சவூதியில் பரிதவித்து வருகின்றனர் நான்கு கேரளத் தொழிலாளர்கள்

வேலையில் சேருவதற்காக தலா ரூ.1 லட்சம் பணத்தை ஏஜென்டிடம் கொடுத்து ஏமாந்து சவூதியில் பரிதவித்து வருகின்றனர் நான்கு கேரளத் தொழிலாளர்கள்.

ரியாத் நகரில் உள்ள அறக்கட்டளை ஒன்றிடம் அவர்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர். இலியாஸ் புதுக்குடிப்பரம்பு, மனோஜ் குமார், ரதீஷ் குமார், முகம்மது ரபீக் ஆகிய நால்வரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

மும்பையைச் சேர்ந்த டா எக்ஸ்போ என்ற வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் இவர்கள் சவூதிக்கு வந்தனர். வேலையில் சேருவதற்காக தலா ரூ. 1 லட்சம் பணத்தை அந்த நிறுவனத்தின் ஏஜென்டிடம் வழங்கியுள்ளனர்.

சவூதி வந்த பின்னர்தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு கொடுக்கப்படுவதாக கூறப்பட்ட வேலைக்கு மாறாக வேறு வேலையில் நாங்கள் அமர்த்தப்பட்டோம். தங்க இடம் தரப்படவில்லை. மாறாக, வேலை பார்த்த இடத்தின் மொட்டை மாடியில் தங்குமாறு வற்புறுத்தப்பட்டோம். சம்பளமும் தரவில்லை.

எங்களது ஸ்பான்சர் குறித்து நாங்கள் இந்தியத் தூதரகத்தில் புகார் கொடுத்தபோது ஆத்திரமடைந்த அவர் எங்களை வெளியே துரத்தி விட்டு விட்டார் என்றனர்.

கோழிக்கோட்டில் உள்ள கோல்டன் விங்ஸ் டிராவல் ஏஜென்சி மூலமாகவே இந்த நான்கு பேரும் சவூதிக்கு வந்துள்ளனர். இவர்களது நிலை குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ஜெயபால் என்பவர்தான் இந்த நான்கு பேருக்கும் பொறுப்பானவர்.

ஜெயபால் சவூதியில் உள்ள இந்த நான்கு பேரின் ஸ்பான்சரையும் சமாதானப்படுத்தி உரியவற்றை செய்யுமாறு முயற்சித்து வருகிறார்.

நான்கு பேருக்கும் தங்கும் வசதி, சூப்பர் மார்க்கெட் அல்லது மருத்துவமனைகளில் வேலை ஆகியவற்றைப் பெற்றுத் தர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரச்சனையை தீர்க்க டா எக்ஸ்போ நிறுவனத்தின் உதவியையும் நாங்கள் நாடியுள்ளோம் என்றார்.

நன்றி - தட்ஸ் தமிழ் . காம்

அமீரக தொழிலாளர்களின் அவல வாழ்க்கை!

Dubai Gas
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ரசல் கைமா பகுதியில் உள்ள முகாம்களில் மிகவும் பயங்கரமான சூழலில் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா பகுதியில் உள்ள தொழிலாளர் முகாம்களில் தாங்கள் தங்கும் அறைக்கு அருகிலேயே சமையலையும் கவனித்து வருகிறார்கள் தொழிலாளர்கள். எரிவாயு சிலிண்டர்களும் அடுப்புக்கு அருகிலேயே உள்ளன.

இது வெடிகுண்டுடன் இருப்பதைப் போன்ற அபாயகரமான செயல் என தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பாதுகாப்பு குறித்து பல்வேறு பாடங்கள் நடத்தப்பட்டாலும், தங்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கு இதுபோன்ற நிலையில் தான் இருக்க முடிகிறது என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நகரின் ஒதுக்குப்புறத்தில் தங்கி வரும் சூழ்நிலையில் உணவுக்காக அலைவதைத் தடுக்க தொழிலாளர்கள் இதுபோன்ற சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். தாங்கள் வேறு இடங்களுக்கு பணியின் நிமித்தமாக செல்லும் நிலை ஏற்படின் சமையல் எரிவாயுவை பிறிதொருவருக்கு விற்று விடுகின்றனராம்.


--
BLOG SITE IN TAMIL
------------------------------------------------------------------------------------------------------------
http://samuthayam.blogspot.com
http://mannadykaka.blogspot.com
http://adamtradenews.blogspot.com
http://adamtamilit.blogspot.com
------------------------------------------------------------------------------------------------

தமுமுக - ராஸ் அல் கைமா மண்டலம் - நிர்வாகிகள் தேர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

