா. முஹம்மது சுலைமான் செய்தியாளர்களிடம் கூறினார்.

***

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மக்களுடைய ஆதரவைத் திரட்ட, காவல்துறையும் ஹிந்துத்துவ சக்திகளும் இணைந்து போலித் தீவிரவாதிகளை உருவாக்குகின்றன என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கதை-வசனம், தயாரிப்பு, டைரக்ஷன் என்பது நாடகம்/திரைப்படங்களுக்கு மட்டும் சொந்தமானவையல்ல; அவை ஐபிக்கும் சொந்தமானவைதாம் என்பது வெள்ளிடை மலையாகி விட்டது.

டெல்லி காவல்துறையின் ஸ்பெஷல் செல் மற்றும் மத்திய உளவுத்துறையின் இன்டலிஜன்ஸ் பியூரோ (ஐபி) என்றழைக்கப் படும் நுண்பிரிவு ஆகியவற்றால், "இன்ஃபார்மர்" என்று செல்லப் பெயரால் அழைக்கப் படும் உளவாளியாக நீண்ட காலம் புலிவாலைப் பிடித்த கதையாகச் செயல்பட்ட இர்ஷாத் அலி என்பவர் திகார் சிறையிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியக் கடிதத்தில் இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கக்கூடிய பல தகவல்கள் அடங்கியுள்ளன.

காஷ்மீரில் இயங்கும் லஷ்கரே தொய்பாவில் சேர்ந்து கொள்வதற்கும் பாகிஸ்தான் எல்லையில் அதற்கான பயிற்சி மையத்தில் இணைவதற்கும் கட்டாயப் படுத்திய ஐபியின் கட்டளைகளுக்கு இணங்காததால் இர்ஷாத் அலி என்பவரும் அவரின் நண்பர் நவாப் கமர் என்பவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐபிக்கு உதவா விட்டால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் நீண்ட நாள்களாக ஐபியின் உளவாளிகளாகச் செயல்பட்ட அவ்விருவரும் சிறையில் தள்ளப் பட்டதற்கான காரணம், ஐபியின் சதிக்குத் தற்போது அவ்விருவரும் இணங்க மறுத்ததுதான் என அவர்களின் வழக்கறிஞரான சுஃப்யான் சித்தீக் கூறுகிறார்.

இர்ஷாதுக்கு ஐபியால் அன்பளிப்பு(!)ச் செய்யப் பட்ட 9873303646 என்ற மொபைலுக்கு ஐபியின் அலுவலகத் தொலைபேசியில் இருந்து 56 முறை ஓர் ஐபி அதிகாரி தொலைபேசியுள்ளதன் மூலம் இர்ஷாத் அலியும் கமரும் ஐபியின் இன்ஃபார்மர்களாகச் செயல் பட்டவர்கள்தாம் என்பதையும் சிபிஐ உறுதி செய்துள்ளது.

இரு இன்ஃபர்மர்களோடும் தொடர்பிலிருந்த ஐபி ஆஃபிஸர்கள்:
பெயர்
மொபைல்
சஞ்சீவ் யாதவ் 9810058002
லலித் மோகன் 9811980604
ஹர்தேவ் பூஷான் 9811980601
மாஜித் () காலித் 9810702004
அஃப்தாப் 9810702004
தங்கள் மீது பொய் வழக்குப் போட்டுத் திகார் சிறையில் அடைத்துள்ளதாகவும் இதுவரை எவ்வித விசாரணையும் இன்றித் தங்களை அடைத்து வைத்துள்ளதாகவும் இதனை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் பிரதமருக்கு இர்ஷாத் கடிதம் எழுதியுள்ளார். உயர்நீதி மன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சி.பி.ஐ இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில், ஐபி அதிகாரி முஹம்மது காலித், டெல்லி ஸ்பெஷல் செல்லிலுள்ள லலித், பூஷண் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து இர்ஷாதையும் நவாப் கமரையும் கடத்திச் சென்றனர் என்பதைச் சான்றுகளுடன் ஸி.பி.ஐ வெளிக் கொண்டு வந்துள்ளது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் 'தீவிரவாதத் தாக்குதல்'களில் முஸ்லிம் 'தீவிரவாதிகள்' கொல்லப்படுவது எப்படி? என்பதைப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இர்ஷாத் அலி தெளிவு படுத்தியுள்ளார். காவல்துறையின் முக்பிர்(உளவாளி)ஆகச் செயல்பட்ட தனது சொந்த அனுபவத்தை, திகார் சிறையின் 8ஆம் எண் வார்டிலிருந்து விவரிக்கும் இர்ஷாதின் கடித வரிகள்:


"இஸ்லாமிய மார்க்க விஷயங்களில் ஓரளவு அறிவுள்ள, தாடியும் தலைப்பாகையும் அணிந்த ஓர் உளவாளி முல்லாவை முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் குடியமர்த்துவதே ஐபியின் முதல் நடவடிக்கையாகும். பெரும்பாலும் பள்ளிவாசலின் அண்மையில் உள்ள வாடகைக் கட்டிடங்களிலோ பள்ளிவாசலிலேயோ உளவாளியின் வசிப்பிடம் அமையும். உறுதியான இஸ்லாமிய அடிப்படைகளைப் பேணுவதும் வசீகரிக்கும் படியான அவரது பழக்கவழக்கங்களும் நாட்கள் செல்லச் செல்ல இளைஞர்களை இவரோடு நெருங்க வைக்கும். அவர்களுள் உறுதியானவரும் மிகுந்த நம்பிக்கையாளருமான இளைஞர்களையே முல்லா குறி வைப்பார்.

