மது விற்றதாக 3 வயது குழந்தை கைது

விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக 3 வயது குழந்தை ஒன்று கைது செய்யப்பட்ட வினோதச் சம்பவம் நடந்துள்ளது.
திருவெண்ணை நல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் அப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதில், ஆனத்தூர் குச்சிப்பாளையம் கிராமத்தில் ஒரு கும்பல் சாராயம் விற்பது தெரிய வந்தது. அதிரடியாக அங்கு சென்ற காவல்துறையினர், இத்தொழிலில் ஈடுபட்டிருந்த முருகன், அவரது மனைவி சரோஜா உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் சுமார் ரூ.75,000 மதிப்புள்ள 100 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் முருகன் தம்பதியரின் 3 வயது ஆண் குழந்தை சபரிநாதனும் அடங்கும். பின்னர், குழந்தை உட்பட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
சாராய வழக்கில் பெற்றொர் கைது செய்யப்பட்டதால், அவர்களுடன் பச்சிளம் குழந்தையும் சிறை செல்ல நேரிட்டது அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

ஈராக்கில் இருந்து ஆஸி. படை விலகல்

ஈராக்கில் இருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ள ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது.
முதல்முறையாக அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், அந்நாட்டு வெளியுறவுத் துறையிடம் இதனை தெரிவித்ததாக, மெல்போர்ன் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் ராணுவத்தின் 550 பிரிவுகள் விலக்கிக் கொள்ளப்படும் என்றும், இதனால் ஆஸ்திரேலிய- அமெரிக்க உறவுகள் பாதிக்காது என்றும் ஸ்டீபன் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் சீரமைப்புப் பணிகளுக்கான உதவிகள் தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைசிடம் அவர் உறுதியளித்துள்ளார்.

msntamil.com

ஷார்ஜாவில் 200 இந்தியர்கள் கைது

விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்ததற்காக இந்தியர்கள் 200 பேரை ஷார்ஜா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைதாகியுள்ள அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் நிஜாமாபாத், அடிலாபாத் மற்றும் கரீம்நகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்தியர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதை, ஆந்திர சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது சபீர் அலி உறுதி செய்துள்ளார்.
இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்க்க மாநில அரசுக்கு என்று சில வரைமுறைகள் உள்ளதாகச் சொன்ன அவர், இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், கைதானவர்களை விடுவிக்க விரந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

-- MSN Tamil

வெள்ளை மாளிக்கைக்கு தலிபான் குறி

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் நியூயார்க், லண்டன் நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் தெரிவித்துள்ளார்.
கத்தார் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டியில், இதனை அவர் தெரிவித்ததாக, இஸ்லாமாபாத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.
மொத்தம் 25 நிமிடங்கள் ஒளிபரப்பான இப்பேட்டியில், தங்களுடைய (தலிபான்) முதல் இலக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் அதிபர் முஷாரப் செயல்படுவதாக தெரிவித்துள்ள பைதுல்லா, விரைவில் தங்கள் கூட்டணியில் உள்ள அமைப்புகள் அவருக்கு சரியான பாடம் புகட்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக போராட, பாகிஸ்தான் தலிபான் இயக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 40 இனவாத குழுக்கள் இடம்பெற்றுள்ள இந்த இயக்கத்தின் தலைவராக பைதுல்லா மசூத் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

thnks - Msn Tamil

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி மாலை 4.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக ஜகர்த்தாவில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிமோர்சி நகருக்கு அருகே, பாண்டா கடற்பரப்பிற்கு அடியில் 23 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்க உருவானதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையும், அடுத்த ஒரு மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்டதால், அப்பகுதி மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.
நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகமாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இதனை உணரவில்லை என தெரிவித்துள்ளனர். எனினும் சேத விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்


சென்னையில் தமிழ் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவைக்கு நன்றி தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதல்வர் கருணாநிதியின் தொடர் வலியுறுத்தலால் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சென்னையில் தமிழ் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க ரூ.76 கோடியே 32 லட்சம் ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில், 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தின் தலைவராக முதல்வர் கருணாநிதி பொறுப்பு வகிப்பார் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சரவை மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங் ஆகியோருக்கு தமிழக சட்டப்பேரவை உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கொள்கிறது.
இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த தமிழக முதல்வருக்கும் இப்பேரவை தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

இன்டர்நெட் குற்றங்களைத் தடுக்க சவூதியில் புதிய சட்டம்

இன்டர்நெட் குற்றங்களைத் தடுக்க சவூதியில் புதிய சட்டம்

ரியாத்: தீவிரவாதம், மோசடி, ஆபாசப் படம், அவதூறுச் செய்திகள், மத கோட்பாடுகளுக்கு முரணான செய்திகளை வெளியிடுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு இணையதளங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சவூதி அரேபிய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பச் சட்டம் 16 பிரிவுகளைக் கொண்டதாக உள்ளது. இச்சட்டத்தின் கீழ் இணையதளத்தை தீவிரவாத செயல்களுக்காக பயன்படுத்துவோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 10.3 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்படும்.

பண மோசடி, நிதி முறைகேடு, தனி நபர்களின் வாழ்க்கையில் குறுக்கீடு செய்ய இணையதளத்தைப் பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1.33 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்படும்.