தமுமுக - ராஸ் அல் கைமா மண்டலம் சார்பாக நிர்வாகிகள் தேர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 21-09-2008 ஞாயிற்றுகிழமை இரவு 7.30 மணியளவில் அல் நகில் ஆதம்.ஆரிப் இல்லத்தில் நடைபெற்றது,முன்னதாக அமீரக துணை தலைவர் ஹுசைன் பாஷா தமுமுக அமீரகத்தில் செய்து வரும் பணிகள் பற்றி விவரித்தார்,அடுத்ததாக தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மௌலவி .காசிம் பிர்தௌசி அவர்கள் தமுமுக வின் சமுதாய பணிகள் தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் எழுச்சியும் எடுத்துரைத்தார்
பின்னர் அமீரக தலைவர் அப்துல் ஹாதி அவர்கள் தமுமுக வின் அவசியம் பற்றி யும்,மருத்துவ பணிகள்,மார்க்க பிரச்சாரம்,கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பற்றி விவரித்தார்,
அடுத்ததாக நிருவாக தேர்வு நடத்தப்பட்டது,கீழ்க்கண்ட நிருவாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர்,இந்நிகழ்ச்சியை மண்டல ஆலோசகர் ஆதம்.ஆரிபின் சிறப்பாக ஒருங்கிணைத்து நன்றிவுரையாற்றினர்,து ஆ ஓதி அமர்வு முடிவடைந்தது.

ரஸல் கைமா புதிய நிருவாகிகள் :

தலைவர் : ஜாபர் சாதிக் ,கும்பகோணம்
செயலாளர் : ஷாஜகான்,பொதக்குடி
பொருளாளர் : ஹாஜா , கடியசேரி,திருத்துறைபூண்டி
துணை தலைவர் : பெரோஸ் கான்,பரமக்குடி
துணை செயலாளர்: ஜியாவுதின்,கூத்தநல்லூர்

தமுமுக மாநிலச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி சிறப்பு பேட்டி

மலேசிய நண்பன் » செய்திகள்

Wednesday, 17 September 2008

அரசியல் அவசியம் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்துள்ளோம் தமுமுக மாநிலச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி சிறப்பு பேட்டி

கோலாலம்பூர், செப். 16-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்(தமுமுக) முன்னணி செயல் வீரர்களில் ஒருவராக செயல்பட்டதன் வ௞ தமிழக மக்களால் பரவலாக அறி யப்பட்ட வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரும் தமுமுகவின் மாநிலச் செயலாளரும் ஑மக்கள் உரிமைஒ வார இத௞ன் ஆசிரியருமான தமீமூன் அன் சாரி சமீபத்தில் நண்பன் பணிமனைக்கு நல்லெண்ண வருகை மேற்கொண்டார். அவருடன் நடத்திய சந்திப்பிலிருந்து...

கே: தமுமுகவின் தற்போதைய செயல்பாடுகள் பற்றி...

ப: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பணிகள் 13 ஆண்டுகளை கடந்து 14ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த காலத்தில் நாங் கள் நடத்திய உரிமை போராட்டங்கள் மற்றும் சமூக நல்லிணக்க செயல்பாடு களால் தென்னிந்தியா மக்கள் அனைவ ராலும் அறியப்பட்ட ஒரு வலுவான சக்தியாக எங்களை உருவாக்கி இருக்கிறது.
தமிழக அரசாங்கத்தில் சிறுபான் மையினரான இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலை வாய்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு முதற்கட்டமாக 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித் துள்ளது. இது எங்களுக்கு கிடைத்த வரலாற்றுபூர்வ வெற்றியாகும். இதன் விளைவாக எங்கள் இயக்கத் திற்கு முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தி யில் பன்மடங்கு ஆதரவு பெருகியுள்ளது. இந்த நிலையில் தான் எங்களது அடுத்த கட்ட முயற்சியாக தமுமுக சார்பாக ஒரு அரசியல் கட்சியை மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

கே: கடந்த ஆண்டு மலேசிய வருகை யின் போது தாங்கள் நண்ப னுக்கு வழங்கிய பேட்டியில் நேரடி அரசியல் பற்றி எந்த சிந்தனையு மில்லை என்றீர்கள்... ஆனால் தற் போதைய உங்கள் நிலையில் மாற்றம் தெரிகிறதே?

ப: நாங்கள் அரசியல் தளத்திற்கு செல்வதில் ஆர்வமில்லாத ஒரு இயக்க மாக இருக்கத்தான் முனைப்புக் காட்டி வருகிறோம். ஆனால், முஸ்லிம் சமுதாய மக்களின் பலமான நிர்பந்தத்தின் காரணமாக இஸ்லாமியர்களுக்கான அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனை நாங்கள் விரும்பி போகவில்லை. சமுதாய மக்களின் நிர்பந்தத்தினால் இந்தப் புதிய முடிவை எடுத்துள்ளோம். அதேநேரம் தமுமுக ஒரு சமுதாய இயக்கமாக பொறுப்புடனும் வீரியத்து டனும் செயல்படும். தமுமுகவுடைய ஒரு அரசியல் பிரிவாக மட்டுமே புதிய கட்சி செயல்படும்.

கே: இஸ்லாமிய சமுதாயத்தை பிரதிநிதித்துதான் ஏற்கெனவே பல கட்சிகள் உள்ளனவே? புதிதாக நீங்கள் எதற்கு?

