புனித ஹஜ் பயணம் 2008 : விண்ணப்பம் வழங்கல்

தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2008 ஆம் ஆண்டில் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மத்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்
நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ்-2008 ஆம் ஆண்டிற்கான ஹஜ் விண்ணப்பங்கள்
மற்றும் அச்சடிக்கப்பட்ட வழிமுறைகளை, சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள
தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து விண்ணப்பம் ஒன்றுக்கு சேவைக்கட்டணம் ரூ.100/- வீதம் சென்னையில் மாற்றக்கூடிய வகையில் 'தமிழ்நாடு மாநில ஹஜ் குழு'
பெயரில் கேட்பு வரைவோலை/பணக்கொடுப்பாணை கொடுத்து 1-5-2008 முதல் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் கோரும் கோரிக்கைகளை,
விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ற்கான வரைவோலையுடன் (டிமாண்ட் டிராப்ட்) சென்னை, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். வழிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ஆறு விண்ணப்பங்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் நபரொன்றுக்கு, அந்நியச் செலாவணி முன்பணம் மற்றும் பலவகைக் கட்டணங்களுக்காக
ரூ.10,700/-(ரூபாய் பத்தாயிரத்து எழுநூறு மட்டும்)-ஐ பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.30361856116-ல் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும். பூர்த்தி செடீநுயப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டிய கடைசி நாள் 31-5-2008 ஆகும்.
3. புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள், கோரிக்கை மனுவுடன் விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.100/-ஐ வரைவோலையாக (டிமாண்ட் டிராப்ட்) செலுத்தி, நேரடியாகவோ அல்லது
தபால் மூலமாகவோ விரைந்து அனுப்பி விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும்,அவற்றை கடைசி தேதிக்கு முன்னர் சமர்ப்பித்து விண்ணப்பங்கள் உறுதி செலுத்துவதில் ஏற்படும்
சிரமங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


TMMK PRESIDENT AWARDED DOCTORATE FOR HIS THESIS ON ISLAMIC BANKS

Prof. M.H. Jawahirullah, President of Tamilnadu Muslim Munnetra Kazhagam, who is also a faculty member in Department of Commerce, Islamiah College, Vaniyambadi has been awarded Ph.D by the University of Madras for his doctoral thesis on Islamic Banks.

In the Public Viva-Voce Examination held at the New College Auditorium on 29th April which was attended by a galaxy of Academicians, the Viva Examiner deputed by the University of Madras, Dr. V. Balu (Former Controller of Examinations, University of Madras), declared after the examination that the thesis of Professor M.H. Jawahirullah on 'Performance Evaluation and Assessment of Service Quality in Islamic Banks: A Study with special reference to Bank Islam Malaysia as highly commended.

Islamic Bank also known as Interest Free Bank and Profit and Loss Sharing Bank is a financial institution that operates with the objective to implement and materialize the economic and financial principles of Islam in the
banking arena. It is defined as "a financial and social institution whose objectives and operations as well as principles and practices must conform to the principles of Islamic Shari'ah
(Jurisprudence), and which must avoid interest in any of its
operations"
and "a Company which carries on Islamic Banking business. Islamic Banking business means banking business whose aims and operations do not involve any element which is not approved by the religion Islam." It follows; therefore, that what makes Islamic Banking "different" from conventional western banking is that there can be no interest (Riba) paid or charged for any transaction or service to ensure justice, welfare and non-exploitation. Of course, the investments of an Islamic Bank must be channelled to the Islamic Shari'ah approved sectors by Islamic modes of finance like Mudaraba, Musharaka, Murabahah, Bai-Muajjal, Bai-Salam, Ijara, Hire Purchase, etc., which are based on the sharing of risk and profit. Islamic Bankers in effect generate "profit and loss" transactions in which the lender or bank shares in gains or losses based on the economic viability of the project and the credit worthiness of the customer.

There are more than 300 Islamic Banks worldwide with a market capitalisation in excess of US$ 13billion. Assets of Islamic Banks worldwide are estimated at more than US$ 265 billion and financial investments above US$ 400 billion. Islamic Bank deposits are estimated at over US$ 202 billion worldwide with average growth between 10 and 20 percent. Prof. M.H.Jawahirullah's research is a pioneering doctoral thesis on Customer Satisfaction and Service Quality in Islamic Banks. It had taken for case study Bank Islam Malaysia a leading Islamic Bank in Malaysia. This study also deals with the issue of introduction of Islamic Banking in India. This part of the research is of utmost importance in the Indian context since the Prime Minister of India Dr. Manmohan Singh has appointed a Committee to look into the aspects of introducing Islamic Banks in India.

a summary of the findings of the this research relating to the indian context is given below:

.

