கல்விக்கடன் ஒரே மாதத்தில் வழங்கப்படும் -ப. சிதம்பரம்

கல்விக்கடன் ஒரே மாதத்தில் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது :

பொதுத் துறை வங்கிகளுக்கு கல்விக்கடன் வழங்க 15 முதல் 30 நாட்கள் தேவைப்படுகிறது.அதே சமயம் கல்விக்கடனை இணைய தளம் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் பொதுத் துறை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)