துபாயில் தொழிலாளர்கள் போராட்டம்

துபாயில் 1800க்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். துபாயில் உள்ள போகாவோ கட்டுமான நிறுவனத்தில் ஆசிய நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் 1800பேர் தங்களுக்கு சம்பள உயர்வு கோரியும், இருப்பிடங்களில் வசதியை மேம்படுத்த கோரியும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் தரப்பில் ஒருவர் கூறுகையில் வேலைநிறுத்தத்தில 2,200க்கும் மேற்பட்டடோர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்


தொகுப்பாளர்: அதிரை புதியவன்