Issues and Constraints in the introduction of Islamic Banks in India

Islamic Banking and finance is an innovation of the world in present times. India has largely remained on the outer fringe of the development of Islamic Banking and finance. Except for those countries where Islamic Banking is being introduced on an economy wide scale, most Islamic Banking institutions have been established in the private sector. In view of the on-going processes of liberalization and globalization, restructuring of the banking sector is long over-due. Introduction of Islamic Banking in the private sector shall boost private commercial banking in India. India has lately adopted the policy of opening up the banking sector and many foreign banks are now operating in India. India should learn from the experiences of Singapore and could invite more foreign capital to the country if it allows not only Foreign Islamic Banks but also conventional Commercial banks to open Islamic windows as have been done in several European countries. The Indian Banks Association (IBA) has also appealed for allowing Islamic Banking in India. IBA Chairman M.B.N. Rao has gone on record saying "it (Islamic Banking) is an idea, whose time has come. The IBA will study the concept, but will wait for the regulatory framework by the RBI to run it"

In view of the fact that Islamic financial techniques are not based on interest, Islamic Banking has a special relevance for micro credit institutions in satisfying financial needs of weaker sections of Indian society. Indian Banks are regulated by the Indian Banking Regulation Act, 1949, The Reserve Bank of India Act, 1935, The Negotiable Instruments Act and Cooperative Societies Act, 1866. None of these laws admit the possibility of an interest free bank. Hence these laws will have to be amended significantly to admit such a possibility and to evolve a suitable system of regulation and control. The following sections in the Banking Regulation Act have to be taken into consideration while amending the Act or enacting a new legislation permitting Islamic Banks in India:

Section 21 of the Banking Regulation Act requires payment of interest on Saving Bank Account deposits. This section should be amended to permit Al Wadiah -Saving Account in which the deposits do not receive any interest but receive Hiba (gift) in case the banks use the funds at its own risk. Section 21 of the Banking Regulation Act disallows products like Mudarabah (trust financing) where the bank can invest the money in equity funds (in India, equity exposure is determined by a separate set of rules), and the client has complete freedom in the management.

Sections 5, 6 of the Banking Regulation Act indicate the forms of business a banking company can undertake, and does not allow any kind of profit-sharing and partnership contract like Musharakah (for project finance and SME credit):— the basis of Islamic Banking.

Section 9 of the Banking Regulation Act prevents the bank from owning any sort of immovable property other than for private use. This section thus prevents banks from introducing Ijarah (Leasing) under which Islamic Banks finance equipment, building or other facility for the client against agreed rental while owning the asset. Besides the usual curbs on acquiring immovable property, under the current Indian Laws offering Islamic Banking products many not be bankable due to stamp duty, central sales tax and state tax laws that will apply depending on the nature of the transfer. In markets like the UK, there is separate law that makes it possible to launch Islamic Banking products. Singapore and Srilanka have amended their Banking Regulation Act to accommodate Islamic Banking products. Singapore has also amended its taxation laws to solve this problem. The Banking Regulation Act even disallows an Indian bank from floating a subsidiary abroad to launch such products, or offering these through a special window. Thus, in India Islamic Banking experiment is impossible without a new law (or multiple amendments to the Banking Regulation Act).

One way of amending the laws would be to maintain the current legislation with regard to conventional banks but to specifically enact Laws applicable to Interest free Islamic Banks. The new legislation will have to expressly allow the regulatory authority the ability to deem a bank capable of interest-free operations. Once that authority has deemed a bank capable of interest-free operations, current legislation will no longer apply and a new set of laws will apply. Those new laws will govern their activities and subject them to the regulatory body. The regulatory body would assist in establishing and enforcing auditing and accounting standards, ensuring transparency in the dealings of interest-free banks and ensuring compliance with liquidity standards. The regulatory body, in conjunction with industry experts, could also look into some form of deposit insurance for account-holders and some form of a rating agency to judge the efficiency and managerial competency of the newly-developing interest-free banks helping to ensure the stability of the parallel interest-free banking network being set up.

This study suggests that the Indian Government should permit the establishment of Islamic Banking in India on the following grounds:

Modern secular countries like Britain, United States, Singapore and Srilanka has successfully accommodated Islamic Banking and Islamic Banking products within their Banking system.

In Britain the U.K. Financial Services has successfully resolved a number of regulatory issues including the problem of Deposits in Islamic Banks. This has enabled not only the setting up of Islamic Bank of Britain but also has enabled renowned banks to offer Islamic financial products. In United States of America the flexible approach of the regulatory authorities has permitted two types of Islamic financing vehicles viz., Ijara and Murabaha.