ப: கண்ணியமிக்க பெருந்தலைவர் காயிதேமில்லத் காலத்தில் தமிழகத்தில் 27 இஸ்லாமியர்கள் சட்டமன்ற உறுப் பினர்களாக இடம்பெற்றிருந்தனர். ஆனால், இன்றைய நிலை என்ன? அப்துல் சமது, அப்துல் லத்தீப் ஆகியோரின் மறைவுக்கு பிறகு இஸ்லாமியர்களின் அரசியல் பலம் வெற்றிடமாக இருக்கிறது. முஸ்லிம்களின் அரசியல் கட்சிகள் பலமிழந்து அதனுடைய பிரதிநிதிகள் கூட சமூக மக்களின் குரலை பிரதிநிதிக்காமல் திமுக உறுப்பினர்களாக சட்டசபையில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் நம்முடைய மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் தகுதி யான சமுதாய பிரதிநிதிகளை தேர்ந்து எடுத்து அனுப்ப வேண்டிய கடமையும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில் தமிழகத்தில் வலுவான சமுதாய இயக்கமாக இருக்கும் நாங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்பா விட்டால் வேறு யாரும் அவ்விடத்தை பூர்த்தி செய்ய முடியாத நிலைதான் உள்ளது.
நாங்கள் பாதைகளை மாற்றிக் கொள்ளவில்லை. பயணத்தை விரைவு படுத்த புதியபுதிய வாகனங்களை பயன் படுத்துகிறோம். சமுதயாப் பணிகள் எவ் வளவு அவசியமோ அதே அளவுக்கும் அரசியல் பணியும் அவசியம் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்துள்ளோம்.

கே: அரசியல் கட்சியாக உங் களது இலக்கு என்ன?

ப: நாங்கள்தான் அடுத்த முதல்வர் என்று கூறவில்லை. அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது நாங்கள் தான் என்று சபதம் எதுவும் எடுக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் முஸ்லிம் சமுதாயத் தினர் 10 சதவிகிதம் இருக்கின்றனர். 25 சட்டமன்ற உறுப்பினர்களும், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மேயர் பதவி ஆகியவையே எங்களது உச்சக்கட்ட இலக்கு. எங்களுடைய உயரத்துக்கேற்ப எங்களது எல்லைகளை வரையறுத்துள்ளோம். இந்த அளவுக்குள் இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக் கையும் உறுதியும் எங்களிடம் உள்ளது.

கே: அரசியலில் வெற்றி பெற சமுதாய ஆதரவு மட்டும் போதுமா?

ப: நாங்கள் இஸ்லாமிய சமுதாயத்தை மட்டும் நம்பி அரசியலில் இறங்கவில்லை. தமிழகத்தில் எங்களைப் போன்ற மற் றொரு சிறுபான்மை இனமான கிறிஸ்து வர்கள் 10 சதவிகிதத்தினர் உள்ளனர். அவர் களின் ஆதரவும் எங்களுக்கு வலுவாக உள்ளது. அதுமட்டுமன்றி எங்களுடைய ரத்ததான சேவைகள், ஆம்புலன்ஸ் உதவிகள், கல்வி மற்றும் மனித நேய பணிகளால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக் கான மற்ற சமூக மக்களும் சகோதரர் களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

கே: தமுமுக என்ற இயக்கத்திற்கு கிடைத்த வெற்றிபோல் அரசியலில் எந்த அளவுக்கு வெற்றி பெறமுடியும்?

ப: நாங்கள் அரசியல் களத்தில் இறங்க போதுமான வகையில் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே நேரம் அரசியலில் வெற்றி தோல்வி மட்டுமே கணக்கில் கொள்ளக்கூடிய சாரசரி அரசியல் இயக்கமாக இருக்க மாட்டோ ம். கொள்கைகளையும் லட்சி யங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படக்கூடிய நாங்கள் எத்தகைய நிலை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு புயல் வேகத்தில் இயங்குவோம்.

கே: உங்களை ஒரு மதவாத கட்சி யாக முத்திரை குத்த வாய்ப்புள்ளதே?

ப: நாங்கள் சாதிய கட்சியோ மதவாத கட்சியோ இல்லை. சமூக நல்லிணக்கத்தைக் காப்போம் சம உரிமைகளைப் பெறுவோம் என்பதுதான் எங்களது குறிக்கோள்.
மதவெறி, சாதி வெறி, மொ௞ வெறி, இன வெறி போன்றவையெல்லாம் அரசி யலில் வ௞ப்பறியாக உள்ளது என்பதுதான் எங்களது குற்றச்சாட்டு. இந்தத் தவறுகளைத் தீயிட்டு கொளுத்தி விட்டு நெறி தவறாத மனிதர்களை உருவாக்க நினைப்பதுதான் எங்களின் அரசியலில் சரியான பணியாக இருக்கும்.

கே: மக்கள் முன்னேற்றக் கழகத் தின் துவக்க விழா எப்போது?

ப: அரசியல் கட்சியை முறையாக அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அப்பணி நிறைவு பெற்றவுடன் சென்னை யில் மிகப் பிரமாண்டமான மாநாட்டைக் கூட்டி கட்சியின் தொடக்க விழாவை நடத் துவதற்கு முனைப்பு காட்டி வருகிறோம்.

கே: தனித்து போட்டியா அல்லது கூட்டணியா?

ப: கூட்டணி என்பது தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாக அன்றைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்.

கே: மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் பற்றி உங்களது கருத்து?

