ராசல் கைமாவில் முப்பெரும் விழா!

ராசல் கைமாவில் முப்பெரும் விழா!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராசல்கைமாவில், பொங்கல், புத்தாண்டு மற்றும் பக்ரீத் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழா 22ம் தேதி நடைபெறுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் ராசல்கைமா தமிழ் மன்றம், இந்தியன்
அசோசியேஷன் இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபை போன்ற ஏழு மாநிலங்களில் ஒன்று ராசல் கைமா. இங்கு தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆண்டுதோறும் விழா கொண்டாடி தமிழர்களிடையே ஒருங்கிணைப்பை ராசல்கைமா தமிழ்மன்றம் ஏற்படுத்தி வருகிறது. அதுபோல இவ்வாண்டும் முப்பெரும் விழாவை நடத்துகிறது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்திலிருந்து திரைப்பட இயக்குநர் உதயகுமார், நடிகர் கருணாஸ் அவரது மனைவி கிரேஸி கருணாஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

டோன்ஸ் அன்ட் டியூன்ஸ் இசைவிருந்து நடைபெறும்.

அமீரகத்தின் பலபகுதிகளிலிருந்தும் தமிழர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக இதன் அமைப்பாளர் பாரூக் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு 050 7994218, கமால் -050-7458771 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0220-ras-al-khaima-tamil-sangam-celebrate-mupperum.html

This post was submitted by muduvaihidayath.