தம்மிடம் நெருங்கிப் பழகும் இளைஞர்களிடம், "இந்திய முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலைமைக்கு ஜிஹாத் மட்டுமே ஒரே தீர்வு" என்று கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு வெறியூட்டுவார். தன்னோடு தொடர்ந்த தொடர்பிலிருப்பவர்களுள் நம்பிக்கையானர்வகளிடம், தான் ஒரு லஷ்கரே தொய்பா கமாண்டர் என்று மெதுவாக உளவாளி முல்லா அறிமுகம் செய்து கொள்வார்.

ஐபி சொல்லிக் கொடுத்தபடி அவர்களுக்குச் சிறிய அளவிலான ஆயுதப் பயிற்சியும் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான வழிமுறைகளையும் அவர் கற்றுக் கொடுப்பார். அதற்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களையும் உபகரணங்களையும் ஐபியே ஏற்பாடு செய்யும். அதன் பின்னர், யாராவது ஒருவரை அல்லது கோயில் போன்ற பொது இடத்தை இலக்காக்கித் தாக்குவதற்கான திட்டத்தை ஐபியின் உத்தரவுப்படி ஐபி உளவாளி முல்லா தயாராக்குவார்.

முன்னரே தீர்மானித்தபடி சம்பவ இடத்திற்கு முல்லா மூலம் ஐபி வழங்கிய ஆயுதங்களுடன் வரும் இளைஞர்களை, ஐபி உளவாளி முல்லா ஏற்கனவே கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு மறைவாகக் காத்திருக்கும் காவல்துறை, ஐபியின் திட்டப்படி உருவாக்கப் பட்ட இளைஞர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்யும்; அல்லது தாக்குதலில் தீர்த்துக் கட்டும். இதற்குப் பின்னணியில் செயல்பட்ட முல்லாவைக் குறித்து, அதன் பின்னர் எவ்வித விவரங்களும் வெளியாவதில்லை" என இர்ஷாத் அலி தனது கடிதத்தில் கூறுகிறார்.

'ஆபரேஷன் முல்லா' மூலம் கைது செய்யப்படும் இளைஞர்களை மறைமுகமாக வைக்க, டெல்லி காவல்துறைக்கு விசாலமான 'ஃபாம் ஹவுஸ்கள்' உண்டு. மனித உரிமை கமிஷன்கள் எதுவும் அந்தப் பக்கம் தலை காட்ட முடியாது. பொய் என்கவுண்டர்களில் கொல்லப் படுபவர்களின் உடல்களைப் பாதுகாப்பதும் அங்குத்தான். மாதக்கணக்கில் சில 'கைதிகள்' அங்குக் காக்க வைக்கப் பட்டு, தேவைப்படும் வேளைகளில் கொலை செய்யப் படுவர். பின்னர் மீண்டும் ஒரு என்கவுண்டர் நாடகம் மூலம் அவர்களது உடல்கள் மீண்டும் அவ்விடத்திற்கே கொண்டு வரப்படும். இவ்வாறு கொல்லப் படுபவர்களின் உடல்களைப் பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கக் காவல்துறையோ ஊடகங்களோ முயல மாட்டார்கள். அவர்களின் தாய், தந்தையரோ, தங்களுக்கே தெரியாமல் திடீர்த் 'தீவிரவாதி' ஆகிபோன மகனின் உடலைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வர மாட்டார்கள்.

'முஸ்லிம் தீவிரவாத'த்தைக் குறித்தத் தங்களின் பிரச்சாரம் சரிதான் என்பதை நிறுவுவதற்குக் காவல்துறை செய்து கொண்டிருக்கும் சதிகளில் தங்களுக்கும் பங்குண்டு என்பதால் இவ்விவரங்களை வெளி உலகத்திற்குத் தெரிவிப்பது தங்களின் கடமை என்பதை உணர்ந்ததுதான் இக்கடிதம் எழுதுவதற்கான காரணம் எனப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இர்ஷாத் அலி குறிப்பிட்டுள்ளார்.

"நமது நாட்டின் பாதுகாப்பு ஏஜன்ஸிகள் நாட்டைப் பதுகாப்பதற்கு மாறாக, மக்களின் மனங்களில் கலவரத்தையும் அச்சத்தையும் விதைத்து, குழப்பத்தையே உருவாக்குகின்றன. தீயைக் கொண்டு தீயை அணைக்க இயலாது. தீயை அணைப்பதற்குத் தேவை தண்ணீர்தான். ஆனால், நமது பாதுகாப்பு ஏஜன்ஸிகள், பெட்ரோல் ஊற்றித் தீயை அணைக்க முயல்கின்றன" - எனக் குறிப்பிட்டிருப்பதோடு, தங்களின் விஷயத்தில் தலையிட்டு, நியாயமான விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் எனப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இர்ஷாத் அலி கோரிக்கை வைத்துள்ளார்.