ப: மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் நிலை மிக கவலைக்குரிய தாக உள்ளது. மலாய் சமூதத்திற்கும் உள்ளேயும் நுழைய முடியாமல், இந்திய சமூகத்திற்குள்ளும் நிற்க முடியாமல் திசை தெரியாத கப்பலாக தவித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
மலேசியாவை வளப்படுத்தியதில் நெறிப்படுத்தியதில் மலேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் 4 லட்சத்திற் கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம்களின் பங்கும் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், இந்திய முஸ்லிம்கள் என்று சொல்லி கொண்டு நாடாளுமன்றத்திலோ, செனட் சபை யிலோ, சட்டமன்றத்திலோ, ஊராட்சி களிலோ பிரதிநிதிகள் இல்லை. இந்திய முஸ்லிம்களுக்கு என்று கோலாலம்பூர், கிள்ளான், பினாங்கு, ஈப்போ, ஜொகூர் பாரு மற்றும் பல இடங்களில் பள்ளி வாசல்கள் இருக்கின்றதே தவிர பள்ளிக்கூடங்கள் இல்லை. இதைப்பற்றி இந்திய முஸ்லிம் தலைவர்கள் மலேசிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
உணவகங்களும் மளிகைக்கடை களும் மட்டுமே வாழ்க்கையாக இருக் கக் கூடாது. ஒரு சமூகம் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் இருண்டு போய்விடும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். சின்ன சின்ன சச்சரவுகளை புறந்தள்ளிவிட்டு பொது ஒற்றுமையோடு சமுதாய பிரச்சினை களை கருத்தில் கொள்ளவேண்டும். மலேசியாவில் வசிக்கும் இந்திய முஸ் லிம்கள் தங்கள் தாய்நாடு மலேசியா தான் என்பதை மறந்து விடக்கூடாது என்றார் தமீமுன் அன்சாரி.

கோவை முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை சிறை முன் முற்றுகை முஸ்லிம் பெண்களுக்கு தடி அடி
கோவையில் பரபரப்பு பெண்கள் ஆவேசம் !!


கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி கோவை ஜெயில் முன் 200க்கும் மேற்பட்டோர் இன்று மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையில் தண்டனை அனுபவித்த 296ஆயுள்தணடனை கைதிகள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். கோவைகுண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று 68முஸ்லிம் சிறைவாசிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.இவர்களையும் விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முன் முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்கள்,குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை 9மணிக்கு திரண்டு முற்றுகையிட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஆர்.டி.ஒ. பாலச்சந்திரன் அங்கு விரைந்தார். அவரிடம்,முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் உங்கன் கோரிக்கையை எழதி தாருங்கள்.இதைனை அரசுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். இதையடுத்து அவர்கள் கோரிக்கைகளை அவரிடம் எழுதிக் கொடுத்தனர்.பின்னர் முற்றுகையைக்ககைவிட்டு கலைந்து சென்றனர்.கோவை சிறை முன் பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போலிஸ் அதிகாரிகள் துனை கமிஷனர் ராஜேந்திரன்.மற்றும் உதவி கமிஷனர் கோபால்சாமி மற்றும்போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
சுட்டுத்தள்ளுங்கள் சிறைவாசிகள் ஆவேசம்.....
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களையும் விடுதலை செய்யக்கோரி கோவையில் அவர்களது உறவினர்கள் முற்றுகையிட்டபோது, சிறைக்குள் சிறைவாசிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விடுதலை வழங்குவதில் பாரபட்சம் கூடாது, எங்களையும் விடுதலைசெய்ய வேண்டும்.இல்லையெனில் தடையை மீறி சிறையிலிருந்து வெளியேறுவோம்.வேண்டுமானால் எங்களை சுட்டுத்தள்ளுங்கள் என முஸ்லிம் சிறைவாசிகள் கோஷமிட்டனர்.இதனால் சிறைகுள் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயில் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் அவர்களை சமாதானப்படுத்தினர்.பின்னர் ஆர்ப்பாட்டம் செய்த சிறைவாசிகள் அமைதியடைந்தனர்.
இந்த சிறைமுன் நடந்த மறியல்க்கு சிறுபான்மை உதவி அறக்கட்டளை தலைவர் உமர்ஷா தலைமை நடந்தது.இதில் சிறையில் இருந்து 1ஆண்டுகளுக்கு முன் விடுதலையான அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல் சென்னை புழல் சிறையில் இருந்து 117கைதிகளும்,
வேலுர்சிறையில் இருந்து 9பெண்கள் உள்பட 131கைதிகளும், திருச்சி சிறையில் 7பெண்கள் உள்பட 181கைதிகளும்,பாளையங்கோட்டை சிறையில்இருந்து 272கைதிகளும்,கடலுர்சிறையில் இருந்து 128கைதிகளும்,சேலம் சிறையில்இருந்து 10கைதிகளும்,மதுரை சிறையில் இருந்து 266கைதிகளும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.கேரள சிறையில் இருந்து தமிழக கைதிகள் 3பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அனால் முஸ்லிம் சிறைவாசிகளின் நிலை என்ன ?
சமுதாய தலைவர்களே இதற்கு என்ன தீர்வு !!
இன்ஷா அல்லாஹ் விரைவில். சிறைவாசி குடும்பங்களின் தொடர்
போராட்டம் தெடரும்...
செய்திகள் : கோவை தங்கப்பா

பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்
[Bombs Made by Narendra Modi]

கடந்த 2006 ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு, 2006ல் மும்பை இரயில்களில் 7 குண்டு வெடிப்புகள், 2006 மஹாராஷ்ட்ரா மாநில மாலேகானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புகள், 2007 ஹைதராபாத் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்புகள், 2008 ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு வெடிப்புகள், 2008 பெங்களுர் குண்டு வெடிப்புகள். இன்று 2008 செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியிலோ 6 இடங்களில்....இப்படி நாசகார செயல்களினால் பலியெடுக்கப்பட்ட மனித உயிர்கள் பல நூறுகளைத் தாண்டும்.

இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஒரே ஒரு தகவலைத்தான்; சொல்லும். அது குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுகனமே பயங்கரவாதி அத்வானி சின்னத்திரைகளில் தோன்றுவார். குண்டு வெடிப்புக்கு பாக்கிஸ்தானில் லஷ்க்கரே தைய்யியா அல்லது இல்லாத சிமி அமைப்பே காரணம் என்பார். அப்படியே ஆளும் காங்கிரஸ் அரசை ஒரு பிடிபிடிப்பார். வழக்கம் போல அப்பாவி முஸ்லிம்கள் நாடுமுழுவதும் சிறைவைக்கப் படுவார்கள். வெடிகுண்டு சோதனை என்ற பெயரால் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நாடே அமளிதுமளியாகும். இதுதான் நம் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை.

தேசபிதா காத்தியடிகளை கொலைசெய்த, சங்பரிவார வெறியனும் தேசதுரோகியுமான கோட்சே தனது கைகளில் இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சைகுத்திக் கொண்டும், முஸ்லிம்களைப் போல கத்னாவும் செய்திருந்தான் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை. காரணம் காந்தியடிகளை கொலைசெய்தது ஒரு முஸ்லிம் என்று வாதந்தியைப் பரப்பி முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு, ஒட்டு மொத்த தேசத்தையே முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பலாம் என்று திட்டமிட்டனர் அன்றைய சங்பரிவார கொலை வெறியர்கள். ஆனால் குள்ளநரிகளின் சாயம் மிக விரைவிலேயே வெளுத்து, சங்பரிவாரத்தின் கோரக் கொலைவெறி முகத்தை நாடே கண்டு அதிர்ந்தது.

தேசத்துரோகி கோட்சேயின் அதே பர்முலாவை கையாண்டு, அவனது வாரிசுகளான இன்றைய சங்பரிவார பிஜேபியினர் முஸ்லிம்களுக் கெதிராக தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இவர்கள் நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள். இதற்கோர் சிறந்த உதாரணம் கடந்த 2006ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகள். மாலேகான் மசூதியில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் பிஜேபியினர் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். மசூதிக்குள் குண்டுகளை வைத்தது முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் திரிபுவாதம் பண்ணுவதற்கு வசதியாக தொப்பிகளையும், ஒட்டுதாடிகளையும் அவ்விடத்தில் விட்டுச்சென்றனர்.

இதை போலத்தான் குஜ்ராத்திலும். ஓடிய ரயிலை தாங்களாகவே கொளுத்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் உயிரை நரவேட்டையதும், முஸ்லிம் பெண்களை கற்பழித்ததும், அவைகளைத் தொடர்ந்து டெகல்கா பத்திரிக்கை இவர்களது கோரமுகத்தை கிழித்ததும் நாடே அறியும்.

கடந்த 4 வருடங்களின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி (முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளிக்காமை, அமெரிக்காவுடன் அனு ஒப்பந்தம் ஆகியவைகளைத் தவிர்த்து) பெரிய அளவில் குறைசொல்ல முடியாத அளவிற்கு நல்லதொரு ஆட்சியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு திட்டங்கள் பல தீட்டி அதில் வெற்றி நடைபோடும் இக்காங்கிரஸ் ஆட்சி இனியும் நீடித்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியினர் எதிர்க்கட்சி இருக்கையில்கூட அமர இயலாத சூழ்நிலை வந்துவிடும். சங்பரிவார பிஜேபியினர் இவைகளை புறிந்துகொண்டதின் கோரவிளைவுதான் தொடரும் இக்குண்டுவெடிப்புகள்.

பெங்களூரில் பிஜேபியினரின் தேசிய செயற்குழு கூடியிருந்த தருனத்தில், தலைநகர் டெல்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு, அதன்பின்னர் தொலைக்காட்சிகளுக்கு முன்னின்று பேட்டி என்ற பெயரில் மெகா சீரியல் நடத்திய பிஜேபி தலைவர்களின் பேட்டிகளைக் கண்ட எவரும் இக்குண்டுவெடிப்பின் பின்னனியிலுள்ள இரகசியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்வர்.

பிரதமர் பதவி வெறியில் உறக்கமில்லாமல் சுற்றித்திரியும் ரத்தயாத்திரை புகழ் ரத்தக்காட்டேரி அத்வானி, குண்டு வெடித்த சில மணித்துளிகளிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொடா சட்டம் கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார்.

