அபுதாபியில் அய்மான் சங்கம் மூலம் 'சமுதாய கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கம்'
தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்ப
தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்பு
துபாயில் ஜாக் தலைமை நிலைய நிர்வாகிகளுடன் தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்பு - புகைப்படங்கள்
ஜாக் தலைவர் எஸ்.கே.கமாலுதீன் மதனி'யுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள் ஹஜாதீன் , அப்துல் அஜீஸ் ,ஜெகபர் அலி மற்றும் உறுப்பினர்கள் .
கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் அமீர் அப்துல் அஜீஸ் பேசியபோது...
அரபு அமீரக ஜாக் அமீர் ஷைகு . இக்பால் மதனியுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்
கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்
News from
http://samuthayam.blogspot.com
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்.....)
நேற்று 16-05-2008 வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு துபாய் நைப் பார்க் அருகில் மலபார் சூப்பர்மார்க்கெட் எதிரில் மினி பவனில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
அமீரக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டததில் தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வருகை தந்திருக்கும் "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" அமைப்பின் அமீர் கமாலுதீன் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்நிகழச்சியில் அமீரக "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" அமைப்பின் அமீரக நிர்வாகிகள் தோந்தெடுக்கப்பட்டார்கள்.
Fore More News...
செய்திகள் : JAQH அமீரகம்
JAQH அமீரக செயற்குழு கூட்டம் - துபாய்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
அமீரக செயற்குழு கூட்டம் -துபாய்
மீண்டும் தொடங்கும் எமிரேட்ஸ்-கோவா விமான சேவை
துபாய்: ஐக்கிய அரபு எமிரேஸுக்கும், கோவாவுக்கும் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த மார்க்கத்தில் தனது விமான சேவையை நிறுத்தியது இந்தியன் ஏர்லைன்ஸ். இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் மீண்டும் இச்சேவையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவுக்கான பிராந்திய இயக்குநர் அபய் பதக் கூறுகையில், அடுத்த வாரம் முதல் துபாயிலிருந்து கோவாவுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன சேவை தொடங்கும் என்றார்.
கோவாவுக்கும், ஷார்ஜாவுக்கும் இடையே வாரம் இரு நேரடி விமானங்களை கடந்த மார்ச் 30ம் தேதி வரை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வந்தது. அதேபோல கடந்த டிசம்பர் மாதம், ஏர் இந்தியா நிறுவனம் தான் இயக்கி வந்த வாரம் ஒருமுறை குவைத் -துபாய் -கோவா விமான சேவையை நிறுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 50 ஆயிரம் கோவா மாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் திடீர் மழை
துபாய்: துபாயில் வழக்கம் போல கொடும் வெயில் வீசிக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை திடீரென மழை பெய்தது.
கோடையில் வெப்பம் மேலும் அதிகமாகி மக்கள் படாத பட்டுவரும் நிலையி்ல் இந்த மழை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
துபாய் தவிர்த்து அமீரகத்தின் மேலும் பல பகுதிகளிலும் மழை பெய்தது.
மழையுடன் கடும் காற்றும் வீசியதால் வழக்கமான வேகத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
துபாய்: நீல ரத்னக் கற்களில் உலகின் மிகச் சிறிய குரான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த நீல ரத்னக் கற்களில் உலகின் மிகச் சிறிய குரானை மிர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
10,000 குரான் வாசகங்கள் இந்த குரானில் பொறிக்கப்பட்டுள்ளன. 58 மி.மீ. அகலமும், 98 மி.மீ. உயரமும் கொண்ட 20 நீல ரத்னக்கல் பட்டிகளில் இந்த வாசகங்கள் வெண்தங்கம் என்றழைக்கப்படும் பிளாட்டினம் உலோகத்தால் எழுதப்பட்டுள்ளன.
துபாயில் கடந்த ஏப்ரல் 23 முதல் 26 வரை நடந்த நகை கண்காட்சியில் இந்த குரான்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் விலை தலா 15,000 தினார்களாகும்.
இது பற்றி மிர் எண்டர்பிரைசஸ் நிர்வாக மேலாளர் டாக்டர் மிர் மொக்தாரி கூறுகையில், 'மெக்கா' (MEQA - Micro Engineering of Quran as Art) என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ரத்னக்கல் குரானை தயாரிக்க 2 வருடங்கள் பிடித்தன.
குரான் வாசகங்கள் விரல்களில் பட்டு சேதமடையாமல் இருக்கும் வகையில் அதன்மீது குவார்ட்ஸ் இழை பூச்சு அமைக்கப்பட்டுள்ளது.
குரானின் புனிதம் பாதுகாக்கப்படும்வகையில், மிக குறைந்த அளவிலேயே இந்த ரத்னக்கல் குரான்கள் தயாரிக்கப்பட்டன.
திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளை போற்றும் நினைவுப்பரிசாக இந்த குரான்களை வாங்கி வழங்கலாம் என்றார்.
இந்த குரான்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிலுள்ள வாசகங்களை படிப்பதற்கு வசதியாக பூதக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜாக் புதிய கிளை
ஷார்ஜாவில் இந்தியர் மர்ம சாவ
துபாய்: ஷார்ஜாவில் வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கிய இந்தியர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.ஷார்ஜாவில் அல் குபாய்பா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த குமார் (40) தன் மனைவியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் ஷார்ஜாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குமாரை அவரது குடும்பத்தினர் கொண்டு சேர்த்தனர்.வீட்டுக்குள் குமார் தூக்கு போட்டுக்கொண்டு தொங்கியதாகவும் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு வந்ததாகவும் மருத்துவமனையில் டாக்டர்களிடம் குமார் மனைவி கூறினார். ஆனால் குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.மேலும் குமாரின் தலையில் ரத்தக்காயம் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இதுபற்றி அல் கார்ப் போலீசாருக்கு புகார் செய்தனர். இதையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றினர்.அவரது தலையில் உள்ள காயம் பற்றி குமாரின் மனைவியிடமும், மற்றொரு உறவினரிடமும் போலீசார் விசாரித்தனர். இதற்கு, வீட்டின் உள்ளே மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய குமாரை தரையிறக்கும்போது எதிர்பாராதவிதமாக அவரது உடல் சரிந்து விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக குமாரின் மனைவி விளக்கம் அளித்தார்.ஆனால் இதில் திருப்தியடையாத போலீசார், குமாரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பினர்.குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பிணப் பரிசோதனை முடிவு வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.


