சவூதிக்கு புதிய இந்தியத் தூதர்

ஜெட்டா: சவூதி அரேபியாவின் ஜெட்டாவுக்கான இந்தியத் தூதராக (Consul General) சயீத் அகமது பாபா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் வரும் ஜூலை 2ம் தேதி ஜெட்டாவில் அவர் பதவியேற்பார்.

1988ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த இவர், மேற்குவங்க மாநிலத்தில் பணியாற்றி வந்தார். தற்போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ்ஸின் தனிச் செயலராக உள்ளார்.

தனது புதிய பதவி குறித்து கருத்து தெரிவித்த சயீத் அகமது, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்தீரிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவதே என் முதல் நோக்கம் என்றார்.

இந்திய-சவூதி இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார்.