Singapore has been systematically reviewing its policies to ensure that Islamic finance is not disadvantaged vis-à-vis conventional finance. Singapore's existing regulatory framework with suitable refinements has facilitated the development of Islamic finance in Singapore. Where there are specific risks or impediments, rules have been refined to address these specific areas. It is to be specifically pointed out here that Islamic Banks, Takaful and retakaful companies or Islamic capital markets players interested to operate in Singapore need not apply for a separate category of license; that is, the same licensing regime as that for conventional financial institutions will apply. Singapore has also amended its taxation laws to accommodate Islamic Banks and Islamic financial products. SRILANKA has also amended its Banking Act to accommodate Islamic Banking. On the grounds of attracting capital as well as respecting the sentiments of the minorities Britain, United States, Britain, Singapore and Srilanka has facilitated either Islamic Banks and/or Islamic financial products.

The Indian Banking sector has been opened considerably in the past decade or so and openness to interest-free banks is a reasonable next step. Islamic Banking is one way to better provide the disadvantaged Muslim minority (among others) with the tools it needs to improve its situation. The potential benefits of allowing Islamic Banking include decreased economic disparity between the Muslim minority and the rest of the nation, better integration of that Muslim minority, and increased national economic growth. By creatively accommodating the ideological differences of its Muslim minority, and keeping an open mind about interest-free banking, India can position itself to reap these potential benefits. The government of India can grow one step closer to actualizing the spirit of "garibi hatao" by reforming its banking sector and allowing the establishment of Islamic Banks.

Launching Islamic Banks in India has definite advantages:

Firstly, providing acceptable Bank mediated avenue of Investment, savings of those who avoid interest based investments on religious grounds can be mobilised. Secondly, an increase in the number of financial products available in the market is good for all concerned. Thirdly, domestic interest free financial institutions will facilitate inflow of interest free foreign private investment. Lastly, it will allow reputed banks to market interest-free financial products, or even open 'Islamic Windows'.

sd/-(J.S. Rifayee)

Deputy General Secretary

துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

துபாயில் தமிழக அரசியல் பிரமுகரும், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், திராவிட முன்னேற்றக்கழக முக்கியப் பிரமுகருமான ஆயிரம் விளக்கு முஹம்மது உசேனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மே 1 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் ஸ்கை குரூப் இயக்குநர் கீழக்கரை செய்யது எம். அப்துல் காதர், பிரபல பாடகர் இறையன்பன் குத்தூஸ், ஏ. அஷ்ரப் அலி உள்ளிட்ட பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஷ்ரஃப் அலி செய்து வருகிறார். மேலதிக விபரம் பெற 050 625 46 28 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

துபாய்: நீல ரத்னக் கற்களில் உலகின் மிகச் சிறிய குரான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விலை உயர்ந்த நீல ரத்னக் கற்களில் உலகின் மிகச் சிறிய குரானை மிர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

10,000 குரான் வாசகங்கள் இந்த குரானில் பொறிக்கப்பட்டுள்ளன. 58 மி.மீ. அகலமும், 98 மி.மீ. உயரமும் கொண்ட 20 நீல ரத்னக்கல் பட்டிகளில் இந்த வாசகங்கள் வெண்தங்கம் என்றழைக்கப்படும் பிளாட்டினம் உலோகத்தால் எழுதப்பட்டுள்ளன.

துபாயில் கடந்த ஏப்ரல் 23 முதல் 26 வரை நடந்த நகை கண்காட்சியில் இந்த குரான்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் விலை தலா 15,000 தினார்களாகும்.

இது பற்றி மிர் எண்டர்பிரைசஸ் நிர்வாக மேலாளர் டாக்டர் மிர் மொக்தாரி கூறுகையில், 'மெக்கா' (MEQA - Micro Engineering of Quran as Art) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ரத்னக்கல் குரானை தயாரிக்க 2 வருடங்கள் பிடித்தன.

குரான் வாசகங்கள் விரல்களில் பட்டு சேதமடையாமல் இருக்கும் வகையில் அதன்மீது குவார்ட்ஸ் இழை பூச்சு அமைக்கப்பட்டுள்ளது.

குரானின் புனிதம் பாதுகாக்கப்படும்வகையில், மிக குறைந்த அளவிலேயே இந்த ரத்னக்கல் குரான்கள் தயாரிக்கப்பட்டன.

திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை போற்றும் நினைவுப்பரிசாக இந்த குரான்களை வாங்கி வழங்கலாம் என்றார்.

இந்த குரான்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிலுள்ள வாசகங்களை படிப்பதற்கு வசதியாக பூதக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

துபாய்: 4 மணி நேரம் பஸ்சுக்குள் அடைபட்ட எல்.கே.ஜி. சிறுவன் பலி

துபாய்: அபுதாபியில், பள்ளி பேருந்தில் நான்கு மணி நேரம் அடைபட்ட கேரளாவைச் சேர்ந்த நான்கு வயது எல்.கே.ஜி குழந்தை மூச்சித் திணறி இறந்தான்.

