Showing posts with label அதிரை. Show all posts
Showing posts with label அதிரை. Show all posts

இனியாவது ஒன்று படுமா நமது சமுதாயம்.

இனியாவது ஒன்று படுமா நமது சமுதாயம்.

நமது சமுதாயத்திற்காக 2002 ஆண்டில் ஜனாப்.அப்துல் லத்திப் சட்டமன்றத்தில் MLA ஆக இருந்தார், அதன் பிறகு யாருமில்லை என்பதுதான் உண்மை,நமக்கு முறையான அரசியல் கட்சியும் இல்லை, அப்படி இருப்பதாக நோக்கினால் முஸ்லீம் லீக் முன்று பிரிவுகளாகவும் , இண்டியன் யூனியன் முஸ்லீம் லீக் இரு பிரிவுகளாகவும்,(காதர் மொய்தீன், தாவுது மியா கான் ), மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் - உமர் பாரூக் , தமிழ் மாநில முஸ்லீம் லீக் - ஷேய்க் தாவுத், இந்திய தேசிய லீக், தமிழ் மாநில தேசிய லீக், தேசிய லீக் முன்று பிரிவு களாகவும், தலைவர்கள், தொண்டர்கள் ஆக மொத்தம் பாத்து வேனில் அடக்கி விடலாம், அதே செல்வாக்கும் இல்லை, நோன்பு நேரங்களில் மாற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு கஞ்சிக்கு அழைப்பு கொடுத்து பத்திரிக்கைகளில் பதிய வைப்பார்கள், அதே நேரம் செல்வாக்குள்ள சில இஸ்லாமிய அமைப்புகளும் உண்டு அதில் த.மு.மு.க, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரோன்ட் ஆப் இந்தியா (ப்பிய்) இம்மூன்று அமைப்புகளும் அமைப்புகளாகும் , இதற்கு அடுத்தநிலையில்ஜாக் (J.A.Q.H), ஜமாத்தே இஸ்லாமி, இந்திய தவ்ஹீத் ஜமாத் , அமைப்புகஇருந்தாலும் இந்த அமைப்புகளுக்கு அரசியல் ஆர்வம் கிடையாது, இந்தநிலையில் .மு.மு.,PFI,.., ஆகிய அமைப்புகள் கருத்துக்கள்வேறுபட்டாலும் அரசியல் தளத்தில் ஒன்று பட்டு மூன்று காலவரையில்இவர்கள் தேர்தலை முன்னிட்டு நன்மையை விரும்பி ஒன்று பட்டு லாம் ,

மனித நேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சி யார் விரும்பினாலும்விரும்பவிட்டளும் ஒரு எழுச்சியான கட்சி என்பது மறுக்க இயலாது, இதுவரை பல லீக் களாலும் திரட்ட இயலாததை செய்து இருக்கிறது, கூட்டத்தைமட்டுமல்ல ஒரு எழுச்சியையும் உருவாக்கி உள்ளதை .., PFI,
ஜாக் (J.A.Q.H), இந்திய தவ்ஹீத் ஜமாஅத், ஆகிய அமைப்புகளை சார்ந்தசகோதரர்களும் வரவேற்று உள்ளார்கள் , ஏனன்றால் ஒரு தயாநிதி மாறன்அல்லது TTV .தினகரனுக்கோ அவர்களுடைய வெற்றிக்காக பாடுபடுவதைவிட, நாம் ஏன் நம்முடைய சகோதரனுக்கு உழைக்கக்கூடாது என்ற எண்ணம்நம்மிடைய மேலோங்கி உள்ளது, எவனோ ஒருவன் வெற்றிபெற போதுநாம் ஏன் .. விற்கு ஆதரவு கொடுக்க கூடாது ? , அதற்கேற்ப சமிபகாலமாக .மு.மு. வின் வார இதழ் க்கூட முஸ்லீம் லீகை தவிர மாற்றநமது அமைப்புகளை சாட வில்லை, பீஜே மற்றும் பாகர் பிரிவை கூட தனதுஇதழில் தவிர்த்து வந்தது என்பது குறிப்பிட தக்கது, பாக்கரை தூண்டி விடவாய்ப்புகள் அதிகம் ஆனால் நடுநிலையோடு இருந்து வந்தது, .. வுடன்சுமுகமான உறவை பேண .. மாநாடு அழைப்பிதல் கூட நேரில்கொடுக்கப்பட்டது, இரு அமைப்புகளின் தொண்டர்களுக்கும் கூட சுமுகஉறவையே விரும்புகிரரர் , இரு அமைப்புகளும் கொஞ்சம் இறங்கி பேச்சுநடத்தினால் சமுதாயத்திற்கு நல்லது, இதே போலே மனிதநீதி பாசறைஉடன் .மு.மு. சில வேறுபாடுகள் இருந்தாலும் கொழிகொடில் நடந்தமாநாட்டில் .மு.மு. தலைவர் ஜவதிருள்ள் கலந்துகொண்டதுகுறிப்படத்தக்கது, ஜாக் (J.A.Q.H), ஜமாத்தே இஸ்லாமி, போன்றஅமைப்புகள் அதிகாரபூர்வமற்ற வகையில் ஆதரவு தெரிவித்து உள்ளது, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கூட வாழ்த்து அனுப்பி உள்ளது, ஆக இந்தஅமைப்புகள் எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு நமது சமுதாயத்தில் ஒருமாற்றத்தை கொண்டு வரலாம், பதினைந்து தினங்களில் பேசி நல்ல முடிவுஎடுக்க வேண்டும், இதை பிரிண்ட் செய்து நமது சகோதர்களுக்கு எடுத்துசொல்லுங்கள்.