இந்த புதிய சட்டத்தின் கீழ் மத மற்றும் சமூக தகவல்களைப் பரிமாறுவது மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுச் சட்டத்ைத மீறுவோர், மத கோட்பாடுகளுக்கு முரனாண செய்திகளை வெளியிடுவோருக்கு இச்சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறை மற்றும் 8 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் ஆபாசப் படங்களையும், செய்திகளையும், தகவல்களையும் வெளியிடுவோருக்கும் இதே அளவிலான தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

இந்தச் சட்டத்தின் கீழ் முதன் முதலில் சவூதி அரேபியாவைச் ேசர்ந்த பிளாக்கர் அகமத் பெளத் அல் பர்ஹான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது பிளாக்கில், சவூதி அரேபிய சிறையில் வாடும் அரசியல் கைதிகள் குறித்து தான் எழுதியதற்காக அரசு தன்னைக் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை தவறாக உபயோகப்படுத்துவதைத் தடுக்கவும், தீவிரவாத செயல்களுக்கு அது துணை போவதைத் தடுக்கவுமே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதியில் தமிழர் உள்பட 3 பேருக்கு மரண தண்டனை

துபாய்: தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியைக் கொன்ற குற்றத்திற்காக 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெட்டாவில் ஒரு மூதாட்டியைக் கொலை செய்ததற்காக தமிழகத்தைச் சேர்ந்த நெளஷத், அவரது மனைவி ஹலீமா நிஸ்ஸா காதர் (இலங்கை), இலங்கையைச் சேர்ந்த பண்டாரநாயகே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூன்று பேரும் அந்த மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கொலை செய்து விட்டு கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதே வழக்கில் இலங்கையைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த ஜெட்டா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மூவருக்கும் மரண தண்டனை விதிப்பதாக வாய் மொழித் தீர்ப்பை அறிவித்தது. ஜனவரி 20ம் தேதி இந்தத் தீர்ப்பு எழுத்துப் பூர்வமாக வெளியிடப்பட்டது. நேற்று நீதிபதி பைசல் அல் ஷேக் இந்தத் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

மற்ற ஐந்து பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை மற்றும் 500 கசையடிகள் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து 7 நாட்களுக்குள் அப்பீல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பைக் கேட்டு நெளஷத் - ஹலீமா தம்பதியினரின் மகன் பெரும் சோகமடைந்தார். உண்மையில் மற்ற ஐந்து பேருக்கும்தான் மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என அவர் கூறினார்.

இந்தத் தீர்ப்பை மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கடுமையாக கண்டித்துள்ளது. முறையான விசாரணை இல்லாமல் இதுபோன்ற மரண தண்டனைகள் விதிக்கப்படுவது மனித உரிமைக்கு புறம்பானது என்று அது வர்ணித்துள்ளது.

இதுகுறித்து ஆம்னெஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தங்களது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உரிய சட்ட உதவிகள் செய்து தரப்படவில்லை. விசாரணையின்போதும் கூட அவர்களின் சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று அது கண்டித்துள்ளது.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை என்பது தலையை துண்டித்து நிறைவேற்றப்படுகிறது. இதற்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் இருந்து வருகின்றன. இந்த கொடூர தண்டனையை ஒழிக்க வேண்டும் என பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.

இருப்பினும் சவூதி அரசு மரண தண்டனையை ஒழிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி நான்கு இலங்கைத் தொழிலாளர்கள் கொள்ளையடித்த குற்றத்திற்கு ஆளாகி தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு ஆளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் மார்ச் முதல் அல் ஜசீரா ஆங்கில சேனல்

இந்தியாவில் மார்ச் முதல் அல் ஜசீரா ஆங்கில சேனல் - Thatstamil News

கொல்கத்தா: பிரபல அரபு தொலைக்காட்சி நிறுவனமான அல்ஜசீரா இன்டர்நேஷனல் இந்தியாவிலிருந்து தனது ஆங்கில சேனலை வருகிற மார்ச் மாதம் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

அரபு நாடுகளில் மிகவும் புகழ் பெற்றது அல்ஜசீரா தொலைக்காட்சி. இதுவரை அரபு மொழியில் மட்டுமே செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்த அல் ஜசீரா தற்போது ஆங்கில சானலை தொடங்கியுள்ளது.

2006ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி இதன் உலக அளவிலான ஆங்கில தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது. இருப்பினும் இந்தியாவில் மட்டும் தாமதமாகி வந்தது. தற்போது அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பு தொடங்கக் கூடும் எனவும் அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்தின் பிராந்திய விநியோகப் பிரிவு இயக்குநர் டயானா ஹொஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் இதழியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் வழங்குகிறோம். இதழியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டவை மட்டுமே எங்களது தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இதழியல் கண்ணோட்டத்துக்கு உட்படாத எதையும் நாங்கள் ஒளிபரப்புவதில்லை.

ஒசாமா பின் லேடனிடமிருந்து ஆடியோ மற்றும் வீடியோ டேப்புகளை நாங்கள் எளிதில் பெறுகிறோம் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனாலும் கூட அவற்றை உடனடியாக நாங்கள் ஒளி, ஒலி பரப்பி விடுவதில்லை. அவற்றின் நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை பரிசோதித்த பின்னர்தான் ஒளிபரப்புகிறோம்.

மேலும் யூதர்களின் ஆதரவையும் பெற்ற அரபு தொலைக்காட்சியாக அல் ஜசீரா விளங்குகிறது. இஸ்ரேலில் எங்களுக்கு அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மற்ற ஆங்கில சானல்களைப் போலவே எங்களுக்கும் அங்கு நல்ல வரவேற்பு உள்ளது.

குரல் இழந்தவர்களின் குரலாக அல் ஜசீரா விளங்குகிறது. அரபு உலகம், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அல் ஜசீரா செயல்படுகிறது.

இந்திய ஒளிபரப்பு தாமதமாகி வருவது உண்மைதான். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று எங்களுக்கேத் தெரியவில்லை. வழக்கத்தை விட மிகவும் தாமதாகியுள்ளதை ஒப்புக் கொள்கிறோம்.

இருப்பினும் நாங்கள் மிகப் பொறுமையாக உள்ளோம். சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகம்தான் எங்களது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவுள்ளது. எனவே அதன் அனுமதி கிடைக்கும் வரை நாங்கள் பொறுமையோடுதான் இருந்தாக வேண்டும். இருப்பினும் மார்ச் மாதத்திற்குள் ஒளிபரப்புக்கு அனுமதி கிடைத்து விடும் என உறுதியாக நம்புகிறோம்.