***

புலி வாலைப் பிடித்த கதையாக, உருவாக்கப் படும் உளவாளிகளால் ஒரு காலகட்டத்துக்குமேல் அதிகப் பயனேதுமில்லை என்று அறிய வரும்பொழுதோ தாங்கள் செய்யும் சட்டவிரோதத் செயல்கள் உளவாளி இன்ஃபார்மர்கள் வழியாக வெளியாக வாய்ப்புள்ளது எனத் தெரிய வரும்போதோ உளவாளிகள் காவல்துறையினால் 'தீவிரவாதிகளாக' மாற்றப்பட்டு என்கவுண்டர் மூலம் கொல்லப்படுவர்; அல்லது சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப் படுவர் என்பதற்கு அண்மையில் கஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த நான்கு இளைஞர்களும் பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையவராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஃப்சல் குருவும் திகார் சிறையிலிருந்து பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள இர்ஷாத் அலியும் அவரது கூட்டாளியும் மிகச் சிறந்த உதாரணங்களாவர்.

தென்காசி, நான்டட், கான்பூர், மாலேகோன், கண்ணூர் என "தேசப்பற்றாளர்கள் முகமூடி" அணிந்து உல்லாசமாக உலாவந்த இந்துத் தீவிரவாதிகளின் பொய் முகங்களும் இந்துத் தீவிரவாதமும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில்.....

நாட்டில் தீவிரவாதமாம்; காரணம் முஸ்லிம் தீவிரவாதிகளாம்!

அசத்துகிறது ஐபி!

சத்யமார்க்கம் . காம்


நான்டெட்டில் தொடங்கிய இந்து தீவிரவாதம் - பரபரப்பு தகவல்கள்

நாசிக்: நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்து தீவிரவாதத்தின் வேர், 2006ம் ஆண்டே, மகாராஷ்டிர மாநிலம் நான்டெட்டில் தொடங்கியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பே ..

2 ஆண்டுகளுக்கு முன்பே இந்து தீவிரவாத கட்டமைப்பு குறித்த தகவல் பாதுகாப்பு படையினருக்கு முதலில் கிடைத்துள்ளது.. இதுதொடர்பான விரிவான விசாரணை அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கைகள் நான்டெட் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்பட்டன..

2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்டெட்டில் உள்ள ஓய்வு பெற்ற நீர்ப்பாசனத் துறை அதிகாரி லட்சுமண் ராஜ்கோண்ட்வார் என்பவரது வீட்டில் குண்டுகள் வெடித்தன.

இதில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த நரேஷ் ராஜ்கோண்ட்வால், ஹிமன்சு வெங்கடேஷ் பான்சே ஆகியோர் இதில் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் 22 பேரை கைது செய்தனர். விசாரணையில், இந்துத்வா தீவிரவாத கட்டமைப்பு உருவாகி வருவது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது. சிபிஐக்கு விசாரணை மாறியது.

ஆனால் சிபிஐக்கு மத்திய அரசிடமிருந்தோ, மாநில அரசிடமிருந்தோ விசாரணை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சிபிஐயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் கைதான 22 பேரும் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

அலட்சியப்படுத்திய அரசுகள் ..

மகாராஷ்டிர அரசும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்த வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டன.

ஆனால் மகாராஷ்டிர போலீஸார், சிபிஐ செய்ய வேண்டிய வேலையை செய்து இந்த கட்டமைப்பு குறித்த தகவல்களை வெளிக்கொணர்ந்து விட்டனர்.

போலி தாடி - மண்டை ஓடு!

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் போலியான தாடிகளும் (ஒட்டுத் தாடி), முஸ்லீம்களின் மண்டை ஓடுகள் ஆகியவற்றை போலீஸார் கண்டுபிடித்தனர். குண்டுவெடிப்புக்கான பொருட்களும் சிக்கின.

இதையடுத்தே முஸ்லீம்கள் என்ற போர்வையில் இந்துத்வா தீவிரவாதிகள் குண்டுகளைத் தயாரித்தது தெரிய வந்தது.

புனே அருகே பயிற்சி ..

2003ம் ஆண்டு புனே அருகே உள்ள சிங்காத் என்ற இடத்தில் உள்ள ஆகாஷ் ரிசார்ட்டில் வைத்து இந்து தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 54 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தளத்தைச் ேசர்ந்த மும்பை மற்றும் புனே தலைவர்கள், இவர்களுக்கு நிதியுதவியும், ஆதரவும் அளித்து வந்துள்ளனர்.

இதுதொடர்பாக வி.எச்.பி. தலைவர் கோவிந்தா புரானிக் என்பவரின் பெயரும் அடிபட்டது.

கடந்த 2004ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பார்பானி, ஜல்னா, பூர்னா ஆகிய இடங்களில் இந்த இந்து தீவிரவாதிகள், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர்..

பிரவீன் தொகாடியா சந்தித்தார் ..

இந்துத்வா தீவிரவாதிகளை வி.எச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா சந்தித்துப் பேசியுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

நான்டெட் சம்பவத்தில் கைதானவர்கள், தங்களுக்குப் பயிற்சி அளித்தவர் குறித்த பல தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

நீண்ட தாடியும், உயரமும், நல்ல உடல்வாகும் கொண்டவர்தான் தங்களுக்குப் பயிற்சி அளித்ததாகவும், அவரது பெயர் மிதுன் சக்கரவர்த்தி என்றும், குண்டுகளைத் தயாரிப்பது எப்படி என்று பயிற்சி அளித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். குண்டுகள் தயாரிக்கத் தேவையான பொருட்கள் அடங்கிய பையையும் அவர் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

புரோஹித்தான் மிதுன் சக்கரவர்த்தியா?

இவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது தற்போது கைதாகியுள்ள புரோஹித்தான், மிதுன் சக்கரவர்த்தியாக இருக்கக் கூடும் என மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்து தீவிரவாத கட்டமைப்பு நான்டெட்டிலிருந்து தொடங்கியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த கட்டமைப்பில் மேலும் பலர் இருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

புரோஹித் காவல் நீட்டிப்பு..

இதற்கிடையே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித்தின் சிறைக் காவல் நவம்பர் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வந்தார் புரோஹித். அவரது காவல் முடிந்ததைத் தொடர்ந்து நேற்று நாசிக் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவரை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

அவரது காவலை நவம்பர் 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காந்தாரா உத்தரவிட்டார். புரோஹித் 11 நாள் போலீஸ் காவலில் முன்பு அனுப்பப்பட்டிருந்தார்.

புனே போலீஸாரிடம் ஒப்படைப்பு ..

மேலும், புனே தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் வசம் தற்போது புரோஹித் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

புனேவைச் சேர்ந்த அமித் டேட் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கின் அடிப்படையில் புரோஹித்தை, புனே தீவிரவாதத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க நாசிக் கோர்ட் உத்தரவிட்டது.

சமீர் குல்கர்னியும் ஒப்படைப்பு ..

இதேபோல இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியான சமீர் குல்கர்னி, வேறு ஒரு வழக்குக்காக காத்கி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். புரோஹித் மூலமே அனைவரும் சிக்கினர்

இதற்கிடையே புரோஹித்திடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அனைத்து குற்றவாளிகளும் கைதாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

புரோஹித் மூலம் சிக்கிய குற்றவாளிகள் ..

நவம்பர் 5ம் தேதி மும்பை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார் புரோஹித். அவரிடம் மூளை வரைபடச் சோதனை, பாலிகிராப், நார்கோ அனாலிசிஸ் சோதனை உள்ளிட்ட பல வகையான சோதனைகள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட்டன.

அவற்றின் மூலம் கிடைத்த தகவல்கள், புரோஹித் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே மற்றவர்கள் சிக்கினர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தேங்க்ஸ்-தட்ஸ்தமிழ்

இந்துத்வ வெறியர்களின் வெடிகுண்டுக் கலாச்சாரம்

இந்துத்வ வெறியர்களின் வெடி குண்டுக் கலாச்சாரத்திற்குக் கைப்பூண் போன்ற சான்று, காந்தியார் கொலை. சநாதனத்துக்கு எதிரான கருத்துகளை காந்தியார் பேசினார் என்பது தானே இந்துத்துவ வெறியர்களின் கோபத்துக்கான காரணம்?

பாகிஸ்தான் பிரிவினையை நேரு, பட்டேல், ராஜாஜி போன்றவர்களெல் லாம் ஏற்றுக் கொண்டு அவரிடம் தெரிவித்ததால், வேறு வழியின்றி காந்தியார் எதிர்க்க இயலவில்லை. பாகிஸ்தான் பிரிவினையைக் காட்டி காந்தியார் உயிருடன் இருக்கக் கூடாது எனத் தாம் முடிவு செய்ததாக நாதுராம் விநாயக் கோட்சே தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பது இட்டுக்கட்டிக் கூறப்பட்ட பொய்! பிரி வினையை ஆதரித்த மற்றவர்களுக்கு எந்த இடையூறும் யாராலும் ஏற்படுத்தப்படவில்லை. கூட்டுச் செயல், முடிவு என்ற வகையில் கண்டனம் கூடக் கிடையாது.

கோட்சேயின் ஞானகுரு விநாயக தாமோதர் சவர்க்கார் 1904-இல் ஆங்கிலேயர்களைக் கொல்வதற்காக உருவாக்கிய இயக்கம் அபிநவ் பாரத்! அது தான் இப்போது 2006-இல் அதே புனே நகரில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
1905-இல் ரசியாவின் ஜார் அலெக்சாண்டர் அந்நாட்டு மக்களுக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியதற்குக் காரணம் அவர்கள் நடத்திய ஆயுதம் ஏந்தியப் புரட்சி. இதைக் கண்ட பால் கங்காதர் திலக் (மராத்திப் பார்ப்பனர்) சொன்னது என்ன தெரியுமா? பிரார்த்தனை செய்வதால், ஒன்றும் ஆகாது; அயர்லாந்து, ஜப்பான், ரசியாவைப் பாருங்கள், அவர்கள் போல ஆயுதம் ஏந்துங்கள் என்றார்.

இந்த யோசனையை யார் கேட்டார்களோ இல்லையோ, இந்து மத உயர் ஜாதிக்காரர்கள், பார்ப்பனர்கள் கேட்டனர். திலகரே அவர்களின் தலைவர்தானே! வெற்றிலை பாக்குக் கடைக் காரனும், எண்ணெய்ச் செக்கு ஓட்டுபவனும் தேர்தலில் நிற்கலாமா? என்று கேட்ட பார்ப்பனப் பேஷ்வாப் பரம்பரையாயிற்றே!

இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியைப் போய்ப் பார்த்துப் பேசி அறிந்து வந்தவர்கள் இந்து மகாசபையினர். அவர்களைச் சேர்ந்த மூஞ்சேதான் போன்சலா மிலிட்டரி பள்ளியை நாசிக்கில் தொடங்கினவர். இவரும் இந்துத்வ வெறியர். ஆர்.எஸ்.எஸ். அமைப்புத் தலைவர்களில் ஒருவர்.

இவர்களெல்லாம் உருவாக்கிய அபிநவ் பாரத் அமைப்பின் உறுதிமொழி நம் புனித மதத்தை அழிக்கும் மிலேச்சர்களான அந்நிய நாட்டு எதிரிகளின் இரத்தம் நம் மண்ணில் சிந்தச் செய்வோம் என்பதே! என்ன பொருள்?

ஆங்கிலேயர்களைக் கொல்வோம்! ஏன்? அவர்கள் நம் மதத்தை அழிக்கிறார்கள்! கவனிக்க வேண்டும். சுதந்திரத் தாகம் அல்ல, காரணம்; சுயராஜ்யம் அல்ல குறிக்கோள்! மதவெறி! மதத்தைக் காக்க வேண்டும் என்னும் ஆவேசம்! அதுவே அவர்களின் இலட்சியம். இந்துத்வா என்ற சொல்லை 1920-இல் பயன்படுத்தியவர் ஆயிற்றே, சவர்க்கர்!

இந்துஸ் தான், பாகிஸ்தான் என்று இரு நாட்டுக் கொள் கையை முதன் முதலில் எழுதிக் காட்டி இந்தியா பிரிக்கப்பட வேண்டும் என்கிற வித்தினை ஊன்றியவரே இவர்தானே! காரணம் இந்து மதவெறி அல்லாமல் வேறு ஒன்றும் கிடையாதே!

அதனால்தானே, இந்து மதப் பழக்கங்களின் அடிப்படையில், அந்நியர்களைக் கொல்வது பாபம் அல்ல, யாகம் போன்றது என்று வியாக்யானம் செய்து எழுதியது யுகாந்தர் எனும் இவர்களின் பிற்போக்கு ஏடு! அந்நியர் என்பது ஆங்கிலேயரை மட்டுமல்ல, இசுலாமியர்களையும் உள்ளடக்கியது என்பது சொல்லாமலே விளங்குமே!

இந்த யாகம் செய்து யாகக் குண்டத்தில் மற்ற மதக்காரர்களைப் போட்டுப் பொசுக்குவ தற்காக, வெடிகுண்டு தயாரிப்பது என்பதைக் கற்றுக் கொள்வதற்காக, ரசியா நாட்டு வேதியி யல் பொறியாளரிடமிருந்து நூல்கள் வாங்கப் பட்டன. 1908-இல் எடின்பர்க் பல்கலைக் கழகப் பட்டம் பெற்ற பாண்டுரங்க பாபட் என்பார் இப்படிப்பட்ட நூல்களை வாங்கினார். செய்தார். வீசினார். மாட்டிக் கொண்டார். அலிப்பூர் குண்டு வெடிப்பில் கைதானார்.

ஆங்கிலேய மாஜிஸ்திரேட்டுக்குக் குறி வைத்து இரண்டு பெண்களைக் கொன்ற வழக்கு இது. இவர்களின் கதையே இதுதான், குறி வைத்தவர்களைக் கொல்லாமல் அப்பாவிகளைக் கொல்வார்கள் என்று ஒரு ஆய்வறிஞர் பதிவு செய்துள்ளார்.

புனேயும் கோயம்புத்தூரும் இந்தியாவில் பிளேக் எனும் கொள்ளை நோய்க்குப் பேர் போனவை. எலிகளால்தான் இந்நோய் பரப்பப்படுகிறது என்பதால் எலிகளைக் கொல்ல 1918-இல் அரசு நடவடிக்கைகளை எடுத்தது. எலி விநாயகனின் வாகனம் என்று இந்து மதக் கதையைக் காட்டி மக்களைத் தூண்டி,

திலகருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவரங்களை துர்காதாஸ் என்ற எழுத்தாளர் / ஆய்வாளர் குசடிஅ ஊரசணடி வடி சூநாசர யனே டிவாநசள என்ற தம் நூலின் 62-ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஆனாலும் போன வாரம்கூட ஒருவர் இந்த உண்மையை மறைத்து மழுப்பி அவருக்குத் தேச பக்தத் திலகம் சூட்டும் முறையில் ராணி ஏட்டில் எழுதியுள்ளார்.

இப்படிப்பட்ட பின்புலத்தைக் கொண்ட இந்துமத வெறியர்கள்தான் இப்போது இசுலாமிய மக்கள் மீதான தம் மதவெறித் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர்.

இதற்கு உதவி புரிய போர்ப்படையினரின் ஒத்தாசைகளை நாடியுள்ளனர்.