insa allah.... வெற்றி பெறுவோம்....

- ஆதம்.ஆரிபின் ( மண்ணடி காக்கா)



குவைத்தில் சமூக நீதி கருத்தரங்கம்

இறைவனின் திருப்பெயரால்...

சமூக நீதி கருத்தரங்கம்

குவைத் தமிழ் தோழமை அமைப்புக்களின் ஆதரவுடன் !
குவைத் தமிழர்கள் விழிப்புணர்வின் ஒரு மைல் கல்லாக !!
ஃபாஸிஸ, பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்க !!!
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் ஒற்றுமைக்காக !!!!
­­­
நாள்: ஜனவரி 1, 2009 நேரம்: மாலை 5:15
இடம்: ஜம்இய்யது இஸ்லாஹ் அரங்கம், ரவ்தா – குவைத்

தலைமை: தொழிலதிபர் A.சுலைமான் பாட்ஷா
(உரிமையாளர், லக்கி ப்ரிண்டர்ஸ், குவைத்)

சிறப்புரையாளர்கள்:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை)
தலைப்பு: சமைப்போம் சகோதரத்துவம் வாரீர் வாரீர் !!

சகோ.M.தமீமுன் அன்ஸாரி M.B.A.
(மாநில செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்)
தலைப்பு: தீவிரவாதமும் பயங்கரவாதமும் - நிழலும் நிஜமும்

நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC), குவைத்
23925612 / 99619827 / 66412875 / 97358846 / 22470159

அறிவமுதம் பருக தமிழர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!
குறிப்பு: For Women Special Place ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஃபஹாஹீல், மங்காஃப், அபூஹலிஃபா, மஹ்பூலா மற்றும் சிட்டி பகுதிகளிலிருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது

தேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ? எம்.எல்.ஏக்களுக்கு அப்துல்கலாம் பாடம்.

தேர்தலில் வெற்றிபெறுவது எப்படி ? எம்.எல்.ஏக்களுக்கு அப்துல்கலாம் பாடம்


தேர்தலில் வெற்றிபெறுவது எப்படி என்று கர்நாடக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு '7அம்ச திட்டம்' குறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்விளக்கிப்பேசினார் .பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை பயிற்சிமையத்தில் (..எம்) எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு அரசியல் மேம்பாடுகுறித்து நேற்று கலாம் விளக்கிப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், உங்கள் தொகுதியில் உள்ள ஒவ்வொரு மனிதரின்வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உத்தரவாதத்தையும், குற்றங்களைகுறைப்பதற்காகவும், ஏழ்மையை ஒழிப்பதற்காகவும் நீங்கள் பாடுபட வேண்டும். இதற்காக ஏழு அம்ச திட்டத்தை பின்பற்ற வேண்டும் எனக் கூறி அந்த அம்சங்கள்குறித்து விளக்கமளித்தார்.