பாகிஸ்தானும் பெரிய சந்தைதான். எனவே அங்கும் எங்களது பிசினஸை விரிவுபடுத்துவது தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்றார் ஹொஸ்கர்.

இந்திய செய்திப் பிரிவு தலைவர் அன்மோல் சக்சேனா கூறுகையில், இந்தியாவில் உள்ள பிராந்திய மற்றும் தேசிய தொலைக்காட்சி நிறுவனங்களுடன் செய்திப் பகிர்வு தொடர்பாக உடன்பாடு செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இந்தியா தொடர்பான செய்திகள், நிகழ்ச்சிகளை அதிக அளவில் ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளோம்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. எனவே இங்கு எங்களது நிறுவனத்தின் செயல்பாடு எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றார் சக்சேனா.

துபாயில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி

துபாயில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி
தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத்

திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் ஒரே மேடையில் வீற்றிருப்பது தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரிதும் அபூர்வ நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் துபாயில் அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு வளைகுடா தமிழர் பேரவை 28.01.2008 திங்கட்கிழமை நடத்திய பாராட்டு விழாவில் திமுகவைச் சேர்ந்த கும்பகோணம் நகரசபைத் தலைவர் அன்பு மற்றும் அதிமுகவைச் சேர்ந்த திருவாரூர் மாவட்ட அதிமுக தொழிற்சங்க தலைவர் மலர்வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

துவக்கமாக கபீர் வரவேற்றார். ஸ்கை எக்ஸ்பிரஸ் இயக்குநர் செய்யது அப்துல் காதர் ( சினா தானா ) தனது உரையில் சமூக நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து விவரித்தார். கல்வியின் அவசியம், புரிந்துணர்வு உள்ளிட்டவை குறித்து உரை நிகழ்த்தினார்.

மலர்வேந்தன தனது உரையில் அமீரக மன்னராட்சி மதிக்கத்தக்க வகையில் இருப்பது குறித்து பாராட்டு தெரிவித்தார். நமது நாட்டில் சமதர்மம், உரிமை கொடுத்திருப்பது பல்வேறு விபரீதமுடிவுகளைத் தந்து வருகிறது. இந்தியா குறிப்பாக தமிழகம் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. எதிர்காலத்தில் வெளிநாட்டினரே நமது நாட்டிற்கு வேலை தேடி வரும் சூழல் ஏற்படலாம்.

அன்பு தனது உரையில் தமிழகத்தில் இருதுருவங்களாக இருக்கும் மலர்வேந்தனும், தானும் இங்கு ஒரே மேடையில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். அமீரகத்தில் இருக்கும் இத்தகைய தமிழர் பண்பாடு தமிழகத்திலும் வர வேண்டும் என தான் விரும்புவதாக குறிப்பிட்டார். மனித உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்து மருத்துவசேவையை செய்து வருவதாகக் குறிப்பிட்டார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது வருமானத்தை முறையாக சேமித்து எதிர்காலத்திற்கு பயனளிக்கும் வண்ணம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். விழாவில் அஜ்மான் மூர்த்தி, சபீர் அஹ்மது, ஜெயந்தி சுரேஷ், குடந்தை இஸ்லாமுதீன், அண்ணாதுரை உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.

ஆல்பர்ட் நன்றி கூறினார். அன்வர் பாஷா தொகுத்து வழங்கினார்.விழாவில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ரியாத் ரத்ததானமுகாம் : பெரும் வரவேற்பு

ரியாத் ரத்ததானமுகாம் : பெரும் வரவேற்பு -முதுவை ஹிதாயத்

தெலுங்கு கலாசேத்திரம் சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் நடத்திய ரத்ததான முகாம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

விரிவான செய்திக்கு :

http://www.yahind.com/news/directory.php?id=1050



புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க...

உங்களது பழைய வாக்காளர் அட்டையை சரிபார்க்கவும், புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் உள் நுழையுங்கள்:

அமீரக இந்திய தொழிலதிபருக்கு பத்மஸ்ரீ விருது

அமீரக இந்திய தொழிலதிபருக்கு பத்மஸ்ரீ விருது
-தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்பொருள் அங்காடிகளை நடத்தி வரும் கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலிக்கு இந்திய அரசின் பதம்ஸ்ரீ விருது சமுதாயப் பணிக்காக இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இவ்விருதைப் பெறும் முதலாமவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2008/January/theuae_January759.xml&section=theuae&col=

http://www.luluhypermarket.com/

http://www.emkegroup.ae

http://www.mecsc.org/newsletter/nlnews_view.php?id=276

துபாயில் மரணமடைந்த தமிழக தொழிலாளி

துபாயில் மரணமடைந்த தமிழக தொழிலாளி
-தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத்

துபாயில் பாஸ்கர் முத்து எனும் தமிழக தொழிலாளி கடந்த 28.11.2007 அன்று விபத்தில் மரணமடைந்து காவல்துறை சவக்கிடங்கில் இருப்பதாகவும், இதுவரை இவரது உடலை வாங்க எவரும் தொடர்பு கொள்ளவில்லை என வேலி ஆஃப் லவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவரது இந்திய முகவரி : பாஸ்கர் முத்து, எண் 4/145 ஜின்னாஹ் தெரு, பெருமாள் கோவில் வட்டம், தேரிழந்தூர், மயிலாடுதுறை வட்டம்,நாகப்பட்டினம் மாவட்டம்.