கேரளாவைச் சேர்ந்த ஆதிஷ் என்கிற அந்த நான்கு வயது சிறுவன், அபுதாபியில் உள்ள மெர்ரி லேன்ட் கின்டர்கார்டன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். வியாழக்கிழமை காலை பள்ளிப் பேருந்தில் அவன் ஏறினான். இந்த நிலையில் அன்று பிற்பகல் 12.50 மணிக்கு ஆதிஷின் தந்தைக்கு பள்ளியிலிருந்து போன் வந்தது. உங்கள் மகன் விபத்தில் சிக்கி விட்டான் என்று பள்ளித் தரப்பில் கூறியுள்ளனர்.

ஆதிஷின் தந்தை ஷெபின் ஸ்ரீதர் துபாய், ஜெபல் அலி பகுதியில் வேலை பார்த்து வருகிறார். பள்ளியிலிருந்து வந்த தகவல் குறித்து ஸ்ரீதர் கூறுகையில், போன் வந்ததும், நான் எனது மனைவி, தந்தை மற்றும் நண்பர்கள் ஷேக் கலீபா மருத்துவ நகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு போனது போது எங்களது மகன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்னர்.

எனக்கு அவன் ஒரே மகன். எனது மகன் எப்படி இறந்தான் என்பதை டாக்டர்கள் சொல்லவில்லை. ஆனால் அவன் மூச்சுத் திணறி இறந்துள்ளதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.

பள்ளிக்கு பேருந்தில் சென்ற அவன் பள்ளி வந்ததும் பேருந்திலிருந்து இறங்கவில்லை. காலை 7.35 மணிக்கு அவனை எனது தந்தை பேருந்தில் ஏற்றி அமர வைத்தார். ஆனால் பள்ளியை பேருந்து அடைந்ததும், அவன் இறங்கி விட்டானா, இல்லையா என்பதை ஓட்டுநரோ, நடத்துநரோ கவனிக்கவில்லை.

எனது மகன் உள்ளே இருப்பது தெரியாமலேயே பேருந்தை மூடியுள்ளனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் அவன் பேருந்துக்குள்ளேயே இருந்துள்ளான். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான் என்றார் ஸ்ரீதர

தினமலர்... கருத்து

வாழ்த்துக்கள்... தினமலரின் புதிய முகத்திற்கு... இணைய முகத்தை மாற்றி விட்டீர்கள்.. ஆனாலும் செய்தி முகத்திலும் கொஞ்சம் மாற்றத்தை கொண்டுவரலாம்... இதுதான் எங்களுடைய கோரிக்கை... கொஞ்சம் மத முக்கியத்துவத்தை குறையுங்கள்... எப்பொழுதும் 'கோவில்கள், பூஜைகள், ஆராதனைகள், தாக்ரே வந்தார்...போனார்... அத்வானி,மோடி... இது மாதிரியான ' பார்பன செய்திகளை கொஞ்சம் குறையுங்கள்... கொஞ்சமாவது...

சார்ஜாவில் கடை வாடகைக்கு..

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய தலைநகரம்

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புதிய தலைநகரம் உருவாகி வருகிறது. அபுதாபி அருகே உள்ள கலீபா சிட்டியில் இந்த தலைநகரம் அமையவுள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகராக தற்போது அபுதாபி உள்ளது. அபுதாபியில் நாளுக்கு நாள் போக்குவரத்து உள்ளிட்ட நெரிசல்கள் அதிகரித்து வருவதால், புதிய தலைநகரை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.அதன்படி அபுதாபிக்கு அருகில் 15 கி.மீ தொலைவில் உள்ள கலீபா சிட்டி என்ற நகரை புதிய தலைநகராக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.ஒரு முழுமையான அரபு நகராக கலீபா சிட்டி விளங்கும் என புதிய தலைநகர் நிர்மானத் திட்டத்தின் பொறுப்பாளரும், நகர்ப்புற திட்டக் கவுன்சிலின் இயக்குநருமான அல் அஹ்பாபி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், புதிய தலைநகரம் 4,900 ஹெக்டேர் பரப்பளவில் அமையும். புதிய தலைநகருக்கும், தற்போதைய நகருக்கும் இடையிலான தூரம் 15 முதல் 20 கிமீ இருக்கும்.25 ஆண்டுளில் இங்கு 30 லட்சம் பேர் குடியமருவார்கள். அனைத்து அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகங்கள், அமைச்சரவை தலைமை அலுவலகங்கள், உள்ளூர் அரசு அலுவலகங்கள் புதிய தலைநகரிலிருந்து செயல்படும். இதுதவிர தூதரகங்கள், தூதரக அலுவலகங்களும் இங்கு இடம் பெயரும்.குடியிருப்புகள், கண்காட்சி அரங்குகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் புதிய நகரில் இடம் பெறும் என்றார் அவர்.

