துபாயில் திடீர் மழை

துபாய்: துபாயில் வழக்கம் போல கொடும் வெயில் வீசிக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை திடீரென மழை பெய்தது.

கோடையில் வெப்பம் மேலும் அதிகமாகி மக்கள் படாத பட்டுவரும் நிலையி்ல் இந்த மழை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

துபாய் தவிர்த்து அமீரகத்தின் மேலும் பல பகுதிகளிலும் மழை பெய்தது.

மழையுடன் கடும் காற்றும் வீசியதால் வழக்கமான வேகத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.