இவரது உறவினர்கள் 050 309 05 06 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

துபாயில் உயர் கல்வி வழங்கும் தமிழ் நிறுவனம்

துபாயில் உயர் கல்வி வழங்கும் தமிழ் நிறுவனம்

துபாயில் விஸ்டம் இன்ஸ்டிடியூட் உயர்கல்வியினை வழங்கி வருகிறது. இங்கு பல்வேறு இந்தியப் பல்கலைக்கழகங்களின் உயர்கல்வியினை தொடர்கல்வி மூலம் வழங்கி வருகிறது.

தொடர்புக்கு

விஸ்டம் இன்ஸ்டிடியூட்
துபாய் : 04 396 44 55
அபுதாபி : 02 621 44 74

மின்னஞ்சல் : wisdom@emirates.net.ae

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு
கல்வி உதவி தொகை

+1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 2007 - 2008 முதல் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2876 மாணவர்களுக்கு, இவ்வுதவிகள் கிடைக்கும். அதில் 1372 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பங்களுக்கும் தொடர்பு கொள்க:

http://www.minorityaffairs.gov.in/

அஞ்சல் வழியில் அரபி மொழி

அஞ்சல் வழியில் அரபி மொழி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ரேடியோ கெய்ரோ அரபி மொழியினை ஒலிபரப்பி வருகிறது. இதனைக் கேட்கும் நேயர்களுக்கு அரபி மொழி பயில புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறது.

அரபி மொழி பயிலக்கூடிய புத்தகங்களை இலவசமாகப் பெற தங்களது சுய குறிப்புகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி பெறலாம்.

Radio Cairo
Arabic By Radio
P O Box No. 325
Cairo
P.C.N. 11611
A.R.EGYPT

தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?

தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எந்த ஒரு அரசு நிறுவனம், அரசு உதவி பெறும் நிறுவனம், தன்னாட்சி நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு பொது அலுவலகத்திலும் குடிமகன்கள் எந்தத் தகவலையும் கேட்டு அறியலாம். பொது மக்கள் எவ்வாறு தகவல் பெறலாம், அதற்கு உரிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கும் செய்திக் கட்டுரை இது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் 11.05.2005ல் நிறைவேற்றப்பட்டது. ஊழலை தடுத்து நிறுத்துவதற்கும், ஆளப்படுகிறவர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நிர்வாகத்தின் ஒளிவு மறைவின்மையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி அனைத்து குடிமகன்களும் தகவல் பெறும் உரிமை உடையவராவர். எந்த குடிமகன்களும் தகவல் கேட்கலாம். காரணங்கள் கூறத் தேவையில்லை. எந்த ஒரு பொது அலுவலகத்திலும் கேட்கலாம். அரசு நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த சட்டத்தின் பிரிவு 8ல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மட்டும் மறுக்கப்படலாம்.

உதாரணத்திற்கு நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவைப் பாதிப்பவை போன்றவை. இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அலுவலகம் முதல், மத்திய, மாநில அரசு அலுவலகங்ளில் ஒரு பொது தகவல் அதிகாரி உள்ளார். தகவல் பெற விரும்புவோர் அவருக்கு முகவரியிட்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனு கொடுக்க வேண்டும்.

அரசு நிர்வாகத்தின் எந்த வகையான புள்ளி விவரங்களையும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது போன்ற விவரங்களை கேட்கலாம். இதற்காக தனியாக ஏதும் படிவம் இல்லை. ஒரு வெள்ளை தாளில் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை தெளிவாக தெரிவித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், கீழ்கண்ட தகவல் வேண்டுகிறேன் என தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஒரு மனுவில் எத்தனை கேள்விள் வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஒவ்வொரு மனுவுடன் ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த கட்டணத்தை நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியோ, வங்கி வரைவோலையை இணைத்தோ, அஞ்சல் ஆணையை இணைத்தோ, அரசு கருவூலத்தில் சலான் மூலமாகவோ செலுத்தலாம். எந்த காரணம் கொண்டும் தபாலிலோ அல்லது மணியாடர் மூலமாகவோ கட்டண தொகையை அனுப்பக்கூடாது. சரியான அலுவலகத்தில் மனுவை அளிக்க வேண்டும். இவ்வாறு தகவல் கேட்கும் உங்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும்.

தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்க தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. தவறான அலுவலகத்திற்கு மனு அளிக்கப்பட்டால் அவ்வலுவலக தகவல் அதிகாரியே சரியான அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டு மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு 5 நாட்கள் கால தாமதம் ஆகும். தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:

தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375, முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை, அண்ணாசாலை , சென்னை- 18.
தொலைபேசி எண் 044-24357580

மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:

மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம்,
பி-பிரிவு. நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056
தொலைபேசி எண்கள் 011-26717353, 26761137

தகவல்: முதுவை ஹிதாயத்

காமிராக்கள்! பெண்கள் கவனத்திற்கு!

காமிராக்கள்! பெண்கள் கவனத்திற்கு!
-Sulaiman K.S.A


கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள நம் சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, நம் சமுதாய பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொது இடங்களில் காமிராக்கள் :

பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும் சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. இதிலும் பர்தாவைப் பேணும் மாணவிகள் தப்பித்தார்கள் என்று சொல்லலாம் மற்றவர்கள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :

பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.

மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :

நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.

நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.

துபாயில், இந்தியத் தொழிலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

துபாயில், இந்தியத் தொழிலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


சமீப காலமாக வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு இந்தியத் தொழிலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் சந்திரன் பிள்ளை (54). இவர் துபாய், ஜபேல் அலி பகுதியில் உள்ள ரோமியோ டெக்கார் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சனிக்கிழமை தனது முகாமில் உள்ள அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சந்திரன். மின்விசிறியில் தூக்குப் போட்டு சந்திரன் தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளிக்கிழமை சந்திரனும், அவருடன் தங்கியிருக்கும் மற்றொருவரும் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டுள்ளனர். அவர்களுடன் மேலும் இரு சக தொழிலாளர்களும் இருந்துள்ளனர். அப்போது சந்திரன் நார்மல் ஆகத்தான் இருந்துள்ளார்.

சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு எழுந்த சந்திரன், தனது காலை உணவை முடித்துள்ளார். வழக்கம் போல அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் பேருந்து சந்திரன் உள்ளிட்ட தொழிலாளர்களை அழைத்துச் செல்ல வந்துள்ளது. ஆனால் வேலைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் சந்திரன்.

பின்னர் மாலையில் மற்ற தொழிலாளர்கள் முகாமுக்குத் திரும்பியபோது, சந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

ஒரு வருடத்திற்கு முன்புதான் சந்திரன் வேலையில் சேர்ந்துள்ளார். எப்போதும் மகிழ்ச்சிகரமாகவே காணப்படுவாராம்.

இந்த நிலையில் சமீபத்தில் சந்திரனுக்கு அவரது மனைவியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், சந்திரனின் மகள் தனது கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீட்டுக்குத் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் கவலை அடைந்தார் சந்திரன். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இஸ்ரேல் ராக்கெட் அனுப்ப இந்தியா உதவி : மத்திய கிழக்கு நாடுகள் அதிருப்தி

இஸ்ரேல் ராக்கெட் அனுப்ப இந்தியா உதவி : மத்திய கிழக்கு நாடுகள் அதிருப்தி

இஸ்ரேலின் உளவு ராக்கெட்டை கடந்த திங்களன்று அனுப்ப இந்தியா உதவியது. இது மத்திய கிழக்கு நாடுகளை அதிருப்தியில் ஆழ்த்தியுளளது.

மேலும்

http://archive.gulfnews.com/articles/08/01/22/10183769.html

தஸ்லிமாவுக்கு விருது வழங்கும் பிரெஞ்ச் அரசுக்கு இந்தியா எதிர்ப்பு

தஸ்லிமாவுக்கு விருது வழங்கும் பிரெஞ்ச் அரசுக்கு இந்தியா எதிர்ப்பு - தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத்

தஸ்லிமாவுக்கு விருது வழங்கும் பிரெஞ்ச் அரசுக்கு இந்தியா எதிர்ப்பு

சர்ச்சைக்குரிய வங்க தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு விருது வழங்க பிரெஞ்ச் அரசின் முடிவுக்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தஸ்லிமாவுக்கு எதிராக எதிப்பு வலுத்து வரும் நிலையில் சமீபத்தில் இந்தியா வருகை புரிந்த பிரெஞ்ச் அதிபர் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்

http://timesofindia.indiatimes.com/India_against_French_move_to_honour_Taslima/articleshow

சவுதி : பாதிக்கப்பட்ட தமிழுருக்கு உதவி

சவுதி : பாதிக்கப்பட்ட தமிழுருக்கு உதவி

சவுதி அரேபியாவின் அல் கர்ஜ் பகுதியில் பணிபுரிந்து வந்தவர் முஹம்மது கனி(வயது 52).
தமிழகத்தில் திட்டக்குடி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்.

ஆடு மேய்த்துக்கொண்டு ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த போது அவரது கழுத்திலும், நடு எலும்பிலும் தாக்கிவிட்டு அவர் வசம் இருந்த அடையாள அட்டை, ஆயிரம் ரியால் உள்ளிட்டவற்றை பறித்து விட்டுச் சென்று விட்டனர்.

இதனையறிந்த சிலர் அவரை ரியாத் மருத்துவமனைக்கு காரில் அனுப்பியுள்ளனர். அவரைப் பற்றிய முழு விபரம் இல்லாததால் மருத்துவமனை அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டது.

உதவியின்றி தவித்த அவரை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சுமேசி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அவர் குறித்த தகவல் மலையாள நாளிதழில் வெளியாகியுள்ளது.

முஹம்மது கனிக்கு விசா வழங்கிய அரபியை தொடர்பு கொண்டபோது அவர் ஒரு சாதாரண கிராம வாசி என்பதால் அவரால் உதவிட இயலவில்லை. பின்னர் இந்திய தூதரகம் அனுமதிக் கடிதத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கழுத்து எலும்பும், நடு எலும்பும் முறிந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்யவில்லையென்றால் வாழ்நாள் முழுவதும் கை, கால் செயல் இழந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் உதவி செய்து வருகின்றன.

தகவல் உதவி : இம்தியாஸ், ரியாத் ( imthias@imthias.com )

தர்மபுரியில் வாழ்வாதார உதவி



தர்மபுரி நகர தமுமுகவினர் சார்பில் 19.01.2008 அன்று மாலை 7மணியளவில் நகரத் தலைவர் பாஷா தலைமையில் நகர செயற்குழு நடைபெற்றது. அப்பொழுது 7 பேருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயற்திரங்களும், 15 நபர்களுக்கு பணஉதவியும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் கலந்தர், மாவட்ட செயலாளர் இர்பான் பாஷா, மாவட்ட பொருளாளர் ஷகின்ஷா, மாவட்ட துணைச் செயலாளர் கே. தென்றல் அகியோர் உள்பட இதில் ஏராளமான தமுமுகவினர் கலந்துக்கொண்டனர் .

வீட்டு வேலையாட்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 400 டாலர் - வயலார் ரவி

துபாய்: வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 400 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரம்) தர வேண்டும் என வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.

அபுதாபியில் நடந்த கருத்தரங்கில் வயலார் ரவி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

அயல்நாடுகளுக்கு வீட்டு வேலைகள் உட்பட ஏராளமான வேலைகளுக்கு இந்திய பணியாளர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். அதற்கு ஆட்களை அனுப்ப வேண்டும் எனில் அவர்களுக்கு குறைந்த பட்சம் 400 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,000 சம்பளமாக கொடுக்க வேண்டும்.