ஹஜ்-1.57 லட்சம் இந்திய யாத்ரீகர்களுக்கு அனுமதி!

ஹஜ்-1.57 லட்சம் இந்திய யாத்ரீகர்களுக்கு அனுமதி! இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1.57 யாத்ரீகர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள செளதி அரேபிய அரசு அனுமதித்துள்ளது.சௌதி அரேபியாவின் ஹஜ் துறை அமைச்சர் டாக்டர். ஃபுவாத் அல்ஃபார்சியும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அஹமதும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் அகமத் பேசுகையில், இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1,57,000 யாத்ரீகர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள சௌதி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கூடுதலாக 15,000 யாத்ரீகர்களை அனுமதிக்குமாறு கோரியுள்ளோம். அதற்கும் அனேகமாக ஒப்புதல் கிடைத்துவிடும்.1,57,000 பேரில் ஹஜ் கமிட்டி மூலம் 1,10,000 யாத்ரீகர்களும் மீதி இடங்கள் தனியார் முகவர்கள் மூலம் வருபவர்களுக்கும் ஒதுக்கப்படும்.மெக்காவின் புனிதப் பள்ளி விரிவாக்கப் பணிகள் காரணமாக அதைச் சுற்றிலும் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்படுவதால் யாத்ரீகர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.யாத்ரீகர்களுக்கான இருப்பிடங்கள் இந்த ஆண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. புனிதப் பள்ளியிலிருந்து 1கி.மீ. சுற்றளவில் கிடைக்கும் இருப்பிடங்கள் 'பச்சை' பகுதி என்றும், 1 முதல் 6 கி.மீ. சுற்றளவில் இருக்கும் பகுதிகள் 'வெள்ளை' பகுதி என்றும், மூன்றாவது வகைப் பகுதி 'அசிசியா' பகுதி என்றும் குறிப்பிடப்படும்.இதில் பச்சை வகைப் பகுதிக்கு யாத்ரீகர்களிடமிருந்து 3,000 ரியாலும், வெள்ளை வகைப் பகுதிக்கு 2,200 ரியாலும், அசிசியா பகுதிக்கு 1,500 ரியாலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தரமான இருப்பிடங்களைப் பெறுவதற்காக இந்திய ஹஜ் குழுமம் தெற்காசிய மொஸஸா அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ஹஜ் கமிட்டி மூலம் வரும் அனைத்து யாத்திரிகர்களுக்கான இருப்பிடங்களும் ஹஜ் யாத்திரையின் பகுதி எல்லைக்குள்ளேயே இருக்கும்.கடந்த ஆண்டு இருந்த குறைபாடுகளை முழுமையாய் களையும் விதத்தில் இவ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.இந்த சந்திப்பின்போது சௌதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் பாருக் மரைக்காயரும், துணைத் தூதர் டாக்டர். அவுசாஃப் சயீதும் அமைச்சருடன் இருந்தனர்.

அண்ணன் மாநாடோ இரண்டுநாட்கள் எஸ்டிமேட் இரண்டு கோடி ....

சென்னையிலே பீஸ் கான்பிரன்ஸ் பத்து நாட்கள் பல நாட்டு ஸ்காலர்ஸ் உரைகள் பல லட்சம் மக்கள்கள் வந்தாங்க, பல பேர் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்கள், பல்வேறு அரங்குகள்... பல்வேறு வகுப்புக்கள்... இஸ்லாமிக் பொருட்கள் விற்பனை அரசு அதிகாரிகள் உட்பட அனைவரையும் பிரமிக்க வைத்த நிகழ்வு...அந்த பத்து நாட்கள்... இத்தனை விரும்பாத அண்ணன் பி ஜே இதற்கு இணையாக தஞ்சாவூரில் இரண்டு நாட்கள் மாநாடு நடத்துகிறார், சிந்தியுங்கள் ... பீஸ் மாநாடு பத்து நாட்கள் செலவு ஒன்றரை கோடி ஆனால் அண்ணன் மாநாடோ இரண்டுநாட்கள் எஸ்டிமேட் இரண்டு கோடி .... சிந்திப்பீர்...மார்க்கத்தை வைத்து வியாபாரம் செய்யும் முதலைகளை அடையாளம் கண்டு கொள்வீர்... - ஹமீது, சென்னை

