துபாயில் சுவர் இடிந்து இந்திய தொழிலாளி பலி

துபாய்: துபாயின் இன்வெஸ்ட்மெண்ட் பார்க் அருகே கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த இந்தியத் தொழிலாளி மீது காண்க்ரீட் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.

அந்த சுவரின் அருகே 10 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்தது. இதில் 9 பேர் காயங்களுடன் தப்பிவிட்டனர்.

ஆனால், 24 வயதான தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி பலியானார்.