ஆட்களை தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஊதியம் குறித்த விவரத்தை தெளிவாக அளித்திருந்தால் மட்டும் அவர்களுக்கு குடியுரிமை அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதிப்பார்கள்.

இந்த புதிய நடைமுறை 2008 ஜனவரி 1ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு மிக தெளிவாக இருக்கிறது. குறைந்த பட்ச ஊதியம் 400 டாலர்களுக்கு கீழ் இருந்தால், அந்த வேலைக்கு யாரும் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் அரசு அனுமதிக்காது.

ஏராளமான நாடுகள் தங்கள் நாட்டில் இந்த ஊதியத்திற்கு பணிபுரிய இந்திய தொழிலாளர்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பிற பணிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் திட்டம் அரசிடம் இல்லை.

அதிகளவு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் நாடுகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார் வயலார் ரவி.

Thanks : Thats Tamil News

தகவல்கள் from Muduvai mail

தகவல்கள்


http://software।nhm।in/writer।html
இறக்கி நிறுவினீங்கன்னா தானா உங்கள் கணினியில் தமிழ் unicode முடுக்கப்படும். அப்புறம் நேரடியா எங்க வேணா எழுதலாம்

If u are facing problem to view tamil emailpl. change settings in your computer

Pl। got VIEW then select ENCODING then select UNICODE UTF 8Now u will be able to read in Tamil

மத்திய ஜவுளித்துறையின் கீழ் இயங்கும் நேஷனல் இண்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் புதிய சேர்க்கை குறித்து விபரமறிய www।niftindia.com-

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பி எட் நுழைவுத்தேர்வு முடிவுகளை அறியwww.tnou.ac.in

ஐஐடி நுழைவுத் தேர்வு பற்றிய விபரமறியhttp://jee.iitm.ac.in

அகில இந்திய பி இ நுழைவுத்தேர்வு குறித்த விபரமறிய www.aieee.nic.in

ஜெத்தா இஸ்லாமிக் டெவலப்மெண்ட் வங்கி மூன்றாண்டு பி.எச்.டி ஆய்வுப் படிப்பினை மேற்கொள்வோருக்கு தகுதி அடிப்படையில் கல்வி நிதி வழங்குகிறது.அதுகுறித்த விபரமறிய www.isdb.org

சென்னை எஸ் ஆர்.எம். நிகர் நிலைப் பல்கலைகழக இணைய முகவரி : www.srmuniv.ac.in

கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முடிவுகளை அறிய http://csirhrdg.res.in

பிளஸ் டூ தனித்தேர்வுகள் பற்றிய அறிவிப்பைக் காண http://www.tn.gov.in/dge

முஸ்லிம் மாணவர்கள் அரசு கல்வி நிதி உதவி பற்றிய விபரமறிய www.minorityaffaris.gov.in

ரயில்வே பணியிடங்கள் குறித்த விபரமறிய
www.rrchennai.org.in www.southernrailway.org www.rrbthiruvananthapuram.net www.rrbmumbai.gov.in

பாராளுமன்ற வேலை பற்றிய விபரமறிய www.parliamentofindia.nic.in

பாரத ஸ்டேட் வங்கி www.statebankofindia.com

இஸ்ரோ www.isro.gov.in

எல்லைப் பாதுகாப்புப் படை : www.bsf.gov.in

தகவல் உதவி :
இனிய திசைகள் மாத இதழ்ஜனவரி 2008 எண் 27
நரசிம்மபுரம்,மயிலாப்பூர்,சென்னை 600 004,தொலைபேசி : 2493 6115

லிப்ஸ்டிக்கால் அதிகரிக்கும் மார்பகங்கள் அளவு!

லண்டன்: அதிக அளவில் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மார்பகங்களின் அளவு அதிகரித்து வருவதாக பிரிட்டிஷ் ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும் குடிப் பழக்கமும் மார்பகத்தின் அளவை அதிகமாக்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த இரு நூற்றாண்டுகளில் பிரிட்டன் பெண்களின் சராசரி மார்பக அளவு அதிகரித்துவிட்டதாகவும் இதற்கு குடியும் லிப்ஸ்டிக்கும் வேறு சில சுற்றுச்சூழல் விஷயங்களுமே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.மார்பக அளவை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன் ஆஸ்ட்ரோஜென்.வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் ஆஸ்ட்ரோஜென் சுரப்பது அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.ஆஸ்ட்ரோஜென் அளவுக்கு அதிகமாக சுரந்தால் மார்பக புற்று நோய் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பாலுட்டுவதால் ஆஸ்ட்ரோஜென் அளவு குறைகிறது. ஆனால், குறைந்த அளவில் குழந்தை பெறுவோருக்கு தாய்ப்பால் மூலம் ஆஸ்ட்ரோஜென் வெளியேறுவதற்கான சாத்தியம் குறைவு என்பதால் அவர்களுக்கே மார்பக அளவு அதிகமாகிறது. அதிக அளவில் புற்று நோயும் தாக்குகிறது.இது தவிர செயற்கையான ஆஸ்ட்டோரஜனாலும் மார்பக அளவு அதிகரித்து வருகிறது. ஜெனோ-ஆஸ்ட்ரோஜன்கள் எனப்படும் செயற்கையான இந்த ரசாயனம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் (பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில்) காணப்படுகிறது. மேலும் லிப்ஸ்டிக்களிலும் இந்த ரசாயனம் உள்ளது.இவையும் மார்பக அளவை பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தோடு குடிப்பழக்கமும் சேர்ந்துவிட்டால் அளவு மேலும் பெரிதாகிவிடுகிறது என்கிறது அந்த ஆய்வு.ஆஸ்ட்ரோஜன் ஹார்மோனை சிதைத்து உடலில் இருந்து வெளியேற்றும் முக்கிய வேலையை செய்வது கல்லீரல் தான். ஆனால், குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்படுவதால் ஹார்மோனின் அளவு உடலில் குறைவது பாதிக்கப்படுகிறதாம்.