அமீரக JAQH புதிய நிர்வாகிகள்

துபையில் JAQH புதிய நிர்வாகிகள்

தலைவர் : இஜாஸ் அஹ்மது கீழக்கரை

துணைத்தலைவர் : அப்துல் அஜீஸ் , தோப்புத்துறை

செயலாளர் : கோவை சிராஜ்

துணைச்செயலாள்ர் : முஹம்மது இஸ்மாயீல், தென்காசி

பொருளாளர் : முஹம்மது சுலைமான்



அபுதாபி JAQH புதிய நிர்வாகிகள்

தலைவர் : முஹைதீன் , தென்காசி

துணைத்தலைவர் : யூசுப் , கோவை

செயலாளர் : பைஸல் பிர்தவ்ஸி , திருவை

துணைத்தலைவர் : ஷரீப் , கோட்டாறு

பொருளாளர : முஹம்மது , ஏறுவடி

ஐகோடு பொறுப்பாளர் : உமர் , பொதக்குடி

பன்யாஸ் பொறுப்பாளர் :டி. சி. முஜாஹித், திருச்சி


ஷார்ஜாவில் JAQH புதிய நிர்வாகிகள்

தலைவர் : நஜ்முத்தீன், அத்திக்கடை ,

துணைத்தலைவர் : பொறியாளர் இஸ்ஹாக், கோட்டாறு,

செயலாளர் : அப்துர்ரஹ்மான், திருச்சி,

துணைச்செயலாளர் : கலீலுர்ரஹ்மான், மேலப்பாளயம்,

பொருளாளர் : இல்யாஸ் , மதுக்கூர் ,

ஷார்ஜாவில் இந்தியர் மர்ம சாவ

துபாய்: ஷார்ஜாவில் வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கிய இந்தியர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.ஷார்ஜாவில் அல் குபாய்பா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த குமார் (40) தன் மனைவியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் ஷார்ஜாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குமாரை அவரது குடும்பத்தினர் கொண்டு சேர்த்தனர்.வீட்டுக்குள் குமார் தூக்கு போட்டுக்கொண்டு தொங்கியதாகவும் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு வந்ததாகவும் மருத்துவமனையில் டாக்டர்களிடம் குமார் மனைவி கூறினார். ஆனால் குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.மேலும் குமாரின் தலையில் ரத்தக்காயம் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இதுபற்றி அல் கார்ப் போலீசாருக்கு புகார் செய்தனர். இதையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றினர்.அவரது தலையில் உள்ள காயம் பற்றி குமாரின் மனைவியிடமும், மற்றொரு உறவினரிடமும் போலீசார் விசாரித்தனர். இதற்கு, வீட்டின் உள்ளே மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய குமாரை தரையிறக்கும்போது எதிர்பாராதவிதமாக அவரது உடல் சரிந்து விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக குமாரின் மனைவி விளக்கம் அளித்தார்.ஆனால் இதில் திருப்தியடையாத போலீசார், குமாரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பினர்.குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பிணப் பரிசோதனை முடிவு வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

குவைத்: இந்தியர் பெருக்கத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

துபாய்: குவைத் நாட்டில் பெருகி வரும் இந்தியர் உள்ளிட்ட அன்னிய தொழிலாளர் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திற்கு முக்கிய அரசியல் பிரமுகர் அறிவுரை கூறியுள்ளார்.குவைத் தேசிய தேர்தல் வரும் மே மாதம் 17ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடவுள்ள சாத் அல்-கான்ஃபோர் என்ற முக்கிய அரசியல் பிரமுகர், குவைத்தில் பெருகிவரும் அன்னியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.அவர் கூறுகையில், குவைத் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 30 லட்சம் ஆகும். இதில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். மொத்தம் 5,32,000 இந்தியர்களும், 2,51,000 வங்கதேசத்தினரும் வசிக்கின்றனர்.குவைத் மக்கள் தொகையில் 64 சதவீதத்தினர் அன்னிய தேசத் தொழிலாளர்கள். இந்தளவுக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவையில்லை. இதில் 12 சதவீதம் பேர்தான் உயர்கல்வித் திறன் உள்ளவர்கள். மற்றவர்கள் கீழ்மட்டத் தொழிலாளர்கள்.கீழ்மட்டத் தொழிலாளர்களால் நாட்டில் வீணாக தொற்றுநோய் ஏற்படும் அபாயம்தான் உண்டாகும். அதேபோல் திருமணமாகாத அன்னிய தொழிலாளர் பெருக்கத்தால் ஒருநாள் நிச்சயம் கேடுவிளையத்தான் போகிறது. எனவே இந்தப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த குவைத் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.குவைத்தின் பொருளாதாரமே பெட்ரோலியத்தையும் வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் தான் முழுக்க முழுக்க சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . - Thats Tamil.com