1.மக்களிடம் கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். எல்லோரையும்எழுதப்படிக்க தெரிந்தவர்களாக மாற்ற வேண்டும்.
2.அவர்களின் திறனை மேம்படுத்த உரிய பயிற்சிகள் கிடைக்கச் செய்யவேண்டும்.
3.இளைஞர்களுக்கு உயர் கல்வி வசதி அளிக்கப்பட வேண்டும்.
4.இதனால் உயர்ந்த வேலைவாய்ப்பை அவர்களால் பெறமுடியும். அவர்களதுவருமானமும் அதிகரிக்கும்.
5.தொகுதி மக்களுக்கு தரமான சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
6.இந்த மக்கள் நல பணிகள் எல்லாம் அரசியல் மேம்பாட்டுக்கு உங்களை வழிநடத்திச் செல்லும்.
7.இதனால் வாக்காளர்களின் இதயத்தில் படிப்படியாக இடம்பிடித்து நீங்கள்அரசியலிலும் உயரலாம்.
http://sangamamlive.in/index.php?option=com_content&task=view&id=134&Itemid=31

முத்துப்பேட்டையில் மாபெரும்
அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்



கடந்த 21.11.2008 அன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெருவில் முன்னாள் மாநில மாணவரணி துணைச் செயலாளர் தீன் முகம்மது தலைமையில் மௌலவி. அப்துற் ரஹிம் திடலில் அரசியல் விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, மாநில மாணவரணி துணைச் செயலாளர் முத்துப்பேட்டை மாலிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.



முன்னதாக அன்று மதியம் முத்துப்பேட்டை புதுத்தெரு ஜும்ஆ பள்ளியில் இஸ்லாமிய வங்கியியல் என்கிற தலைப்பில் தமுமுக தலைவர் பேரா. முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஜமாத் நிர்வாகிகளிடம் உள்ளூர் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

மறுநாள் (22.11.2008) முத்துப்பேட்டை ஆசாத் நகரில் அல்-மஹா பெண்கள் மதரசாவில் பெண் கல்வி பற்றி தமுமுக தலைவர் உரையாற்றினார். இந்த மதரசாவில் பெண்களுக்கென மார்க்கக் கல்வி,கம்யூட்டர் கல்வி, பெண்களுக்கென தொழில் பயிற்சி வழங்கப்படடு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை கல்லூரியின் முதல்வர் செய்யது அலி பாக்கவி ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி அனைத்தையும் முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

நன்றி: தமுமுக இணையதளம்.

அதிரை/முஸ்லிம் செய்திகளை திரிக்கும் தினமலர

அதிரை/முஸ்லிம் செய்திகளை திரிக்கும் தினமலர்
அலுவலகத்தில் பணியாற்றிய சக பெண்ஊழியரிடம் பாலியல் சில்மிசம் செய்து நாறிப்போன பின்னணி கொண்டது முதல் "சண்டேன்னா ரெண்டு" என்ற ஆபாச/வக்கிர விளம்பரத்துடன் பொய்ச்செய்திகளை முந்தித்தரும் தினமல(ர்)ம், முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை திரித்தும் ஆதாரம் இன்றியும் எழுதி, முஸ்லிம்கள்மீது வாசிப்பவருக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் செய்திகளைத் தருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால் தினமலரை "தினமலம்" என்று அழைக்கிறார்கள்.






சண்டேன்னா twice


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை உலக அதிசயமாக்கவும், இல்லாத ராமர் பாலத்தை நாசா விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்டதாகவும் புழுகும் திறமை மற்ற பத்திரிக்கைகளைவிட தினமலருக்குக் கொஞ்சம் "ஜாஸ்தி"

இந்திய கட்டிடம் ஒன்று உலகப்புகழ் பெறுவதால் இந்தியராகிய நமக்குப் பெருமை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.தினமல(ர்)த்தின் நோக்கம் முஸ்லிம்களின் பாரம்பர்ய அடையாளத்தைச் சொல்லும் மொகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹான் கட்டிய தாஜ் மஹாலை பின்னுக்குத் தள்ளி மதுரை மீனாட்சியம்மன் கோவிலை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதாலேயே தமிழ் பத்திரிக்கைகளில் தினமல(ர்)ம் மட்டுமே ஒரு வருடத்திற்கும் மேலாக இதை விளம்பரப்படுத்தி பக்கத்தையும் நேரத்தையும் வீணடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகமலர் என்ற பெயரில் பார்ப்பனச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து, கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியாரின் அருளுரைகளை எழுதி வருவதோடு, தாழ்த்தப்பட்ட இந்துக்களின் தெய்வ வழிபாட்டை மூடநம்பிக்கை என்பதாகவும், அசைவம் சாப்பிடுவதால் உடலுக்குக் கேடு; மாட்டு மூத்திரம் (கோமியம்) உடலுக்கு நல்லது; மருத்துவக் குணமுள்ளது என்றெல்லாம் எழுதி தனது மேல்சாதித் திமிரை அவ்வப்போது காட்டியும் வருகிறது.