நரமாமிச உண்ணி நரேந்திரமோடியோ இதற்கு ஒருபடி மேலேபோய் 'நாங்கள் 10 நாட்களுக்கு முன்னரே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இக்குண்டுவெடிப்புத் தகவல்களை அளித்துவிட்டோம்' என்று படீர் என உண்மையை போட்டு உடைத்தார். உண்மைதான்! குண்டு வைக்க இருப்பவன்தானே எப்படி எங்கே எத்தனை குண்டுகள் வெடிக்க இருக்கின்றது என்பது தெரியும். பின்னர் நரேந்திரமோடி தான் வாய்உளறி விட்டதை சுதாரித்துக் கொண்டு 'தேசநலன், தீவிரவாதிகள்' என்று ஏதேதோ சொல்லி நிலமையை சமாளித்தார்.

குஜ்ராத்தில் முஸ்லிம் இனப்படுகொலைகளை நடத்திய நரேந்திர மோடி, அவன் நடத்த இருந்த டெல்லி குண்டு வெடிப்புகளை பற்றி பிரதமருக்கே அளித்த எச்சரிக்கையை உளவுத்துறைகள் கண்டுகொள்ளாமல் கோட்டைவிட்டது ஏனோ? அவ்வாறு அலட்சியம் செய்ததின் விளைவுதான் எமது சகோதரர்கள் 30 பேர்கள் பலியாக்கப்பட்டும், 100ம் அதிகமானோர் மருத்துவமனைகளில் உயிருக்கப் போராடும் துக்கநிலை ஏற்பட்டுள்ளது.

கோப்புகளை மூடுவதற்காக, குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் லஷ்க்கரே தைய்யியா, அல்லது சிமி என்று கூறி நாட்டு மக்களை இனியும் சமாதானப்படுத்திட இயலாது என்ற முடிவிற்கு வந்த உளவுத்துறையினர், தற்போது இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு புதிய திரைக்கதையை இயற்றுகின்றனர். பெங்களூரில் சங்பரிவார தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்திற்குள் குண்டுகள் வெடித்து, பயங்கரவாதிகள் அனைவரும் உடல் சிதறி செத்திருந்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் குண்டு வைத்தனர் என்று உளவுத்துறையினர் கற்பனை செய்வதில் ஒரளவு அர்த்தமிருக்கும். நம் இந்தியத் திருநாடு வல்லரசாக ஆகுவதற்கு பெரும் தடையாக இருக்கும் இச்சங்பரிவார குண்டர்கள் தொலையட்டும் என்று இந்தியன் முஜாஹிதீன் பெயரில் யாரோ சிலர்கள் குண்டுகள் வைத்திருக்கின்றனர் என்று நாட்டுமக்களும் நம்பலாம்.

ஆனால் அநியாயமாக ஒர் உயிரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலைசெய்வதற்குச் சமம் என்று போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களையும் உளவுத்துறையினர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பலிகிடாவாக்குவது என்ன நியாயம்? இதனால் உண்மைக் குற்றவாளிகள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டே வருகின்றனர் என்பதே உண்மை.

இக்குண்டுகள் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருட்கள் மூலம் தயார் செய்யப்பட்டதாக அனைத்து தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் இருப்பது இத்தேசதுரோக சங்பரிவார பிஜேபி குண்டர்களே என்பதில் மத்திய அரசுக்கு இனியும் சந்தேகம் இருந்தால், நாக்பூரிலும், மத்திய பிரசேத்திலுள்ள போபாலிலும், செயல்படுகின்ற சங்பரிவார வெறியர்களின் துப்பாக்கித் தொழிற்சாலைகள் மற்றும் ஆயிதக் கிடங்குகளை மத்திய அரசு உடனடியாகக் கைப்பற்றவேண்டும். அப்போது தெரியும் தலைநகரில் வெடிக்கப்பட்ட குண்டுகளுக்கும், இதற்க முன்னர் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கம் அமோனிம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று?.

மேலும் சாஹா பயற்சி என்ற பெயரில் ஆண்களுக்கும், துர்காவாகினி என்ற பெயரில் மகளிர் அமைப்புகளையும் உருவாக்கி ஆயுதப்பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்து, நாடு முழுவதுமுள்ள இவர்களின் அலுவலகங்களை ஒரேநேரத்தில் சோதனை நடத்தினால் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படுபவர்கள் யார்? என்பதும் வெட்டவெளிச்சமாகும்.

இதில் முக்கியமான ஒன்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பின்னர் வழக்கமாக ஒரு ஈமெயில் உளாவரும். இன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னரும் வெளியான முகவரியில்லாத அந்த ஈமெயிலில், டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும்;, பெங்களூரிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்னையையும் தாக்க இருப்பதாக வெளியான இச்செய்தி உண்மையா அல்லது மிரட்டலா என்பது நரேந்திர மோடிக்கும், பிஜேபியினருக்குமே வெளிச்சம். இருப்பினும் அமைதிப் பூங்காவாம் நம் தமிழக மண்ணில் பிஜேபியினரின் இந்துத்துவ தீவிரவாதத்திற்கு எவரும் பலியாகி விடக்கூடாது. இத்தீவிரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் கடமை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரையும், தமிழக காவல்த்துறையுமே சாரும்.