அப்பாவிகளை கொல்வதில்லை-அல்கொய்தா

கத்தார்: அப்பாவிகளை கொல்வது எங்கள் இயக்கத்தின் வழக்கம் அல்ல என்று அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனின் வலதுகரமான அய்மன் அல்ஜவாஹிரி கூறியுள்ளார்.அல்ஜவாஹிரி பேசியுள்ள புதிய ஆடியோவை அல்ஜசீரா டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில், எகிப்தில் அல்காய்தா மற்றும் அதன் ஆதரவு படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலின் போது அப்பாவிகள் பலியானது உண்மை. ஆனால் வேண்டுமென்றே இந்த உயிர்களை பறிக்கவில்லை. பலியான அப்பாவி மக்களை 'மனிதக் கேடயமாக' எதிரிகள் பயன்படுத்தியதால் நடந்த விளைவு.அல்ஜீரியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐ.நா. சபைக்கு சொந்தமான கட்டடத்தை தாக்கியபோது அருகிலிருந்த மருத்துவமனை இடிந்து 60 பேர் பலியானார்கள்.ஐ.நா. சபை இஸ்லாமிய மதத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரி. அதனால் தாக்கினோம்.பின்லேடனுக்கு ஒரு குறையும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார். கவலை வேண்டாம். முழு ஆரோக்கியத்துடன் இருந்தாலும் எல்லோரையும் போல் ஒருநாள் இறக்கப் போகிறவர்தானே என்று பேசியுள்ளார் அல்ஜவாஹிரி.

ஷார்ஜாவில் கலவரம் - 600 இந்தியர்கள் கைது

ஷார்ஜாவில் 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் திடீரென கல்வீச்சு மற்றும் கலவரத்தில் இறங்கினர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்து 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷார்ஜாவில் உள்ள டைகர் கான்ட்ராக்ட் கம்பெனியின் மூலம் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அனைவரும், சமீபத்தில் ஒரு தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டனர். அந்தக் கட்டடம் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை.இதனால் தங்களால் அங்கு தங்க முடியாது என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை அவர்களது முகாம் அதிகாரி கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அனைத்துத் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.துபாய் - ஷார்ஜா நெடுஞ்சாலையில், அல் நஹ்தா என்ற இடத்தில் திரண்ட அவர்கள் கல்வீச்சில் இறங்கினர். சாலையில் சென்ற வாகனங்கள் மீதும் கற்கள் வீசித் தாக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் 600க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்னர்.மொத்தம் 800 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பலர் தங்களது முகாமுக்குள் இருந்தபடி போராடினர். மற்றவர்கள்தான் சாலைக்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷார்ஜா போலீஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மோதலில் 15 தொழிலாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் ஷார்ஜாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கலவரம் பெரிதாகாமல் தடுக்க துபாய், அபுதாபி யிலிருந்து கலவரத் தடுப்புப் போலீஸார், சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

துபாயில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி

துபாய்: துபாயில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது.உலக அளவிலான கல்வி மற்றும் வேலை வாய்ப்புக் கண்காட்சி துபாயில் உலக வர்த்தக மையம் அருகேயுள்ள கண்காட்சி அரங்கில் நேற்று தொடங்கியது. வரும் 5ம் தேதி வரை இக்கண்காட்சி நடக்கிறது.இதில் தமிழகத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம், இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம், ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி உள்பட இந்தியாவில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இதுதவிர, வளைகுடா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்களும் இதில் கலந்து கொண்டுள்ளன.மேலும், வேலைவாய்ப்புக்காக பல்வேறு வங்கிகள், வளைகுடா வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்களின் ஸ்டால்களும் இந்த கண்காட்சியில் உள்ளன. வெளிநாட்டு வேலை தேடும் தமிழக இளைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்பு என்று கண்காட்சிக்கு வந்தவர்கள் கூறினர்

குவைத்தில் மரண தண்டனையிலிருந்து தப்பிய இந்தியர்!

குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர், மத்திய அரசின் தலையீட்டால், மரண தண்டனையிலிருந்து தப்பி விடுதலையாகவுள்ளார்.நேபாளத்தைச் சேர்ந்தவர் ஜமுனா தாபா. இவர் கடந்த 2005ம் ஆண்டு குவைத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடன் பணியாற்றி வந்த கேரள மாநிலம் எலத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளகத் என்பவரை குவைத் போலீஸார் கைது செய்து அவர் மீது ஷரியத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த விசாரணையில் செளகத் குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இந்த நிலையில், தாபாவின் குடும்பத்தினர் தங்களுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடாக செளகத் கொடுத்தால் அவரை மன்னிப்பதாக அறிவித்தனர். இதையடுத்து மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டது.இதுகுறித்து கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், தாபாவின் குடும்பத்தினர் ரூ. 20 லட்சம் இழப்பீடு கொடுத்தால் செளகத்தை மன்னிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து செளகத் ரூ. 20 லட்சம் பணத்தை கோர்ட்டில் கட்டினால் அவரை விடுதலை செய்வதாக தெரிவித்தது.இதையடுத்து மத்திய அரசு இந்தப் பணத்தை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி மத்திய அரசு ரூ. 10லட்சம் பணத்தைக் கொடுக்கும். தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத இருவர் தலா ரூ. 5 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளனர்.இந்தப் பணம் ஜமுனா தாபாவின் குடும்பத்தாரிடம் வழங்கப்படும். எனவே விரைவில் செளகத் விடுதலை ஆவார் என்றார் ரவி.