எளிதில் கிடைக்காத அரிய, அதிக ஆற்றல் மிக்க ஆர்டிஎக்ஸ் வெடிப் பொருள்களை ராணுவக்காரர்களிடமிருந்து பெற்று வெடிகுண்டு தயாரிக்கின்றனர். ஓய்வு பெற்ற ராணுவக்காரர்களும் மாட்டிக் கொண்டனர். பணியில் இருக்கும் ராணுவக்காரர்களும் பிடிபட்டுள்ளனர்.

இந்துக்களை ராணுவமயமாக்கு; ராணுவத்தை இந்து மயமாக்கு என்கிற ஆர்எஸ்எஸ்., இந்து மகா சபா, அபிநவ்பாரத், விஎச்பி அமைப்புகளின் கோஷத்திற்கு பா.ஜ.கட்சியும் ஆறு ஆண்டுக்கால ஆட்சியும் ஆதரவு அளித் ததன் விளைவு இது! நெற்றியில் சந்தனமும் குங்குமமும் வைத்துக் கொண்டு ராணுவத்தினர் எப்போது காட்சி அளித்தனர்? இப்போது அந்த நிலை இருக்கிறதே! மணிக்கட்டில் கறுப்பு, சிவப்புக் கயிறு கட்டிக் கொண்டுள்ள ராணுவ அதிகாரிகள் இருக்கிறார்களே! அதன் விளைவு
தானே ராணுவக்காரர்கள் சதிச் செயலில் பங்கு பெற்றது!

2003-ஆம் ஆண்டிலிருந்தே இந்துத்வ வெறி யர்கள் வெடிகுண்டு செய்யத் தொடங்கி விட் டார்கள். 2006-இல் வெடிகுண்டு செய்யும் போது விபத்து ஏற்பட்டு நரேஷ் கொண்ட்வார், இமான்சு பான்சே எனும் இரண்டு பேர் இறந்தார்கள். மராட்டியத்தில் நானடட் எனும் நகரத்தில் இது நடந்தது.

விசாரணையில் இவர்கள் இருவரும் 2006 ஏப்ரலில் நடந்த பர்பானி மசூதித் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்பது தெரிய வந்தது. பஜ்ரங்தளத்தைச் சேர்ந்தவர்கள்தான் 2003 ஏப்ரலில் புர்னா மற்றும் ஜல்னா நகரங்களில் மசூதிகளின் மீது நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

தெரிந்து என்ன பயன்? அவர்கள்மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை என்ன? ஒன்றும் இல்லை. எனவே அவர்களுக்குத் துணிவு கூடிவிட்டது. பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில்கூட, புனே நகரில் நடத்தப்படவிருந்த மகாபாரத நாடகத்தை நடத்தக் கூடாது என்று நாடகக் கொட்டகையை வெடிகுண்டு வீசித் தாக்கினார்கள், இந்து ஜன ஜாக்ரிதி சமிதி எனும் இந்துமத வெறி அமைப்பினர். மகாபாரதக் கதையொன்றைத் தழுவி (நக்கல்) அங்கத நடையில் தயாரிக்கப் பட்ட நாடகம். நம்மூர் சோ பார்ப்பனர் அந்தக் காலத்தில் நடத்திய நாடகம் போல! சகிப்புத் தன்மை இல்லாது, மதவெறி தலைதூக்கி நடத்தப்பட்ட தாக்குதல்.

மலேகான் குண்டு வெடிப்புக்காகக் கைது செய்யப்பட்டுள்ள மங்கேஷ் நிகாம் என்பவன் மதவெறிச் செயல்களை ஏற்கெனவே செய்தவன். ரத்னகிரியில் ஒரு குடும்பத்தினர் கிறித்துவ மதத்தைத் தழுவிய குற்றம் செய்தமைக்காக அவர்களின் வீட்டின்மீது வெடிகுண்டு வீசியவன் இந்த ஆள். இதற்காகக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டவன். மீண்டும் வெடிகுண்டு வீசியிருக்கிறான். சிரங்கு பிடித்தகையும், இரும்பு பிடித்த கையும் என்பார்களே, அதுபோல வெடிகுண்டு வைத்த கை சும்மா இருக்காதோ!

உத்தரப்பிரதேசம் மாயாவதியின் மாநிலம். அங்கே, பஜ்ரங் தளத்துக்காரர்கள் ராஜீவ் மிஸ்ர மற்றும் பூபிந்தர்சிங் ஆகிய இரண்டு பேர் இந்த ஆண்டு அக்டோபரில் வெடிகுண்டு தயாரிக்கும் போது இறந்து போயினர். கான்பூரில் இந்நிகழ்ச்சி நடந்தது. வெடிகுண்டு செய்யும் எண்ணம் இந்துத்வ வெறியில் ஏற்படுகிறது. சரி. வசதி வாய்ப்புகள் எப்படிக் கிடைக்கின்றன? ராணுவம் தான் கைகொடுக்கிறது.

2006 செப்டம்பரில் குஜராத் மாநிலம் அகமது நகரில் பழைய இரும்பு வணிகரிடம் 196 கிலோ எடையுள்ள காக்டெயில் ராணுவ வெடிகுண்டு கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான விசாரணை தெரிவித்தது என்ன? 15 வருடங்களாக இந்தியாவில் நடந்த எல்லா வெடிகுண்டுச் சம்பவங்களுக்கும் தேவைப்படும் அளவுக்கு வெடிப் பொருள்களை வணிகர் சங்கர் ஷெல்கே விற்றிருக்கிறார். இவருக்கு அந்தப் பொருள்களை ராணுவமே விற்றிருக்கிறது. பழைய இரும்பு என்று விற்றிருக்கிறது. நாடு எங்கே போகிறது?