தொடரும் குண்டு வெடிப்புகளுக்கு லஷ்க்கரே தைய்யியா, சிமி, இந்தியன் முஜாஹிதீன் என்று இனியும் உளறிக் கொண்டிராமல் உண்மை தீவிரவாதிகளான சங்பரிவார குண்டர்கள் மத்திய மாநில அரசுகள் கைது செய்யுமா? நாட்டில் அமைதி நிலவ வழிவகுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி : இஸ்லாமிய இணையப் பேரவை

துக்ளக் இதழில் காதர் மொய்தீன் விஷமத்தனமும் சமுதாய வேதனையும்..

துக்ளக் இதழில் காதர் மொய்தீன் விஷமத்தனமும் சமுதாய வேதனையும்..
அறிவை பறைசாற்றிய மார்க்கத்தில் அருள்மறை குர்ஆன் இறங்கிய ரமலான் மாதத்தில் இளமையின் வேகமும், முதுமையின் ஞானமும் இல்லாத தலைவர்கள். “ஆம்“ பேராசிரியர்கள் அல்ல பேருக்கு ஆசிரியர்கள். செம்பறி ஆடுகளாய் முட்டிக்கொள்கிறார்கள். குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும். நையாண்டி “சோ“ துக்ளக் இதழ் சிரிக்கிறது. தகுதியற்றவர்களை, தலைவர்களாக ஆக்கினால் அவர்கள் சொல்லும் செயலும் தகுதியற்றவர்கள் என்று காண்பித்துவிடுவதை போன்று சமுதாய சந்தையில் பொறுப்பற்ற முறையில் காதர் மொய்தீன் பழி சொல்லி புழுதி வாரி இறைத்திருக்கிறார்.

நடுநிலைபோல் நரித்தனம் செய்து நஞ்சு வைக்கும் வஞ்சக எதிரியின் கூடாரத்திற்கு ஆம் துக்ளக் பத்திரிக்கைக்கு ஒற்றர் வேலையை கச்சிதமாய் செய்திருக்கிறார். துரோகிகளை இ°லாம் காணாதது அல்ல. ராமனையோ, ராவணனையோ ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்வது காதர் மொய்தீன் நம்பிக்கை சுதந்திரம். ஆனால் அரசியல் சார்ப்பற்று மதம் கடந்து மனித நேய பணியாற்றும் த.மு.மு.காவை தமிழ்நாட்டின் தீவிரவாத “லஷ்க்கரே-யி“தைய்பா என்று இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை வாசித்திருப்பது கண்டனத்திற்குரியது. வழி சொல்வதற்கு வக்கற்று வீண்பழி சொல்லியிருக்கிறார். ஆயிரக்கணக்கான தொண்டர்களின் அறப்பணியை பாராட்டி உங்கள் தொண்டு தொடரட்டும் என்று இரண்டு ஆம்புலன்சை டாக்டர் கலைஞர் வழங்கியதை மறந்து விட்டு, தி.மு.க. கூடாரத்தில் பதவி சுகத்தில் குளிர் காய்ந்து கொண்டு, பொய் பேசுவதற்கே எனக்கு வாய் இருக்கிறது என்று வாய்சவடால் விட்டு இருக்கிறார். “பாவம்“ என்ன பேசுவது என்றே தெரியாமல் உளறியிருக்கிறார்.

அரசியலில் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். கருத்து முரண்பாடுகள் கூட இருக்கலாம். அபாண்டமாக த.மு.மு.காவை காஷ்மீர் தீவிரவாத இயக்கத்தோடு இணைத்து பேசியிருப்பது. சமுதாய துரோகிகளின் பட்டியலில் தன்னையும் இணைத்துள்ளார். எங்கே எது நடந்தாலும் முஸ்லீம்கள் மேல் பழியை போடும் இந்த காலகட்டத்தில் உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருப்பதால் வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ, என்று புரியாமல் தமிழக முஸ்லீம்கள் மேல் தீவிரவாத முத்திரை குத்தியிருக்கிறார். காயிதே மில்லத் சமுதாயத்திற்கு ஒளி கொடுத்து வழிகாட்டினார். மில்லத் என்று பெயர் வைத்துக்கொண்டு சமுதாயத்தின் விழி பரித்து வழிகெடுக்கிறார். கடல் இருக்கும் வரைக்கும் அலைகள் இருக்கும். காதர் மொய்தீன் போன்ற கருத்து குருடர்கள் இருக்கும் வரை சமுதாயம் சந்தி சிரிக்கும். அதோ ராமகோபாலனும் காதர் மொய்தீனும் வாழ்க என்று குரல் கேட்கிறது. இஸ்லாமிய சகோதரர்களே கிளிஞ்சல்களை கடல் தூக்கி வீசுவது போன்று காலம் இவர்களை தூக்கி வீசும். சமுதாயம் கடந்த காலத்தை நினைவில் கொள்ளட்டும். தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது ஆன்றோர் மொழி சகோதரர்களே நீங்கள் முஸ்லீம்கள் சத்தியத்திற்கு சான்று பகருங்கள்.