சவூதி பஸ் விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 9 பேர் பலி

சவூதி அரேபியாவில் பெட்ரோல் டாங்கரும், பயணிகள் பஸ்சும் மோதி தீப்பிடித்ததில் 2 இந்தியர்கள் உள்பட 9 பயணிகள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.சவூதி அரேபியாவில் 20 பாகிஸ்தானியர்கள், 15 இந்தியர்கள், 12 வங்கதேசத்தினர் ஒரு பேருந்தில் உம்ரா புனித யாத்திரை மேற்கொண்டிருந்தனர். பேருந்தை பஹ்ரைனை சேர்ந்த டிரைவர் ஓட்டிச் சென்றார்.ரியாத்- காசிம் நெடுஞ்சாலையில் உள்ள ஜலாஜில் என்ற இடத்தில் பேருந்து போய்க் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓர் ஆயில் டேங்கருடன் பேருந்து நேருக்கு நேராக மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.பஸ்ஸுக்குள் மளமளவென்று தீ பரவியதால் புகை மூட்டத்தில் வெளியேற முடியாமல் எல்லோரும் அலறினர். இந்த பயங்கர விபத்தில் 9 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியாயினர்.இதில் இந்தியாவை சேர்ந்த சர்புதின் அகமது, கே.டி.பி.பவாஸ் ஆகியோர் பலியானது தெரிந்தது. இறந்தவர்களின் உடல்கள் மிகவும் மோசமாக கருகி விட்டதால், இந்தியாவுக்கு கொண்டு செல்லாமல் சவூதியிலேயே இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்தது.இறந்தவர்களில் 5 பேரின் உடல் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகி உருக்குலைந்திருப்பதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி தெரிவித்தார். காயமடைந்தவர்கள் ரியாத் அருகே மஜ்மா என்ற இடத்தில் உள்ள கிங் காலீத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.காயமடைந்தவர்களில் எத்தனைபேர் இந்தியர்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. இதுவரை 2 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 பேர் சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். 18 பேருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. இதில் 4 பேர் அபாய கட்டத்தில் இருப்பதாக சவூதி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.விபத்துக்குள்ளான பஸ் இன்ஸ்யூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் தமிழ்ச்சங்கம் தாக்குதல் : அமீரக தமிழர்கள் அமைப்பு கண்டனம்

பெங்களூர் தமிழ்ச்சங்கம் தாக்குதல் : அமீரக தமிழர்கள் அமைப்பு கண்டனம்
பெங்களூர் தமிழ்ச்சங்கம், தமிழ் நிறுவனங்கள் மற்றும் தமிழர்கள் மீது தாக்குதல் கன்னட வெறியர்களைக் கண்டித்து அமீரக தமிழர்கள் அமைப்பின் சார்பில் 30.03.2008 ஞாயிறன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் உடனடியாக நடுவண் அரசு இவ்விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் தமிழக அரசு கர்நாடக அரசுக்கு வழங்கும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சைபுதீன், முஸ்தாக், பரத், ரயீஸ், நயீம், அன்பழகன், சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்.

துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு

துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு
துபாய் கல்விக்கண்காட்சி ஏப்ரல் 2 முதல் 5 வரை துபாய் உலக வர்த்தக மையம் அருகேயுள்ள கண்காட்சி அரங்கில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மற்றும் திருச்சி, ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம், சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்கள் உட்பட இந்தியா, வளைகுடா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இக்கல்வி கண்காட்சியில் வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு வங்கிகள், வளைகுடா வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவையும் பங்கேற்றுள்ளன. வேலை தேடும் வளைகுடா பயணம் மேற்கொண்டுள்ள தமிழக இளைஞர்களுக்கு மிகுந்த பயனுடையதாய் இருக்கும் என கண்காட்சிக்கு வருகைபுரிந்துள்ள வேலை தேடும் தமிழக இளைஞர் நபீஸ் அஹமது தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் இந்திய மற்றும் வளைகுடா இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயர்கல்வி குறித்த விபரங்களைச் சேகரித்து செல்வதாக சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மைய பிரதிநிதி சுபாஷ் தெரிவித்தார்.
This post was submitted by முதுவை ஹிதாயத்