அதைவிடக் கொடுமை! இந்த ஷெல்கேயின் வணிகம்பற்றி விசாரணை செய்யப்பட்டது. உயர் சக்தி வாய்ந்த வெடிப் பொருள்களை இந்த ஆள் கள்ளச் சந்தையில், விற்றிருக்கிறார்; அம்மோனி யம் நைட்ரேட் கலந்த வெடிப் பொருள்களை வைத்துப் பயன்படுத்துவது தொல்லை என்பதால் இதனை வாங்கிப் பல தொழில் நிறுவனங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார்களாம்! இதற்கான நோய் நாடி நோய் முதல் நாடப்பட வேண்டாமா? இதைச் செய்யாததால்தானே நாடே சுடுகாடாகியுள்ளது?

ராணுவத்தை இந்து மயமாக்கி வெற்றி பெற்று விட்டனவா, மதவெறிச் சக்திகள்? பதிலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோழி திருடியவனும் கூடச் சேர்ந்து குலவுவது போல், இத்தனைப் பயங்கரவாதத்திற்கும் காரணமான இந்துமதவெறி அமைப்புகள் என்ன கூக்குரலை எழுப்பி வந்துள்ளன?

இன்றைக்கும் பாருங்கள், பா.ஜ. கட்சிச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மலேகான் வெடிகுண்டுச் சதிகாரியை அப்பாவி என்கிறார். முசுலிம்களைப் பயங்கரவாதிகள் என்கிறார். என்னய்யா இது இரட்டை அளவுகோல் என்று இதழாளர் கேட்டால்; குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அப்பாவிதானே எனக் கேட்கிறார். இதே வாதம் இசுலாமியர்களுக்குப் பொருந்தாதா?

மக்களை இரண்டாக்கியவர்கள், இரட்டை நாக்குடன் பேசுகிறார்கள். திரிசூலம் தந்து கிறித்துவ, இசுலாமிய, மதச் சார்பற்றவர் ஆகிய மூவரையும் கொல்வதற்கு என்று பகிரங்கமாகப் பேசித் தீட்சை அளித்தவர்கள் இந்துக்கள் பயங்கரவாதிகளாக இருக்க மாட்டார்கள், சாத்வீகமானவர்கள் என்று பசப்புகிறார் வி.எச்.பி. தலைவர் பிரவீண் தொகாடியா. இவரேதான் முன்பு கூறினார், இந்துக்கள் வன்முறையில் இறங்கி ஆயுதம் ஏந்தலாம் என்பதற்கு அடையாளம் இந்துக் கடவுள்களின் கைகளில் ஆயுதங்கள் இருப்பது என்றார். திட்டம் போடும்போது ஒரு பேச்சு, திட்டம் போட்டு குட்டு உடைந்து மாட்டிக் கொண்டால் வேறு பேச்சு எனும் இரட்டை நாக்கு, இரட்டைப் போக்கு! இதுதான் இந்து மதம், இந்துத்வா!

வரலாற்று ஆய்வாளர் ஈஜின் டிசவுசா கூறியது போல, நாஜிப் பிரச்சாரத்தை மராத்திய, மும்பைப் பத்திரிகைகள் செய்தன, இட்லர் பாணியில் இந்து வீரர்களை உருவாக்கினர். முசோலினியின் பயிற்சியைப் பெற்று பாசிஸக் கட்சிகளை நடத்தி வருகின்றனர். இவர்களை அடியோடு அகற்றி அழித்தால்தான் மதவெறி பிடித்த அழிவுப் பாதையிலிருந்து இந்தியாவைக் காத்திட முடியும்.
Thanks TO VIDUTHALI.COM அந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கொலை செய்ய வைத்தவர் திலக். கொலைகாரர்கள் சபேக்கர் சகோதரர்கள். இதற்காகத் தண்டனை பெற்றவர் திலக்.

Download Offline Pre-Registration Application for Emirates Identity Authority

Dear brothers,
Assalamu alaikum.
Emirates ID Application is now available at www.aimansangam.com. Those who have not submitted the form can now download the required application from http://www.aimansangam.com/emirates_id.htm and follow the procedure as described.
With warm regards,
Aiman Sangam, Abu Dhabi

சமுதாய கல்வி பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கு

நாள் : 19 நவம்பர் 2008 , புதன் , நேரம் : இரவு 7.00 மணி

இடம்: சிட்டி பேலஸ் ரெஸ்டாரன்ட் ஹால்,
கலீஃபா சாலை, அபுதாபி

தலைமை : காஜி A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கீ M.A..,
( தலைவர், அய்மான் சங்கம் )
வரவேற்புரை : அல்ஹாஜ் A.ஷாஹுல் ஹமீது M.Sc.,
(
துணைத்தலைவர், அய்மான் சங்கம் )

சிறப்புரை

பேராசிரியர் டாக்டர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் M.A Ph.d.
ஜனாப் அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் M.A.,

நன்றியுரை :ஜனாப் S.A..C. ஹமீது B.Com.,
(
பொதுச்செயலாளர் , தலைவர் அய்மான் சங்கம் )

சமுதாய கல்வி பொருளாதார மேம்பாட்டு சிந்தனை பற்றிய தமிழக முஸ்லிம் சமுதாயம ஆற்ற வேண்டிய அரும் சேவைகள் குறித்து சிந்தனையாளர்களின் பேருரை கேட்கஅனைவரும் வருக
அன்புடன் அழைக்கும்
அய்மான் சங்கம் , அபுதாபி

இ‌ந்‌து‌த்துவா பய‌ங்கரவாத‌ அமை‌ப்பை உருவா‌க்க ராணுவ ‌நி‌தியை‌ப்பய‌ன்படு‌த்‌திய புரோஹ‌ி‌த்!