அமெரிக்காவில் ஆழ வேரூண்றும் விஎச்பி!

அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர்களிடையே சங் பரிவார் அமைப்புகள் தீவிர மதவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக Campaign to Stop Funding Hate (சி।எஸ்.எப்.எச்) என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.இதற்காக இந்து மாணவர்கள் கவுன்சில் (Hindu Students Council (HSC)) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சங் பரிவார் அமைப்புகள் பயன்படுத்தி வருவதாக அந்த அமைப்பு கூறுகிறது.சி.எஸ்.எப்.எச் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் இணை ஆசிரியர்களில் ஒருவரான பிஜூ மாத்யூ கூறுகையில், சமீப காலமாக சங்-மாணவர் நெருக்கம் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.பல்வேறு காரணங்களால் சங் பரிவார் அமைப்புகள் மீதான அமெரிக்க வாழ் இந்திய மாணவர்களுக்கு பிடிப்பு அதிகரித்து வருகிறது. மாணவர்கள் தவிர இளைஞர்களும் பெருவாரியான அளவில் சங் பரிவார் பக்கம் திரும்பிக் கொண்டுள்ளனர்.அமெரிக்காவில் நிலவும் இனவெறி, ஒதுக்கப்படும் போக்கு ஆகியவையும் சங் பரிவார் பக்கம் இந்திய மாணவர்கள் திரும்ப முக்கிய காரணமாகும். இதை தங்களுக்கு பாதுகாப்பாக அவர்கள் நினைக்கிறார்கள்.இந்து மாணவர் கவுன்சிலுக்கும், சங் பரிவாருக்கும் தொடர்பு இருப்பது தெரியாமல் பலர் அதில் இணைந்துள்ளனர் என்பதுதான் முக்கியமானது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்து மாணவர் கவுன்சிலின் கிளைகள் வலுவான நிலையில் உள்ளன.விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களான அசோக் சிங்கால், சாது ரிதம்பரா ஆகியோரின் பேச்சுக்களை மாணவர்களிடம் அதிக அளவில் இந்த அமைப்பு கொண்டு செல்கிறது. அந்தப் பேச்சுக்களால் மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாத எண்ணம் மேலோங்கி வருகிறது.90களில்தான் இந்து மாணவர் கவுன்சில் தொடங்கப்பட்டது. அமெரிக்க விஸ்வ இந்து பரிஷத்தான் இதை தொடங்கியது. இந்து மதத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில்தான் இது ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது.தற்போது தங்களுக்கும் வி.எச்.பிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, 1993 முதல் தனித்து செயல்பட்டு வருவதாக இந்து மாணவர் கவுன்சில் தற்போது கூறினாலும் கூட சங் பரிவார் அமைப்புகளின் பிரதிநிதியாகவே தொடர்ந்து அது செயல்பட்டு வருவதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன என்று கூறியுள்ளார் மாத்யூ.குஜராத் வன்முறைக்குப் பின்னர் 2002ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் சி.எஸ்.எப்.எச். அமைப்பு. அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு மதத்தினர், பல்வேறு தொழிலில் உள்ளவர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். மதவெறிக்கு எதிரான பிரசாரத்தில் இது ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





Thanks : ThatsTamil.com

எச்சரிக்கை!

எச்சரிக்கை!

"அஹ்லே சைத்தான்" என்ற விசகிருமி ஊருக்குள் ஊடுருவி உள்ளது!
நமது உயிருனும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இஜிவு படுத்தும் விதமாக, பாங்கு மற்றும் இகாமத் கூறும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் கூறக்கூடாது என்றும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் அத்தகியாதில் இருப்பதால் அந்த அத்தகியாதே ஓத கூடாது என்றும், தொழுகையில் அல்ஹம்து சூராவை தவிர வேறு எதையும் ஓதக்கூடாது என்றும், ஹதிஸ் எதனையும் பின்பற்றவேண்டியதில்லை, எல்லா ஹதிசும் கட்டுகதைகள் என்றும் கூறிவருகிறார்கள். கடைசியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபியே அல்ல என்றும் கூறுகிறார்கள் .மேலும், வட்டி வாங்கலாம், தாடி வைக்கவேண்டியதில்லை, வரதட்சனை வாங்கலாம், ஆண்களுக்கு பவுன் ஹராம் இல்லை, என்று பைத்தியம் பிடித்து பிதற்றுகிறார்கள்.
அன்பு சகோதர, சகோதரிகளே, இந்த விசகிருமிகளை இனம்கண்டு, இறைவனிடம் பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள்.


இப்படிக்கு,
ஜாக் மர்கஸ்,
தோப்புத்துறை

Peace 2008 vision of Islam

Hello Brothers and sisters,

I invite all of you to the function PEACE 2008. Its an 10 days lecture program from 11-01-2008 t0 21-01-2008…where international speakers like Dr.Zakir nayak , Bilal Philips, Yusuf estates, Yashir quadhi,… and so many great scholars are giving lectures in great topics… Separate seating for ladies are available.. free medical camp, book fare.. and lots of entertainment related to peace and humanity…, Peoples from all religions are invited… Its and friendly discussion.. After every lectures there will be an question & answer session where each individual can question the speakers on the topics.. whatever the question may and even it s silly .. they will answer for it… so come with the questions whatever u have doubt regarding the concepts of various religions.. The schedule of the program is attached with this mail…. More details and live relay of the program in http://www.peacevisionofislam.org







In order to understand this large community of people, one needs to comprehend the religious belief that guides them. Peace - An International Convention for Harmony, Awareness and Education intends to do just that by presenting Islam in its pristine purity. Specially designed pavilions, each one exclusively devoted to an aspect of Islam, will provide information on the religion. It is sincerely hoped that the awareness created by this educative exhibition will not only help dispel the misconceptions surrounding Islam but also enhance goodwill between Muslims and the people of other faiths.