தமிழ் நாளிதழ் என்ற பெயரை வைத்துக் கொண்டு "நச்" நறுக்" "சதக்" "ஏவ்" "ஸ்வாஹா" என்றெல்லாம் தமிழரையும் தமிழையும் கிண்டலடிக்கும் தமிழர் விரோத தினமல(ர்)ம் முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான சிறுசெய்தியாக இருந்தாலும் பேணை பெருமாளாக்கித் தேவையற்ற வெறுப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்துவதை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது.

தவ்பீக் குறித்து பரபரப்பான செய்திகள் என்ற பெயரில் இல்லாததும் பொல்லாததுமாக எழுதிவருவதை அதிரையைப் பற்றியும் தவுபீக் பற்றியும் அறியாதவர்கள் வேண்டுமானால் நம்பலாம். உள்ளூர்வாசிகளால் இதை எப்படி நம்பமுடியும்?

கடந்த நான்கு நாட்களாக தவ்பீக் பற்றிய செய்திகளை தினமலர் எழுதும் விதம் அதிராம்பட்டினம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தினமலரின் வெறுப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.தன்மீதான வழக்குகளை நடத்தக் கஷ்டப்பட்டுவரும் நபர் ஹவாலா பிசினஸ் செய்து இயங்கி வருவதாகச் சொல்வது நகைப்பிற்குறியது. .

"பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பணத்துக்காக மட்டுமே "ஹவாலா' தொழிலில் ஈடுபடுவோரால், வரி ஏய்ப்பு மட்டுமே நடக்கிறது.ஆனால், மத அடிப்படைவாதிகள் இது போன்ற தொழிலில் களமிறங்குவது, நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தானது" என்று ஹவாலாவை மார்வாடி சேட்கள் செய்து வருவதை நியாயப்படுத்தியுள்ளது. தேசதுரோகச் செயலை யார் செய்தாலும் தேசத்திற்கே ஆபத்து என்று சொல்லாமல் முஸ்லிம்கள் செய்தால் மட்டுமே ஆபத்து என்பதுபோல் எழுதியிருப்பது அயோக்கியத் தனத்தின் உச்சம்!

மேலும், "தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர், வெளிநாட்டில் வேலை செய்கின்றனர்.இவர்களில் பலர், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பும் போது, அன்னிய செலாவணி சட்டவிதிகளை பின்பற்றுவதில்லை. மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து "ஹவாலா' ஏஜென்ட் வழியாக பணத்தை அனுப்புகின்றனர்; இதற்கு "உண்டியல் டிரான்ஸேக்ஷன்' என்ற அடைமொழியும் உண்டு"

என்று எழுதி இருப்பதன் மூலம் மேற்கண்ட ஊர்மக்கள் மட்டும்தான் தமிழகத்தில் ஹவாலா மூலம்பணம் அனுப்பி வருவதாகவும் மற்றவர்கள் வங்கிகள் மூலமே பணப்பரிவர்த்தனை செய்வதாகவும் காழ்புணர்வுடன் எழுதியுள்ளதும். மேற்குறிப்பிட்ட ஊர்களில் முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டால் தினமல(ர்)த்தின் வெறி தெளிவாக விளங்குகிறது.

தொடர்புடைய தினமல(ர்)ம் நாளிதழ் செய்திகளின் சுட்டிகள்:

http://www.dinamalar.com//Sambavamnewsdetail.asp?News_id=2022

http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=2022&cls=row3&ncat=TN

http://www.dinamalar.com//kutramnewsdetail.asp?News_id=606

இனியும் தினமலர் முஸ்லிம்கள் குறித்த செய்திகளில் காழ்புணர்வைக் கொட்டி எழுதி வந்தால், தினமலர் பரவலான அதிரை மற்றும் முஸ்லிம் வாசகர்களை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

நன்றி : அதிரை எக்ஸ்ப்ரெஸ்