Thanks to Source: www.idmk.org

முஸ்லிம்கள் மீது தொடரும் தடியடி மனித நீதிப் பாசறை கண்டனம்


பள்ளிவாசல் வழியாகவும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகவும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் கலவர நோக்கில் வந்த சங்பரிவார சக்திகளுக்கு ஜனநாயக அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக, புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் மீது தடியடி என்ற பெயரில் கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தைக் கூட கொடுக்காமல் காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமாக பள்ளிவாசலுக்குள் "பூட்ஸ்' கால்களுடன் நுழைந்து ரத்தம் வழிந்தோட மயங்கி விழும் அளவிற்கு நோன்பு வைத்திருந்த முஸ்லிம்களைத் தாக்கி பள்ளிவாசல் ஜன்னல் களையும் உடைத்து நொறுக்கியிருக்கின்றனர். தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு வந்த அப்பாவி முஸ்லிம்களை கைது செய்திருக்கின்றனர். காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித் தனமான கொடூரச் செயலை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.

தடியடியில் காயம்பட்ட முஸ்லிம்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிடாமல் இரத்தம் வழிந்தோடும் நிலையில் பள்ளிவாசலுக்குள்ளே தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற கொடூர செயலை அரங்கேற்றியிருக்கின்றது காவல்துறை. இதை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது. இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார ஃபாசிஸக் கும்பல் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் பள்ளிவாசல் வழியாஉகவும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தெருக்கள் வழியாகவும் சென்று மததுவேஷமாக பேசி முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அதில் பலிகடாக்களாக ஆக்க திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று கூறிக் கொண்டு கடையநல்லூர், பேர்ணாம் பட்டு, வேலூர், வேடசந்தூர், திண்டுக்கல், முத்துப் பேட்டை என முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தடியடித் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை முஸ்லிம்களிடையே ஆழ்ந்த அதிர்ச்சியையும் பெரும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாகவும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாகவும் கலவர நோக்கில் சங்பரிவார சக்திகள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்தான் சமூக அமைதி கெடுவதற்கும், மதக் கலவரத்திற்கும் காரணம் என பல வருடங்களாக பல உண்மையறிவும் குழுக்கள் அறிக்கை சமர்ப்பித்தும் இந்துக்களும், முஸ்லிம்களும் பல்வேறு சமயங்களில் கருத்து தெரிவித்தும் கூட இதில் அரசு எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையே ஏன்? மக்கள் ரத்தம் தானே சிந்துகிறது என்ற அலட்சியமா? எனும் கேள்வி மக்கள் மனதில் எழும்பியுள்ளது.

ஆகவே தடியடி நடத்தி முஸ்லிம்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையின் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது. இந்த கொலைவெறியாட்டத்தை முன்னின்று நடத்தி சிறுபான்மை விரோதப் போக்குடனும் செயல்பட்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி. அமீத் குமார் சிங், திருச்சி மாவட்ட எஸ்.பி. கலிய மூர்த்தி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆபாத் குமார், எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், எஸ்.பி. இன்ஸ்பெக்டர் சிவ பாஸ்கரன், மன்னார்குடி டி.எஸ்.பி. மாணிக்க வாசகம் ஆகியோரை உடனே இடமாற்றம் செய்து, துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது. முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாக கலவர நோக்கில் சங்பரிவார சக்திகள் நடத்தும் ஊர்வலத்தை ஒருபோதும் அரசு அனுமதிக்கக் கூடாது. சதுர்த்தி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி அல்லாத மாற்றுப் பாதை அமைத்து நிரந்தர அமைதிக்கு வழிகாண வேண்டும் என்ற கோரிக்கையை மனித நீதிப் பாசறை முன் வைக்கின்றது.

மேலும் வருங்காலங்களில் முத்துப்பேட்டை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் அமைதிக்கான இந்த செயல்திட்டத்தை அமுல்படுத்தி மாநிலம் முழுவதும் நிரந்தர அமைதிக்கு வழிகாண வேண்டும் என்ற கோரிக்கையும் மனித நீதிப் பாசறை முன் வைக்கின்றது. முத்துப்பேட்டையில் தனது காட்டுமிராண்டித் தனத்தை மறைப்பதற்காக காவல்துறையினர் பல அப்பாவி முஸ்லிம்களைகைது செய்துள்ளனர். காவல்துறையால் திட்டமிட்டு பலிகடாக்களாக ஆக்கப்பட்ட இந்த அப்பாவி முஸ்லிம்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மனித நீதிப் பாசறை தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. தடியடியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது.


இப்படிக்கு
அ. ஃபக்ருதீன்,
மாநிலச் செயலாளர்,
மனித நீதிப் பாசறை.

ஈரான்-அமீரகத்தில் நிலநடுக்கம்

ஈரானிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பகல் மூன்று மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் அமீகரத்தில் எதிரொலித்துள்ளது. ஈரான் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.இந் நிலநடுக்கம் துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது.இதையடுத்து கட்டடங்கள், அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பாதிப்பு குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை.

- தட்ஸ் தமிழ் செய்திகள்