இ‌ந்‌து‌த்துவா பய‌ங்கரவாத‌ அமை‌ப்பை உருவா‌க்க ராணுவ ‌நி‌தியை‌ப்பய‌ன்படு‌த்‌திய புரோஹ‌ி‌த்! மாலேகா‌ன் கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ராணுவ அ‌திகா‌ரி லெ‌ப்டின‌ன்‌ட் க‌ர்னல் ‌பி.எ‌ஸ். புரோஹ‌ி‌த் ராணுவ‌ப் புலனா‌ய்வு‌த் துறை‌ ‌நி‌தியை‌ப் பய‌ங்கரவாத நடவடி‌க்கைகளு‌க்கு பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளா‌ர் எ‌ன்று அவ‌ரிட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரியவ‌‌‌ந்து‌ள்ளது.மாலேகா‌ன் கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌‌‌ல் இதுவரை 9 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌தி‌ல் ஓ‌ய்வுபெ‌ற்ற ராணுவ மேஜ‌ர் ரமே‌ஷ் ‌சி‌‌வ்‌ஜி உப‌த்யாய, ச‌மீ‌ர் கு‌ல்க‌ர்‌னி, அஜ‌‌ய் ஏ‌க்நா‌த் ரஹ‌ி‌ர்க‌ர், ராகே‌ஷ் த‌த்தா‌த்ரேயா த‌வ்டே, ஜக‌தீ‌ஷ் ‌சி‌ந்தாம‌ன் மா‌ட்ரே ஆ‌கிய 5 பே‌ரி‌ன் காவ‌ல் துறை காவ‌ல் முடிவடை‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து, இவ‌ர்க‌ள் அனைவரு‌ம்‌ நவ‌ம்ப‌ர் 17 வரை‌யிலான ‌நீ‌திம‌‌ன்ற‌க் காவ‌‌லி‌ற்கு‌த் ‌தி‌ங்க‌ட்‌கிழமை அனு‌ப்ப‌ப்ப‌ட்டன‌ர்.காவ‌ல் துறை ‌விசாரணை‌யி‌ல் உ‌ள்ள லெ‌ப்டின‌ன்‌ட் க‌ர்ன‌‌ல் ‌பி.எ‌ஸ். புரோஹ‌ி‌த் நவ‌ம்ப‌ர் 15 ஆ‌ம் தே‌தி ‌நீ‌திம‌‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்‌ப்படு‌த்த‌ப்படுவா‌ர். அவ‌ர் உ‌ள்ப‌ட 4 பே‌ரிடமு‌ம் ‌தீ‌விர ‌விசாரணை நட‌ந்து வரு‌கிறது.மாலேகா‌ன் ச‌தி‌‌யி‌ல் புரோஹ‌ி‌த்‌ மு‌க்‌கிய‌க் கு‌ற்றவா‌ளியாக இரு‌க்கலா‌ம் எ‌ன்று‌ம், ராணுவ‌ப் புலனா‌ய்வு‌த் துறை‌க்கு ஒது‌க்க‌ப்ப‌ட்ட ‌நி‌தியை அவ‌ர் பய‌ங்கரவாத நடவடி‌க்கைகளு‌க்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்‌தியு‌ள்ளா‌ர் எ‌ன்று முத‌ல்க‌ட்ட ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது எ‌ன்று‌ம் அவ‌ரிட‌ம் ‌விசாரணை நட‌த்‌தி வரு‌ம் அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌‌ர்.அ‌பின‌வ் பார‌த் எ‌ன்ற ‌சி‌றிய இ‌ந்‌து‌த்துவா அமை‌ப்பை உருவா‌க்க ராணுவ ‌நி‌தியை‌ப் புரோஹ‌ி‌த் பய‌ன்படு‌த்‌தியு‌ள்ளா‌ர் எ‌ன்பது தெ‌ரிய வ‌‌ந்து‌ள்ளது.மேலு‌ம், 2005- 06 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் புனே‌‌‌வி‌‌ல் ராணுவ‌ப் புலனா‌ய்வு‌த் துறை‌யி‌ல் ப‌‌‌ணியம‌ர்‌த்த‌ப்ப‌ட்டபோது இ‌ந்து‌த்துவா அமை‌ப்புக‌‌‌ளி‌ன் தலைவ‌ர்களுட‌னான தொட‌ர்பை புரோஹ‌ி‌த் வள‌ர்‌த்து‌க் கொ‌ண்டு உ‌ள்ளா‌ர் எ‌ன்பது‌ம் ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரியவ‌ந்து‌‌ள்ளது. ( அதிரை ஆன்லைன் )