Seminar
International Speakers
Counseling
Workshops
Dawah Corner
Inter-Faith Dialogue
Career Guidance
Exhibits
Exclusive Women’s Pavilion
Children Play Area
Inter-School & Inter-College Competitions
Matrimonial Services
Free Qur’an & Islamic literature




Convention Name
PEACE - Vision of Islam

Dates
Insha' Allah Friday 11th - Sunday 20th January 2008

Venue
Madrase-Azam Hr. Sec. School


Anna Salai (Opp. LIC & Adjacent to Spencer Junction)

City / Country
Chennai/India

Timings
10am to 6pm

Conference Timings
11am to 1pm, 4pm to 5.45pm & 6.30pm to 9:30pm


FREE ADMISSION - ALL ARE WELCOME

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித் தொகை

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்புகல்வி உதவி தொகை+1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 2007 - 2008 முதல் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் 2876 மாணவர்களுக்கு, இவ்வுதவிகள் கிடைக்கும். அதில் 1372 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பங்களுக்கும் தொடர்பு கொள்க:
http://www.minorityaffairs.gov.in/
பார்க்க: தினத்தந்தி 06.01.2008 பக்கம் 33,
விண்ணப்பங்களை தங்கள் பள்ளி, கல்லூரியில் ஒப்படைக்க கடைசி நாள்: 31.01.2008.

மோடியின் தமிழக வருகை! பரவுகிறது பதற்றம்!!

மோடியின் தமிழக வருகை! பரவுகிறது பதற்றம்!!இப்பி பக்கீர்
குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்திட தனது அரசு இயந்திரத்தை பயன்படுத்திய சங்பரிவார சக்திகளுக்கு 3 நாட்கள் வரை பெருந்தன்மையுடன் அனுமதி அளித்து உற்சாகப்படுத்திய மதவெறி நரேந்திர மோடி தேர்தலிலும் நின்று வெற்றியும் பெற்று விட்டார்.மோடியின் வெற்றி அகில இந்திய தேர்தலிலும் எதிரொலிக்கும் என பாஜகவினர் புளங்காகிதமடைந்து வருகின்றனர் மென்மையான இந்துத்துவாவை கைவிடாத காங்கிரஸ், குஜராத்தில் வெற்றி வாய்ப்பு போய் விட்டதே என புலம்பியிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தின் அறிவிக்கப்படாத ஆர்.எஸ். எஸ். தலைவராக செயல்பட்டு வரும் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா மோடியின் வெற்றிக்கு மனம் குளிர்ந்து வாழ்த்து தெரிவித்ததுடன் கடந்த முறை போல நேரடியாக சென்று பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டு ஆரிய ஜோதியில் சங்கமமாக திட்டமிட்டிருந்தார். கடைசி நேரத்தில் அந்த பயணம் ஏனோ ரத்து செய்யப்பட்டு விட்டது.இந்நிலையில் மத வெறியன் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். புரோக்கர் சோ. நடத்தும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள ஜனவரி 14 அன்று தமிழகத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார் பின்னர் ஜெயலலிதா விடுத்திருக்கும் சிறப்பு அழைப்பின் பேரில் போயஸ் தோட்டத்திற்கு மோடி சென்று ஜெ.வுடன் அளவளாவ இருக்கிறார். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பூரிப்புடன் சொல்லியிருக்கும் ஜெ. அ.தி.மு.க. பி.ஜே.பி. கூட்டணி மலர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்கவில்லை.''இனிமேல் பி,ஜே.பி.யுடன் கூட்டணியே வைக்க மாட்டேன்'' என்று சத்தியம் செய்த இந்த நம்பிக்கை துரோகிக்குத் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் சில சமுதாயத் துரோகிகள் ஊன்உறக்கமின்றி, வெட்கமுமின்றி தேர்தல்களப் பணியாற்றினர் இந்த சுயநலவாதிகள். இப்போது முகத்தை எங்கே வைத்து கொள்ளப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.நரேந்திர மோடியின் தமிழக வருகை முஸ்லிம், கிருத்துவ, ஒடுக்கப்பட்ட மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி அவனது சொந்த மாநிலத்தில் வேண்டுமானால் சகல பாதுகாப்புடன் சுகமாக இருக்கலாம் ஆனால் சமூக நீதி மற்றும் விழிப்புணர்வுள்ள முஸ்லிம் இயக்கங்களை கொண்டுள்ள தமிழகத்திற்கு வர இருக்கும் நரேந்திர மோடிக்கு இங்கு எப்படிப்பட்ட வரவேற்பு(?) இருக்கும் என்பது காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் தெரியாததல்ல.ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் கோரச் சாவுக்கு காரணமானவனை புன்னகையுடன் தமிழக மண்ணில் கால் பதிக்க எந்த உணர்வுள்ள மனிதனும் அனுமதிக்க மாட்டான். அதை மீறி மோடி வந்தால் இந்திரா காந்தி தமிழகத்திற்கு வந்த போது தி.மு.க. தொண்டர்கள் எந்த வரவேற்பை அளித்தார்களோ அதை, மோடிக்கு கொடுக்க தமிழர்கள் தயங்க மாட்டார்கள். எனவே மோடியை தமிழகத்திற்கு வர தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.பாதுகாப்பு காரணங்களுக்காக அரசியல் தலைவர்களுக்கு சில இடங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது புதிதல்ல. எனவே நரேந்திர மோடியை தமிழகத்திற்கு அனுமதிக்கச் செய்வது அமைதியுடன் இருக்கும் தமிழகத்தில் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசும், காவல்துறையும் உணர வேண்டும். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பாசிச ஆதரவாளர்கள் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்களா?
நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்